Wednesday, May 6, 2026

அப்போதே ஒழிந்து போயிருக்கலாமே ராகுல்

 


இந்திய அரசியல் எத்தனையோ கேவலமான காட்சிகளை பார்த்துள்ளது. புதிதாக பார்த்த கேவலம் காங்கிரஸ் கட்சி, தவெக கூட்டணிக்கு தாவியது.

திமுக கூட்டணியில் பல வருடங்கள் இடம் பெற்று, அக்கூட்டணியின் பலத்தால் மக்களவையில் எம்.பி, க்களை பெற்றீர்கள். உங்கள் கட்சித் தலைவர்களே உங்களை பிரதமர் வேட்பாளர் என்று கருத தயாராக இல்லாத போது மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

இந்த சட்டசபைத் தேர்தலில் இந்த கூட்டணியில் இடம் பெற உங்களுக்கு ஏனோ விருப்பமில்லை.  குரங்கு குட்டியை வைத்து ஆழம் பார்த்தது போல உங்கள் நண்பர் மாணிக்கம் தாகூரை  கலகம் செய்ய வைத்தீர்கள். மேலிடச் சில்லறைகள் பிரவீண் மற்றும் கோவா டுபாக்கூரை வைத்து சீன் போட்டீர்கள்.

ஆட்சியதிகாரத்தில் பங்கு தருவதாக விஜய் சொன்னதால் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலைந்தீர்கள். 

கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களிலிருந்தும் உங்கள் கட்சி துடைக்கப்பட்டு விட்டது. கர்னாடகத்தில் நடக்கும் கோஷ்டி மோதலால் அடுத்த தேர்தலில் ஆட்சியை பறி கொடுப்பீர்கள்.

பாஜகவுடன் வைத்துக் கொண்டுள்ள கள்ள உறவால் கேரளாவில் ஜெயித்துள்ளீர்கள். முதலமைச்சர் போட்டியே உங்களை வீழ்த்தும்.

இப்படிப்பட்ட நிலைமை உள்ள போது உங்கள் வலிமைக்கு மீறி சீட்டுக்களை கேட்டீர்கள், அதிலே வெற்றியும் பெற்றும் 28 சீட்டுக்களை பெற்றீர்கள். கூட்டணி இல்லாமல் உங்கள் கட்சியால் அந்த ஐந்து எம்.எல்.ஏ க்களை பெற்றிருக்க மாட்டீர்கள். 

கூட்டணியின் தயவால் பெற்ற அந்த ஐந்து எம்.எல்.ஏ க்களை இப்போது விஜய்க்கு கை மாற்றிக் கொடுப்பது மிகவும் கேவலம். கொஞ்சம் கூட நெறிமுறையற்ற செயல்.

தேர்தலில் வாக்காளர்களின் விரல்களில் வைத்த மையை அவர்களின் முகத்தில் பூசியுள்ளீர்கள். அவர்கள் அளித்த வாக்குக்கு எதிராக செயல்பட்டுள்ளீர்கள். 

ஒன்றும் தெரியாத பப்பு என்று உங்களை சொல்வார்கள். நீங்கள் பப்பு அல்ல, அமித்ஷா போல ஆபத்தான கிரிமினல்.

தேர்தலில் வெற்றி பெற்றவர்களை இப்போது விஜய்யிடம் விற்பதற்கு பதிலாக அப்போதே கூட்டணியை விட்டு வெளியேறி விஜய் கட்சியோடு கூட்டணி வைத்திருக்கலாம். 

அப்படி செய்திருந்தால் முடிவுகளே கூட மாறி இருக்கலாம்.

உங்களை தமிழ்நாடு இனி துரோகி என்றே பார்க்கும்.

4 comments:

  1. இத்தனை நாள் அடுத்தவன் குதிரை மேல் சவாரி செய்தார்கள், இப்பொழுது கழுதை மேல் சவாரி செய்ய போகிறார்கள் அவ்வளவுதான், இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. Indira was a corrupt but strong leader.
    Rajiv was a corrupt leader.
    Pappu keeps betraying his friends, not fit to be a leader.
    Hopefully Rahul and Priyanka tharkuris never become PM.

    ReplyDelete