Friday, September 6, 2019

ஏதோ நம்மால் முடிந்தது . . .

நேற்று மாலை ஆறு மணி அளவில் காட்பாடி சென்றிருந்தேன். காட்பாடி வேலூர் பாலாறு மணற்பாலத்தைக் கடக்கையில் சூரிய அஸ்தமனம் அவ்வளவு அழகாக இருந்தது.

உடனே வண்டியை நிறுத்தி அக்காட்சியை என் அலைபேசியில் பதிவு செய்து கொண்டேன்.


புகைப்படம் எடுத்து புறப்படும் வேளையில் கவனித்தால் எனக்குப் பின்பாக ஏழெட்டு பேர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள், சிலர் சூரியனோடு செல்ஃபியும் கூட.

ஏதோ நம் செய்கை இன்னும் சிலரை அழகை ரசிக்க வைத்தது என்ற நிறைவோடு புறப்பட்டேன்.

அப்படி பலரையும் ஈர்த்த காட்சி கீழே  . . .



No comments:

Post a Comment