Saturday, June 18, 2016

முதல்ல அவனை புடிச்சு உள்ளே போடுங்க சார்




சங்கீத் சோம்

பாரதீய ஜனதா கட்சியின் வெறி பிடித்த மிருகங்களில் முதன்மையானவன். மதவெறி விஷத்தை கக்கிக் கொண்டே இருக்கும் கொடிய நச்சுப் பாம்பு .

போலி வீடியோ தயார் செய்தும் ஜாதிய பஞ்சாயத்துக்களில் வெறியை தூண்டி விட்டு  முசாபர்நகர் கலவரங்களுக்கு காரணமாக இருந்து அக்கட்சியின் பிரதம கொலைகாரர் கையால் மலர் கீரிடமும் பொன்னாடையும் அணியப் பெற்றவன்.

மாட்டுத்தோலையும் இறைச்சியையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலை நடத்திக் கொண்டே தாத்ரியின் முதியவரை மாட்டுக்கறி வைத்திருந்தார் என்று சொல்லி அடித்துக் கொன்ற முட்டாள் கூட்டத்தின் தலைவன்.

தேர்தல் ஆதாயத்திற்காக ஹிந்துக்கள் குடும்பம் கைரோனா என்ற இடத்தை விட்டு வெளியேறி விட்டன என்று பதட்டத்தை உருவாக்கப் பார்த்தான் இவன் கூட்டாளி ஒருவன். அது அபாண்டமான பொய் என்று அம்பலமானதால் அவனே பல்டி அடித்து விட்டான்.

வெளியேறிய குடும்பங்கள் இருபது நாட்களுக்குள் மீண்டும் வராவிட்டால் இருக்கு கச்சேரி என்று மிரட்டியுள்ளான். அடுத்த வருட தேர்தலில் ஆதாயம் தேட இப்போதே அச்சாரம் போடுகிறான், முதலில் பிரச்சினையை எழுப்பியவனே பல்டி அடித்து விட்டாலும் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று பாஜக கட்சி அவனுக்கு ஜால்ரா அடிக்கிறது. 

அகிலேஷ் யாதவ் அரசின் கையாலாகததனமே இவர்களின் அத்தனை சேட்டைகளுக்கும் உரமளிக்கிறது. இருக்கிற சொற்ப காலத்திலாவது அந்த அரசு உறுதியோடு செயல்பட்டு சங்கீத் சோம் வகையறாக்களை சிறையில் அடைத்து அமைதியைக் காக்க வேண்டும். அதைச் செய்யத் தவறினால் முசாபர்நகர் போல இன்னொரு கலவரம் வெடிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.



 

3 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. யாருடா நீ அசிங்கமானவனே?

      Delete
  2. இவரைப் போல பலரைப் பிடித்து உள்ளே அனுப்பவேண்டியுள்ளது.

    ReplyDelete