Wednesday, February 19, 2014

மரணப் போராட்டம் முடியட்டும் இன்றோடு



ஒரு நாளிலே
எல்லாம் மாறியது.

வருடங்கள் பலவாய்

துரத்தி வந்த

தூக்குக் கயிறு

மறைந்து போன

அதே நேரத்தில்

விடுதலை கீதமும்

ஒன்றாய் ஒலித்தது.



கம்பி சூழ் அறையிலிருந்து

ஆழி சூழ் அகண்ட உலகிற்க்கு

வரத்தான் எத்தனை ஆண்டுகள்?

எத்தனைப் போராட்டங்கள்?

இவர்களின் கண்ணிற்கு
மட்டும் தெரியாமல்
இருபது வருடங்களாய்

ஒவ்வொரு நாளும்
சூரியன் உதித்தது
மாலையில் மறைந்தது.

மரண தண்டனைக்கு
மரணம் தர 
இனியாவது
ஆட்சியாளர்கள்
மனம் மாறட்டும்.

வாழ்விற்கும் மரணத்திற்கும்
இடையேயான
நிச்சயமற்ற போராட்டம் 
இன்றோடு முடியட்டும்.


No comments:

Post a Comment