Thursday, November 24, 2011

அடுத்து அறை வாங்கப் போவது யார்?


மத்திய விவசாய அமைச்சர் சரத் பவாரை  ஒரு இளைஞரை 
கன்னத்தில் அறைந்துள்ளார். அவர் ஒரு ஊழல் பேர்வழி 
என்பது  அறைக்கான காரணம். பல அமைச்சர்களுக்கும் 
இது போன்ற வைத்தியம் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக 
அவர் கூறியுள்ளார். 




இது ஏற்புடையதா என்ற விவாதத்திற்கு நான் செல்ல 
விரும்பவில்லை. இது போல நடப்பது  சரியல்ல என்று 
உதடு சொன்னாலும்  இவர்களுக்கு நன்றாக இப்படி 
கொடுப்பதுதான் சரி என்று  உள்ளம் சொல்லும். 
ஒவ்வொருவருடைய மனசாட்சியும்  இதை 
ஒப்புக்கொள்ளும்.




ஊழலுக்காக மட்டும்  அறை கொடுப்பது சரியல்ல. 
நாட்டின் சொத்துக்களை பன்னாட்டு முதலாளிகளுக்கு
தாரை வார்ப்பது. ஏழை மக்களை கண்ணீரில் தவிக்க
விட்டு செல்வந்தர்களுக்காக  பாடுபடுவது, ஜாதிய,
மத உணர்வுகளைத் தூண்டி மக்களைப் பிரிக்க 
நினைப்பது, சுய லாபத்திற்காக கலவரங்களை 
தூண்டுவது, சர்வதேச அனுபவங்களைப் பொருட்படுத்தாமல்
இந்திய நிதித்துறையை பன்னாட்டு நிதி மூலதனம் 
சூறையாட அனுமதிப்பது, கோடிக்கணக்கான 
சில்லறை வணிகர்களை  காவு கொடுத்து  அந்நிய
பகாசுர நிறுவனங்களை  அனுமதிக்க முயல்வது என
பல்வேறு காரணங்களுக்காக  பலரும் அறை வாங்க
தகுதியானவர்கள். 


மன்மோகன்சிங், அத்வானி, நரேந்திர மோடி, பிரணாப் 
முகர்ஜி, மம்தா பானர்ஜி, ப.சிதம்பரம், என பலரும் 
அறை வாங்க தகுதியானவர்கள்தான்.    

4 comments:

  1. நான் என்ன ஆயுதம் தரிக்க வேண்டும் என்பதை என் எதிரியே தீர்மானிக்கிறான்... என்ற வாசகம் நினைவுக்கு வந்தாலும்... எப்படி இந்தளவு நடக்க அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை... இது என்ன வகை டிராமாவோ என்று தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்

    ReplyDelete
  2. //
    மன்மோகன்சிங், அத்வானி, நரேந்திர மோடி, பிரணாப்
    முகர்ஜி, மம்தா பானர்ஜி, ப.சிதம்பரம், என பலரும்
    அறை வாங்க தகுதியானவர்கள்தான்.

    அவர்கள் செய்த தவறுகளுக்கு ஒரு அறை மட்டும்தானா?

    ReplyDelete
  3. என்ன தோழர் ஆனந்த் அண்ணா ஹசாரே போலவே கேட்கின்றீர்களே?

    ReplyDelete
  4. THERE ARE MANY IN THE HIT LIST. KARUNANIDHI, STALIN, AZHAGIRI, ETC. PLEASE UPDATE THE LIST FULLY.

    ReplyDelete