Monday, November 21, 2011

அப்ப எல்லாத்தையும் பதுக்கியாச்சா, அத்வானி அண்ணாச்சி?




இன்று காலை அனைத்து நாளிதழ்களிலும்  அண்ணன் அத்வானியின்
வீர முழக்கம்தான். பாஜகவின்  அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும்
தங்களுக்கு  வெளிநாடுகளில் சொத்தோ வங்கிக் கணக்கோ இல்லை என்று  மக்களவை சபாநாயகரிடமும் மாநிலங்களவை தலைவரிடமும் அறிக்கை  அளிக்கப் போகின்றார்களாம்.


உத்தம புத்திரர்களாக  அத்வானி முழங்கியதைப்  படித்ததும் உடனே 
எனக்கு   தோன்றிய     கேள்விதான் இது! 


அப்ப  எல்லாத்தையும் பதுக்கியாச்சா, அத்வானி அண்ணாச்சி? 




எட்டியூரப்பா கைது, சுக்ராம் சிறைத் தண்டனை - இதற்குப் பிறகும்
இப்படி கூற உண்மையிலேயே  அத்வானிக்கு தைரியம் அதிகம்தான்.
வெளி நாட்டில் இருந்த சொத்துக்களை பாஜகவினர் பத்திரமாக
உறவினர்கள், பினாமி பெயர்களில் இத்தனை நேரம் மாற்றி
இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் அத்வானி கூறி விட்டார்.


ஆனால் அத்வானி அண்ணாச்சி கொஞ்சம் ஜாக்கிரதையாக
இருங்கள். உங்கள் கட்சிக்காரர்களுக்கு அவ்வளவு சாமர்த்தியம்
பத்தாது.


தொலைக்காட்சி காமெரா முன் பணம் வாங்கிய   தலைவர்
பங்காரு லட்சுமணன்,



கையில் மதுக்கோப்பையோடு கடவுளை விட பணம்தான்
சிறந்தது என்று சொன்ன ஒரு மத்திய அமைச்சர் ( பெயர்
நினைவிற்கு வரவில்லை) 


அடுத்தவன் மனைவியை தன் மனைவி என்று சொல்லி
வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல பணம் வாங்கிய 
நாடாளுமன்ற உறுப்பினர். 


நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கி
மாட்டிக் கொண்ட எம்.பி க்கள்,


மெத்தைக்குள்   பணத்தை  பதுக்கி  வைத்த  சுக்ராம் 


என ஏராளமான அசடுகள்   உங்கள்   கட்சியில் 
உள்ளார்கள். எனவே பார்த்து அறிக்கை விடுங்கள்.
மீண்டும் அசிங்கப்பட்டு அசடு வழியாதீர்கள். 
படத்தில் உள்ளது போல தலை சொறிந்து
கொண்டு  நிற்காதீர்கள்.


 

1 comment:

  1. அதான் சுவிஸ் வங்கியே சொல்லி விட்டதே.. அங்கே யாருடைய காசும் இப்ப இல்லியாம்

    ReplyDelete