Saturday, August 23, 2025

அரசியல் காரணமெனில் ஆளுனருக்கு அருகதையில்லை

 


நேற்று காலை ஆங்கில இந்துவில் வெளியான செய்திதான் மேலே உள்ளது. 

ஜனாதிபதி, ஆளுனர்கள் மசோதா மீது முடிவெடுக்க கால அவகாசம் நிர்ணயம் செய்வதற்கு எதிராக ஜனாதிபதி கருத்து கேட்பது என்ற அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஒரு வாதம் வைக்கிறார்.

"அரசியல் காரணங்களுக்காகவோ அல்லது வேறு ஜனநாயகக் காரணங்களுக்காகவோ ஒரு ஆளுனர் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க கால தாமதம் செய்யலாம்."  என்று அவர் ஆளுனர்களை நியாயப் படுத்துகின்றார்.

ஆளுனர் என்பவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர், அரசியல் சாசனத்திற்கு மட்டுமே விசுவாசமாக இருக்க வேண்டியவர். அரசியல் காரணத்திற்காக அவர் மசோதாவுக்கு ஒப்புதல் கொடுக்க தாமதிக்கிறார் என்றால் அவர் அந்த பதவிக்கு அருகதையே இல்லாதவர்.

அப்படிப்பார்த்தால் எதிர்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆளுனர்கள் அனைவரும் அந்த பதவிக்கு அருகதையற்ற பொறுப்பற்றவர்கள்.

அப்படிப்பட்ட ஆட்களை துரத்தி விடவும் உச்ச நீதிமன்றம் ஏதாவது வழி செய்தால் நல்லது. . . .



No comments:

Post a Comment