அடித்து விடுவது என்று முடிவெடுத்தால் சங்கிகள் போல அளந்து விட யாரும் இல்லை.
மகா கும்பமேளா என்ற பெயரில் உலாவும் கதைகளைத்தான் சொல்கிறேன்.
இதுவரை 45 கோடி மக்கள் வந்ததாக சொல்கிறார்கள். 55 கோடியை கடக்கும் என்று கணக்கு போடுகிறார்கள். அப்படியென்றால் இந்திய மக்கட்தொகையில் கிட்டத்தட்ட முப்பத்தி எட்டு சதவிகிதம் அலகாபாத் போயிருக்க வேண்டும்.
அப்படியென்றால் விமானங்களும் ரயில்களும் பேருந்துகளும் எத்தனை பயணிகளை அங்கே அழைத்துச் சென்றன என்ற விபரத்தை தருவார்களா?
எத்தனை பேர் நெரிசலில் சிக்கி இறந்தார்கள் என்ற கணக்கே இல்லாத ஆட்சியாளர்கள் இவர்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது.
7500 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டது என்று சொல்கிறார்கள். அது ஒரு வேளை உண்மையாக இருக்கலாம். 7500 கோடிக்கு கணக்கும் இருக்கலாம்.
ஆனால் அந்த ரெண்டரை லட்சம் கோடி ரூபாய் வருமானம் வந்தது என்பதில்தான் சங்கிகளின் அளப்பு மேனியா வெளிப்படுத்துகிறது, எங்கிருந்து வந்தது அந்த தொகை? யாருக்கு சென்றது?
அலகாபாத் கோயில்களில் உண்டியலில் விழுந்த தொகையா? (தட்டில் விழும் தட்சணை கணக்கில் வராது? குளிக்க வந்தவர்கள் தங்க, சாப்பிட செலவழித்த தொகையா? கரையிலிருந்து சங்கமத்துக்கு ( 23 ஆண்டுகள் முன்பாக கான்பூர் போன போது அலகாபாத் போன போது சங்கமம் சென்று குளித்துள்ளேன். அந்த அனுபவத்தை பிறகு எழுதுகிறேன்). செல்வதற்கான படகுக் கட்டணமா? ரெண்டரை லட்சம் கோடி எப்படி வந்தது என்று சங்கி எகானமிஸ்டுகள் விளக்குவார்களா?
அடுத்த கதை ஒட்டு மொத்த உற்பத்தியில் 23 பில்லியன் டாலர் புகுத்தப்பட்டது.
23 பில்லியன் டாலர் என்றால் அது கிட்டத்தட்ட ரெண்டு லட்சம் கோடி ரூபாய்.
ரெண்டரை லட்ச ரூபாய் வருமானம் என்றால் அது எல்லாமுமே ஒட்டு மொத்த உற்பத்தி கணக்கில் சேர வேண்டுமே! அதிலே ஒரு ஐம்பதாயிரம் கோடி ரூபாய் துண்டு விழுகிறதே! அந்த துண்டை யாருக்கு போர்த்தினார் மொட்டைச்சாமியார்?
இப்படியெல்லாம் கேள்வி கேட்பதால்தான் அந்த அயோக்கிய சங்கி படித்த நடுத்தர மக்களை திட்டுகிறார்.
No comments:
Post a Comment