பொதுவாகவே பட்ஜெட் என்பது ஒரு ஏமாற்று வேலைதான். அதனால்தான் பட்ஜெட் தயாரிப்பின் முதல் சடங்காக "அல்வா தயாரிப்பது" என்று வைத்துள்ளார்கள்.
இந்த வருடம் 12 லட்சம் ரூபாய் வரை வருமான வரி இல்லை என்ற மோசடியான தோற்றம் தரப்பட்டுள்ளது.
நாம் வாங்கும் ஊதியத்தில் 12 லட்சம் ரூபாய் வரை வரி கிடையாதோ, அதற்கு மேல் வாங்கும் தொகைக்குத்தான் வரியோ என்று அப்பாவித்தனமாக நினைத்தவர்கள் சிலர்.
ஆனால் நிர்மலா சீத்தாராமன் ஒன்று அவ்வளவு நல்லவர் கிடையாது.
12 லட்சம் ரூபாய் ஊதியம் வாங்குபவர்களுக்குத்தான் வரி கிடையாது. ஸ்டாண்டர்ட் டிடெக்சன் என்று அளிக்கப்படும் 75,000 யும் சேர்த்து அதற்கு மேல் ஊதியம் வாங்கினால் கண்டிப்பாக வரி உண்டு.
அதனால் வேண்டுமானால் ஒன்று செய்யலாம்.
அரசிடமோ நிர்வாகத்திடமோ சொல்லி மாத ஊதியத்தை ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் உயர்த்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளலாம்.
ஊதிய உயர்வு கொடுக்கத்தான் நிர்வாகத்திற்கு பிடிக்காது. அதனால் இந்த கோரிக்கை மகிழ்ச்சியோடு ஏற்கப்படும்.
அதனால் வருமான வரி பிடித்தத்தை தவிர்த்து விட்டதாக மகிழ்ச்சி அடைகிறீர்களா?
அப்படியெல்லாம் அவசரப்பட்டு மகிழ்ச்சியடையாதீர்கள்.
முன்னமே சொன்னது போல நிர்மலா அம்மையார் ஒன்றும் அவ்வளவு நல்லவரில்லை.
ஜி.எஸ்.டி யை ஏற்றி அந்த பணத்தை பறித்து விடுவார்.
No comments:
Post a Comment