Thursday, October 19, 2023

பாவிகளே, படுபாவிகளே

 

பாலஸ்தீனத்தில் ஒரு சிறுவன் எழுதி வைத்துள்ள உயில் கீழே உள்ளது. தன்னிடம் உள்ள செருப்பை கூட யாருக்காவது கொடுத்து விடுங்கள் என்று சொல்லும் அளவிற்கு வாழ்வின் மீது அவநம்பிக்கையுடனும், அதை கழுவிக் கொடுங்கள் என்று சொல்லும் அளவிற்கு பொறுப்புடனும் அச்சிறுவன் இருக்கிறான். அவன் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசையும் கூட. 


ஆனால் அது சாத்தியமா?

நீ வயதானவுடன் என்னவாகப் போகிறாய் என்ற கேள்விக்கு இன்னொரு பாலஸ்தீன சிறுவனின் பதில் "நான் பெரியவனாகும்வரை  என்னை இஸ்ரேல் உயிரோடு விட்டு வைக்காது" சொன்னது மனதை கலங்க வைத்து விட்டது.

ஒரு இனத்தையே அழிக்கும் இஸ்ரேலையும் அவர்களுக்கு துணை நிற்பவர்கள் அனைவரையும் "நாசமாகப் போவீர்கள் பாவிகளே" என்றுதான் சாடத் தோன்றுகிறது. இரக்கமில்லாத கொடூரர்கள் இவர்கள் . .


No comments:

Post a Comment