Thursday, October 13, 2016

புதுகை வலைப்பதிவர் விழா - தரத்தின் சான்றாய்

ஒவ்வொரு நாளும் முக நூல் நினைவு படுத்துகிறது.

கடந்த வருடம் மிகச் சிறப்பாக நடைபெற்ற வலைப்பதிவர் விழா தொடர்பாக பதிவு செய்தவற்றை நினைவு படுத்துகிறது. 

மறக்க முடியாத அந்த இனிய விழா குறித்து எழுதிய பதிவுகள் குறித்து வலைப்பக்கத்தில் எழுதியதை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்தேன். அத்தனை பதிவுகளையும் மீண்டும் இங்கே அளிக்க வேண்டும் என்று தோன்றியது. 

ஆகவே 









இதிலே கடைசி பதிவையும் அது தொடர்பான பின்னூட்டங்களையும் படிக்கையில் கண்ணிலே துளிர்த்த நீரை மறைக்க இயலவில்லை. அனைவருக்கும் நினைவுப் பரிசுக்களை அன்போடு வழங்கிய கவிஞர் வைகறை அவர்களின் மறைவு ஒரு பெரிய இழப்பு.

விழா குறித்து எனது வலைப்பக்கங்களில் பகிர்ந்து கொண்ட பல புகைப்படங்களையும் மீண்டும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இறுதியாய் ஒன்றைச் சொல்லியே ஆக வேண்டும். புகைப்படங்களை பார்த்த பின்பு அதையும் அவசியம் படித்து விடுங்கள்.




























இது என்னவென்று நினைவில் உள்ளதல்லவா?

 

ஆம். வலைப்பதிவர் விழாவில் கொடுக்கப்பட்ட பை. கடந்த ஒரு வருடமாக அலுவலகத்திற்கு எடுத்துச் செல்கிறேன். ஒவ்வொரு நாளும் புதுகை விழாவை நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறது. ஒரு வருடம் ஆன பிறகும் கொஞ்சமும் சேதாரமின்றி அப்படியே உள்ளது. 

புதுகை வலைப்பதிவர் விழாவின் தரத்தை அங்கே அளிக்கப்பட்ட அந்த நினைவுப்பரிசும் உணர்த்திக் கொண்டே இருக்கிறது. 





 

3 comments:

  1. உண்மையில் மறக்க முடியாத நிகழ்வு. அந்தப் பையை நானும் உபயோகித்துக் கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  2. வணக்கம் ..மீண்ட நினைவலைகள்..இனிய விழாவை கண்முன் கொண்டு வந்தது...இன்று தான் நான் ஓவியங்களைப்பார்த்தேன்..வேலையில் கவனிக்க முடியவில்லை....வைகறையின் இழப்பு எங்களை வலைப்பதிவர் விழாவை மனம் கனக்க செய்கின்றது...நன்றி சார்..

    ReplyDelete
  3. ஐயா இந்த வருடம் ?

    ReplyDelete