Thursday, October 20, 2016

கொள்ளைப் பணம்தானே. அள்ளி விடலாம்





சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ள இரண்டு செய்திகள்.

திருவண்ணாமலை கோயில் வாசலில் அமர்ந்திருந்த பிச்சைக்காரர்கள் தட்டில் ஆயிரம் ரூபாய் நோட்டை அள்ளி வீசிய ஜின்டால் குடும்பம்.

நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் மகனின் திருமணத்தை நடத்தவுள்ள முன்னாள் கர்னாடக அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி. அழைப்பிதழ் பெட்டியைத் திறந்தால் LED திரையில் சினிமா காட்சி போல பாடல், நடனம், சீன் etc, etc.

பல் உள்ளவன் பக்கோடா சாப்பிடுகிறான் என்று ஒரு வரியோடு ஒதுங்கிப் போகிற விஷயமில்லை.

இத்தனை ஆடம்பரத்திற்கு இவர்களுக்கெல்லாம் எங்கிருந்து வந்தது பணம்?

நிலத்தில் பாடுபட்டு வியர்வை சிந்தி உழைத்த பணமா? அலுவலகத்தில் அமர்ந்து பணி செய்த பணமா? நேர்மையாய் முதலீடு செய்து நியாயமாய் வந்த லாபமா?

அப்படி கஷ்டப்பட்டு வந்த பணமாக இருந்தால் ஆடம்பரமாய் விரயம் செய்ய மனம் வராது.

ஜின்டால் நிறுவனத்திற்கு ஒரு நோக்கம் இருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்து மலைகளை வெட்டி தொழில் நடத்த வேண்டும். அங்கே மக்கள் எதிர்ப்பு இருக்கிறது. தாங்கள் மிகவும் நல்லவர்கள் என்ற பிம்பத்தை உருவாக்க, இவர்கள் தொழில் நடத்தினால் அள்ளி அள்ளித் தருவார்கள் என்ற தோற்றத்தை உருவாக்க நடத்திய சீப் பப்ளிசிட்டிதான் பிச்சைக்காரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நோட்டை அள்ளி வீசியது.

கர்னாடக மாநிலத்தின் சுரங்கங்களை சுரண்டி எடுத்து அரசாங்கத்தையும் ஏமாற்றிய பணம்தான் LED திரையில் நடனமாடுகிறது.

நாட்டையும் மக்களையும் கொள்ளையடித்த பணத்தில்தான் இவர்களது ஆடம்பர, ஊதாரித்தன செலவுகள் செய்யப்படுகிறது.

அந்த ஆடம்பரத்தின் பிரம்மாண்டத்தில் மயங்கி விடாமல் அதன் பின்னே உள்ள ஊழல் நாற்றத்தை மறந்து விட வேண்டாம்.

2 comments:

  1. Only in India , one can see such a low level of rich people. Nobody understands that you cannot please god with money. You cannot send one container with 500 cr to god and ask him to allow me to breath oxygen without artificial respirator for one month.

    ReplyDelete
  2. i recollect one french story MIDAS AND THE GOLD
    the very rich man touches evrything and it turns GOLD....
    so the food items dresses bed all turn into gold making his life MISERABLE

    ReplyDelete