Sunday, January 31, 2016

மோடி அரசின் நாய்ப் பாசம்



குரங்கிலிருந்து உருவானவன் மனிதன் என்பது சார்லஸ் டார்வினின் பரிணாம விதி.

ஆனால் பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டும் நாயிலிருந்து உருவானவர்கள் போல!

ஏனென்றால் அவர்கள் நாய்களோடு அவ்வளவு பின்னிப் பிணைந்துள்ளார்கள்.

நாய்கள் இல்லாமல் அவர்களால் எந்த உதாரணமும் சொல்ல முடிவதில்லை.

குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்டவர்களை நாயின் மகனாக வர்ணித்தவர் மோடி.

ஹரியானாவில் எரித்துக் கொல்லப்பட்ட இரண்டு இளம் தளிர்களை நாய்கள் என சொன்னார் வி.கே.சிங் என்ற அநாகரீக மனிதர். 

பாதுகாப்புத்துறையை "டாபர்மேன்" நாய் என்று சொல்லியுள்ளார் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிகர். அவ்வளவு சிறப்பாக காவல் காப்பவர்கள் என்ற அர்த்தத்தில் சொன்னால் கூட பரவாயில்லை என்று ஏற்றுக் கொள்ளலாம். கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாவிட்டால் அது நம்மை கடித்து விடும் என்றுதான் சொல்கிறார். 

இப்படி எல்லாவற்றையும் நாயோடு ஒப்பிடுவதால்தான் பாஜக காரர்கள் நாய்களிலிருந்து உருவானவர்களோ என்று சந்தேகம் வருகிறது.


 

1 comment:

  1. நாய்க் குணம் உள்ளவர்கள்

    ReplyDelete