Thursday, November 21, 2013

சின்ன கவுண்டர் போலவே நிஜத்திலும்

திரைப்படக் காட்சியை பார்த்து சமூகத்தில் மோசமான நிகழ்வுகள்
நடக்கிறதா இல்லை சமூக நிகழ்வுகள் திரைப்படக் காட்சிகளாக
மாறுகிறதா என்ற விவாதம் தொடர்ந்து நடைபெறுகிறது.

சின்னக் கவுண்டர் திரைப்படத்தில் ஒரு முக்கியமான காட்சியாக
குளத்தில் விஷம் கலந்து மீன்கள்  இறந்து போவது  இருக்கும்.

அது வெறும் திரைப்பட காட்சியாக மட்டும் இப்போது இல்லை.

வேலூரை அடுத்த அலமேலுமங்காபுரத்தில் ஒரு நிலப் பிரச்சினை.
அதனால்  பிரச்சினைக்குரிய நிலத்தின் மீது உரிமை கொண்டாடிய
நபர் அங்கே இருந்த மீன் வளர்ப்புக் குளத்தில் விஷம் கலந்து விட
அந்த குளத்திலிருந்த அத்தனை மீன் களும் இறந்து போய் விட்டன.

நான்கு டன் அளவிற்கு மீன்கள்  இறந்து போயுள்ளது. எந்த அளவு
வன்மமும் வக்கிரமும் மனதில் இருந்திருந்தால் இப்படி ஒரு
கொடூரத்தை அந்த மனிதன் செய்திருப்பான்!

இப்போது கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கிறான்.

1 comment:

  1. நிலத்தின் மீது உரிமை கொண்டாடிய நபர் அங்கே இருந்த மீன் வளர்ப்புக் குளத்தில் விஷம் கலந்து விட அந்த குளத்திலிருந்த அத்தனை மீன் களும் இறந்து போய் விட்டன. நான்கு டன் அளவிற்கு மீன்கள் இறந்து போயுள்ளது. எந்த அளவு
    வன்மமும் வக்கிரமும் மனதில் இருந்திருந்தால் இப்படி ஒரு
    கொடூரத்தை அந்த மனிதன் செய்திருப்பான்!
    இப்படி நடந்ததுஅறிந்ததில்லை சின்ன கவுண்டர் படம் தெரியாது தகவலுக்கு நன்றி

    ReplyDelete