Monday, November 18, 2013

எங்களூரிலும் கூட..........



முதல்வர் வருகையின்
முதல் நாள்  போல
துடைத்தெடுத்த சாலை.

அருவியின் சாரலாய்
தொடரும் தூவானம்.

ஊட்டியின் குளுமை
ஊரெங்கும்.

பணிகள் நின்றாலும்
இதயத்தில் நிறைவு.

முனை மழுங்கிப் போன
சூரியக் கதிர்கள்.

ஆடைகள் நனைந்தாலும்
அதிலொரு இன்பம்.

இங்கேயும் உண்டு
என்றொரு பெருமையும்
உண்டு.

இன்னும் இன்னும்
வேண்டும் என்று
ஏக்கமும் உண்டு.

வாராது வந்த மாமணியால்
வார்த்தைகள் முன்பின்னாய்
மாறிப் போனாலும்
கவிதையைக் கைபிடித்து
கண்டிப்பாய் கூட்டி வரும்
மழை.

No comments:

Post a Comment