Thursday, December 27, 2012

எவ்வளவு பேர் வயிறெரிகிறார்களோ?





இந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது தோழர் டி.செல்வராஜ் அவர்கள் எழுதிய “தோல்” நாவலுக்கு கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி. தோல் பதனிடும் தொழிலாளர்களின் வாழ்வை, வலியை, போராட்டங்களை செய்துள்ள இந்த நாவலுக்கு விருது கிடைத்துள்ளது மனதிற்கு இதமாக உள்ளது.

தோழருக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

இந்த ஆண்டு விருது தோழர் டி.செல்வராஜ் அவர்கள் பெறுகிறார்.

கடந்தாண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் – கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் சு.வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம் நாவலுக்கு கிடைத்தது.

அதற்கு இரு ஆண்டுகள் முன்பாக தமுஎகச வின் இன்னொரு முக்கிய பொறுப்பாளர் தோழர் மேலாண்மை பொன்னுசாமியின் மின்சாரப்பூ சிறுகதை தொகுப்பிற்கு கிடைத்தது.

நான்கு ஆண்டுகளில் மூன்று விருதுகள், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் பொறுப்பாளர்களுக்கு, இன்னும் தெளிவாக சொல்லப்போனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களுக்கு கிடைத்துள்ளது.

இதைப் பார்த்து எத்தனை பேர் வயிறெரியப் போகின்றார்களோ? வசை பாடப் போகின்றார்களோ?  எத்தனை பேர் அபத்தத்தையும் நச்சையும் கக்கப் போகின்றார்களோ?  சண்டைகள், சர்ச்சைகள் இல்லாவிட்டால் அது  தமிழ் இலக்கிய உலகே கிடையாதே?


1 comment:

  1. How much (left) lobby played in this game?

    ReplyDelete