Tuesday, December 11, 2012

பரபரப்பு செய்திகளுக்கு பலியானவர்கள்



வெளிநாட்டு பத்திரிக்கையாளர்களுக்கு 
இங்கிலாந்து அரச குடும்பத்து செய்திகள்
மீது அப்படி என்ன மோகமோ?

இந்த மோகத்தால்தான் அன்று 
டயானாவை துரத்தி 
சாகடித்தார்கள்.

இன்று இன்னொரு பெண்ணை
தற்கொலை செய்ய வைத்து விட்டார்கள்.

இங்கிலாந்து இளவரசி கருத்தரிப்பது
என்பது அவ்வளவு முக்கியமான
செய்தியா?

இல்லை மறைக்கக் கூடிய செய்தியா?

அதை முன் கூட்டி தெரிந்து கொண்டு
என்ன கிழித்தார்கள்?

குரல் மாற்றிப் பேசிய இரண்டு
ரேடியோ ஜாக்கிகளை பணி நீக்கம்
செய்து விட்டு அந்த ரேடியோ தன்னை
உத்தமராகக் காட்டிக் கொள்கிறது.

இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தும்
அதுதானே உண்மையான குற்றவாளி?

ஊடக தர்மம் என்பதை இன்றைய
ஊடகங்கள் கெட்ட வார்த்தையாக
நினைக்கின்றன.

இந்தப் போக்கு  மாறாதவரை 
பலிகள் நடந்து கொண்டுதான்
இருக்கும்.... 

No comments:

Post a Comment