Tuesday, November 13, 2012

தீபாவளிக்காக கருணை செய்த அம்மாவின் தாயுள்ளம்

இன்று காலை வழக்கம் போல  ஐந்தே முக்காலுக்கு எழுந்த போது
மனதிற்குள் சின்ன நப்பாசை ஏற்பட்டது. 

தீபாவளியின் காரணமாக இன்று முழுதும் மின்வெட்டே இருக்காது
என்று ஒரு பேராசை எழுந்தது. ஆனால் பதினைந்தே நிமிடங்களில்
அந்த நம்பிக்கை தகர்ந்து போய் விட்டது. வழக்கம் போல காலை
ஆறு மணிக்கு மின்சாரம் போயே போய் விட்டது. ஒன்பது மணிக்கு
வந்தது.

சரி இன்றும் வழக்கமான கதை போலதான் என்று நினைத்தால்
இதோ, இந்த நிமிடம் வரை மின்சாரம் போகவில்லை.

ஆகவே தீபாவளி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நீங்கள்
கண்டு களிக்க தொடர்ந்து மின்சாரம் அளித்துள்ள அம்மாவின்
தாயுள்ளத்தை போற்றி வணங்குங்கள்.

ஆனாலும் இந்தப் படங்கள்  பொருத்தமாகவே உள்ளது அல்லவா?
ஒன்று நான் தயார் செய்தது, இரண்டாவது முகநூலில் சுட்டது














1 comment:

  1. 'பவர் ஜெ' படம் செமை கிரியேட்டிவிட்டி.........
    இரட்டுற மொழிதல்-சிலேடைக்கு புகைப்படத்தில் உதாரணம் தர, மிக மிக பொருத்தமான படம் இது..!
    நன்றி சகோ.ராமன்.

    ReplyDelete