Tuesday, April 1, 2025

FIR ஏ இப்போதுதான் என்றால் ?????

 


கீழேயுள்ள செய்தியை முதலில் படியுங்கள்


குடியுரிமைச்சட்டத்திற்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்களை "வெட்டுங்கள், கொல்லுங்கள், சுடுங்கள்" என்றெல்லாம் வெறியூட்டி வடகிழக்கு டெல்லியில் கலவரத்தை தூண்டி 53 பேர் இறக்கவும் 900 க்கும் மேற்பட்டவர்கள் காயப்பட்டு கோடிக்கணக்கில் சொத்துக்கள் நாசமாக காரணமாக இருந்தவன் இந்த கபில் மிஸ்ரா. இன்னொருவன் அனுராக் தாகூர்.

கலவரத்தை நடத்தியதற்கு வெகுமதியாக அனுராக் தாகூர் மத்திய அமைச்சராகி விட்டான். கபில் மிஸ்ராவிற்கும் டெல்லி அமைச்சர் பதவி பரிசளிக்கப்பட்டு விட்டது.

கலவரத்தை தூண்டியதற்கு இப்போதுதான் கபில் மிஸ்ரா மீது FIR பதிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இனி வழக்கு பதிவு செய்து அதை நடத்தி தீர்ப்பு வருவதற்குள் அவன் டெல்லி முதல்வரானால் கூட ஆச்சர்யப்பட வேண்டியதில்லை.


அனுராக் தாகூர் மீது FIR ???

அதற்குள் அவன் பிரதமராகி விடுவான் . . .

No comments:

Post a Comment