Thursday, April 3, 2025

சென்னைக்கு வருகிறார் மார்க்ஸ்

 



 

ஆயிரமாண்டுகளின்
அதிசய மனிதன்.
வாக்களித்துச் சொன்னது
உலகம்.
 
நெருக்கடியில் சிக்கித்
தவித்தது
முதலாளித்துவ பொருளாதாரம்,
மீட்சிக்கான வழி தேடி
புரட்டிப் பார்த்தது
அதிசய மனிதன்
எழுதிய மூலதனத்தைத்தான்.
 
இழப்பதற்கு ஏதுமில்லை,
வெல்வதற்கோ
பொன்னுலகம் காத்திருக்கிறது.
 
இன்று வரை
தொழிலாளி வர்க்கம்
உயிர்த்திருக்கும்
உன்னத முழக்கம் இதுவன்றோ!
 
காரல் மார்க்ஸின்
வார்த்தைகள் கம்பீரம்.
வாழ்க்கை கம்பீரம்
உருவாக்கி உலகுக்குத் தந்த
கொள்கை கம்பீரம்.
 
உற்சாகமூட்ட,
உத்வேகமளிக்க
கம்பீரமாய்
சென்னை வருகிறார்
காரல் மார்க்ஸ்
சிலையின் வடிவிலே . . .

 


பிகு : மேலே உள்ள காரல் மார்க்ஸ் சிலை, மதுரையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

 

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete