Tuesday, April 7, 2020

ஆம், விவரிக்க வார்த்தைகள்தான் இல்லை



பிளாட்பாரத்தில்  தார்பாலின் ஷீட்டே கூறையாக வாழ்ந்து வரும் ஏழை ஒருவரின் வீட்டில் விளக்கேற்றப்பட்டதை புகைப்படமெடுத்து "விவரிக்க வார்த்தைகள் இல்லை" என்று மகிழ்ந்துள்ளது கேடி.ராகவன் எனும் சங்கி ஜந்து.

ஆம்.

விவரிக்க வார்த்தைகள்தான் இல்லை.

அவர்களைத்தான் செல்லா நோட்டு விவகாரத்தில் அலைய விட்டீர்கள் என்பதை எண்ணும் போதும்,

முன்னேற்பாடு இல்லாத ஊரடங்கு உத்தரவின் மூலம் அவர்களுக்கு நீங்கள் பசியும் பட்டினியும்தான் பரிசாக அளித்தீர்கள் என்பதை எண்ணும் போதும்,

இப்படிப்பட்ட வீடுகளை உங்கள் சக்ரவர்த்தி டொனால்ட் ட்ரம்ப் பார்த்து விடக் கூடாது என்று அகமதாபாத் நகரில் பல கோடி ரூபாய்களை கொட்டி அழித்து தீண்டாமை மதில் சுவர் கட்டினீர்கள் என்பதை எண்ணும் போதும்,

விமானப் பயண ஸ்பான்ஸர்களாக, தேர்தல் பத்திரங்களாக, உங்கள் குதிரை பேரங்களுக்கு மூல தனம் அளிப்பவர்களாக இருக்கிற அம்பானி, அதானி வகையற்றாக்களுக்கு அள்ளிக் கொடுக்கிற உங்கள் அரசாங்கம், இந்த ஏழை மக்களுக்காக துரும்பையும் கிள்ளிப் போட தயாராக இல்லை என்பதை எண்ணும் போதும்

அவர்கள் வாழ்க்கையைக் கெடுத்த பாவிகள் நீங்கள்தான் என்பதை அறியாமல் நீங்கள் சொல்வதை கேட்கிற அந்த அப்பாவிகளை மேலும் மேலும் தாக்கி அவர்களின் வாழ் நிலையை இன்னும் மோசமாக்கப் போகிறீர்கள் என்பதை எண்ணும் போதும்

வரும் கோபத்தை, குமுறலை

விவரிக்கக் கூட வார்த்தைகள் இல்லைதான் கேடி.ராகவா . . .

பிகு : மேலேயுள்ள படம் வரைந்தது தோழர் ஸ்ரீரசா

No comments:

Post a Comment