Saturday, February 18, 2012

எங்கே தவறு ?




சென்னையில் ஒரு மாணவன், தன் ஆசிரியை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம், அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. அந்த சோகம்  இன்னும் நெஞ்சில் பாரமாய் வீற்றிருக்கும் போதே அடுத்த அதிர்ச்சிச் செய்தி வந்து தாக்கியது. திருப்பூரில் ஒரு மாணவன் தனது மரணத்திற்கு ஆசிரியர் தன்னை சித்திரவதை செய்ததுதான் காரணம் என்று எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது என்ற செய்திகள் அவ்வப்போது வந்து கொண்டே இருக்கின்றன. இப்படிப்பட்ட நிகழ்வுகள் தொடர்கதையாவது ஏன் என்று ஆராய வேண்டிய அவசியம் உள்ளது.

கல்வி என்பது அறிவை வளர்ப்பதற்காக என்ற நிலை மாறி வேலை வாய்ப்பு பெறுவதற்கான தகுதி என்றாகி விட்டது. தேர்வு என்பது அச்சுறுத்தும் அம்சமாக நிலை கொண்டு விட்டது. கல்வி என்பது இப்போது முழுவதும் வணிகமயமாகி விட்டது. தனியார் பள்ளிகள் புற்றீசல் போல கிளம்பி விட்ட சூழலில் தேர்வு முடிவுகள் நூறு சதவிகிதம் பெறுவது என்ற இலக்கோடு அவை செயல்படுகின்றன. அந்த முடிவுகள்தான் அவர்களது வணிகத்திற்கான மூலதனம்.

அதனால் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் என அனைவருமே கடுமையான மன அழுத்ததிற்கு ஆளாகின்றனர். சரியான வடிகால் கிடைக்காதவர்கள் தவறான முடிவுகளை நாடுகின்றனர். கல்வி முறை, வேலை வாய்ப்பின்மை, கல்வியில் தனியார்மயம்  ஆகிய அனைத்துமே இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு காரணியாக உள்ளது.

கல்வியாளர்கள் சற்று தீவிரமாக செயல்பட வேண்டிய காலகட்டம் இது. கற்றலை இனிய அனுபவமாக மாற்றுவது குறித்த ஆய்வுகளை நடத்திட வேண்டும். சரியான பரிந்துரைகளை அரசுகளும் ஏற்று அமுலாக்கிட வேண்டும். இதுதான் எதிர்காலத் தலைமுறைக்கு நல்லது.   

3 comments:

  1. /ற்றலை இனிய அனுபவமாக மாற்றுவது குறித்த ஆய்வுகளை நடத்திட வேண்டும்.//

    உண்மை

    ReplyDelete
  2. முன்பு நீதி போதனை என ஒரு வகுப்பு உண்டு , இப்போது அதெல்லாம் இல்லை

    ReplyDelete