Wednesday, February 1, 2012

இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நிலை இப்படி ஆகி விட்டதே!

பொதுவாகவே  எங்கள் அலுவலகத்தில்  மதிய உணவு சாப்பிடும்
நேரம் மிகவும் சுவையாக இருக்கும். உலகின் பல்வேறு  விஷயங்கள்
முதல் உள்ளூர் விஷயங்கள் வரை பேசப்படாத  பொருளே கிடையாது.
அவ்வப்போது  இந்திய கிரிக்கெட் அணி பற்றியும் விவாதிக்கப்படும். 
கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம். நான் மட்டும்தான் திட்டிக் கொண்டிருப்பேன்.
ஆஸ்திரேலிய  பயணம் தொடங்கிய பின்பு கிரிக்கெட் பற்றிய பேச்சே 
இல்லை.  சோகத்தை ஏன்  பகிர்ந்து கொள்வது என்பது கூட காரணமாக
இருக்கலாம். 
திங்கள் அன்று மீண்டும் கிரிக்கெட் பற்றிய உற்சாக பேச்சுக்கள் வந்தது.
என்னவென்று  பார்த்தால்  தமிழ் நடிகர்களும் கன்னட நடிகர்களும் 
விளையாடிய போட்டி பற்றித்தான்  பேச்சு.


என்ன இது பற்றி எல்லாம்  பேச ஆரம்பிச்சுட்டீங்க  என்றால் வெறும் 
பெரு மூச்சுதான் பதிலாய் வந்தது.


பாவம் ரசிகர்கள்!


இனி இரண்டு தெருக்களின் சிறுவர்கள் விளையாடும்  போட்டிகள் 
பற்றி பேசும் நிலையை  இந்திய கிரிக்கெட் அணியும் வாரியமும் 
உருவாக்காமல் இருந்தால் சரி . . .
 

No comments:

Post a Comment