கடந்த 2025 ம் ஆண்டிற்கான வாசிப்புக் கணக்குதான் இந்த பதிவு.
வழக்கமாக ஜனவரி முதல் தேதியன்றே எழுதும் பதிவு. எங்கள் சங்கத்தின் அகில இந்திய
மாநாட்டில் பங்கேற்க புவனேஸ்வர் சென்ற காரணத்தால் அன்று பதிவிட இயலவில்லை.
மூன்றாம் தேதி அதிகாலை வீடு திரும்பினாலும் களைப்பினால் அன்றும் பதிவிட முடியவில்லை.
அதன் பின்பு பார்த்தால் வாசிப்பு கணக்கை பதிவிடுபவர்களை மிக மோசமான முறையில் சில
எழுத்தாளர்கள் எழுதியதை படித்த காரணத்தால் கொஞ்சம் தயக்கம் வந்தது. எங்கள் மதுரை
தோழரும் எழுத்தாளருமான தோழர் ச.சுப்பாராவ் அவர்களிடமிருந்துதான் எனக்கு இந்த பழக்கம்
வந்த்து. அதிகமாக வாசிக்க வேண்டும் என்ற உற்சாகமும் வந்த்து. அதே போல் நம்மைப்
பார்த்து யாராவது உற்சாகப்படட்டும் என்பதால் அப்படியெல்லாம் தயங்க வேண்டிய அவசியமில்லை
என்று தோன்றி இதோ எழுதுகிறேன்.
கடந்த வருட பதிவில் எழுதிய சில வாசகங்களை கொஞ்சம் நினைவு படுத்திக்
கொள்கிறேன்.
2015 வருடம்
முதல் வாசிப்புக் கணக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன். கடந்த வருட வாசிப்புப்
பட்டியல் கீழே உள்ளது.
59
நூல்கள், 10391 பக்கங்கள்.
கடந்த
மூன்று வருடங்களில் வாசித்த பக்கங்கள் 8000 ஐ தாண்டவில்லை.
அதனை ஒப்பிடுகையில் இந்த வருடம் முன்னேற்றம்தான்.
2016
ம் வருடம்தான் இதுவரை வாசிப்பின் உச்சமாக 116 நூல்கள், 18,845 பக்கங்கள் என்று
அமைந்திருந்தது. அந்த அளவை மீண்டும் எப்போது தொடுவேன் என்று தெரியவில்லை.
இவ்வருடம் ஜூலையில் பணி நிறைவு செய்வதால் இந்த ஆண்டு கூட சாத்தியப்படலாம்.
எதிர்காலம் ஒளித்து வைத்திருக்கும் ஆச்சர்யங்களை யாரறிவார்?
அப்புறம்
பொறாமை என்று தலைப்பில் உள்ளது என்று கேட்கிறீர்கள் அல்லவா?
வாசிப்பை
பதிவு செய்து வெளியிடும் பழக்கம் எங்கள் மதுரை கோட்டத் தோழரும் எழுத்தாளரும், பொழிபெயர்ப்பாளரும் நேற்று முன்தினம் பணியிலிருந்து ஓய்வு பெற்றவருமான
தோழர் ச.சுப்பாராவ் அவர்களிடமிருந்துதான் வந்தது.
அவர்
கடந்த ஆண்டு வாசித்த நூல்கள் 104, பக்கங்கள் 22,142.
“அன்பே சிவம்” திரைப்பட வசனத்தை சற்று மாற்றி “எதிர்காலம் ஒளித்து
வைத்திருக்கும் ஆச்சர்யங்களை யாரறிவார்?” என்று கடந்தாண்டு எழுதியிருந்தேன்.
எதிர்காலம் ஆச்சர்யத்தை அளிக்கவில்லை. அதிர்ச்சியைத்தான் கொடுத்தது. 02.05.2025
அன்று நடைபெற்ற சாலை விபத்து கிட்டத்தட்ட
நாற்பது நாட்கள் படுக்கையிலேயே இருக்க வைத்தது. உங்கள் மனதை இலகுவாக வைத்திருக்க நூல்களை
படியுங்கள், இசை கேளுங்கள் என்று மருத்துவர் சொல்ல, மருத்துவமனையிலேயே வாசிப்பு
வேகமாக தொடங்கியது.
அந்த காலகட்டத்தில் மட்டும் நாற்பது நூல்களை படித்து முடித்தேன். படுக்கையில்
இருந்தவனை பார்க்க வந்த எங்கள் தென் மண்டல முன்னாள் பொதுச்செயலாளர்கள் தோழர்கள்
கே.சுவாமிநாதன், டி.செந்தில்குமார் மற்றும் எங்கள் கோட்ட இணைச்செயலாளர் தோழர்
கே.வேலாயுதம் ஆகியோர் நூல்களை அளித்ததும் உற்சாகத்தை அளித்தது. அந்த சமயத்தில் படித்துக்
கொண்டிருந்த பெரும்பாலான நூல்கள் ரொம்பவே சீரியஸாக போய்க் கொண்டிருந்ததால் முகநூல்
மத்யமர் குழுவின் மூலமாக அறிமுகமான திரு மடிப்பாக்கம் வெங்கட் அவர்களின் மூன்று
நகைச்சுவை நூல்களையும் வரவைத்து கொஞ்சம் இளைப்பாறிக் கொண்டேன்.
இந்த ஆண்டு சில நூல்களை மீள் வாசிப்பு செய்தேன். தோழர் ச.தமிழ்ச்செல்வன்
எழுதிய “ஜிந்தாபாத், ஜிந்தாபாத்” லட்சுமி சரவணக்குமாரின் “இரண்டாம் ஆட்டம்”
சு.வெங்கடேசனின் “சந்திரஹாசம்” வேல.ராமமூர்த்தியின் “குற்றப்பரம்பரை” ஆகிய நூல்களை
இந்த ஆண்டும் படித்தேன். நண்பர் முகமது யூசுப் எழுதிய “மாயச்சதுரகம்” நூலை ஆண்டின்
துவக்கத்தில் படித்தேன். வ.உ.சி அவர்களின் நினைவு நாள் கருத்தரங்கில் பேச மின்
ஊழியர்கள் அமைப்பு அழைத்த போது சில தகவல்களுக்காக மீண்டும் படித்தேன். அதே முன்னாள்
எல்.டி.டி.இ உறுப்பினரான சாத்திரி எழுதிய “ஆயுத எழுத்து 2” படித்து முடித்த பின்பு
முதல் பாகத்தையும் மீண்டும் படிக்க வேண்டிய அவசியம் வந்த்து. அதன் தொடர்ச்சியாக இரண்டாம்
பாகத்தையும் மீண்டும் படித்தேன்.
பணி ஓய்வின் போது பரிசுகளாக வந்த நூல்களும் வாசிப்பின் வேகத்தை அதிகரித்தது.
நல்ல நூல்கள் என்று நல்ல வாசகர்கள் என்று நான் நம்பும் நண்பர்கள் பரிந்துரைக்கும்
நூல்களை இணைய வழியில் வாங்குவது இந்த ஆண்டில் அதிகமாகி உள்ளது. எக்ஸெல் மூலம்
நூல்கள் வாங்கியது/வந்த்தை பதிவு செய்து, வாசித்து முடித்ததை அதிலேயே பதிவு செய்வதால் எவ்வளவு பக்கங்கள் வாசித்துள்ளோம்
என்பதை கவனித்துக் கொண்டே இருக்க முடிந்தது.
இதற்கு முந்தைய சாதனையாக நான் நினைத்த 18,000 பக்கங்களை செப்டம்பர் இறுதியிலேயே
கடந்து விட்டதால் 25,000 பக்கங்களை இந்த
ஆண்டு நிறைவு செய்ய வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துக் கொண்டேன்.
புவனேஸ்வர் புறப்படுகையில் “மரிச்ஜாப்பி- உண்மையில் நடந்த்து என்ன?” படித்துக்
கொண்டிருந்தேன். அந்த நூலையும் ஐ.ஏ.எஸ் அதிகாரி உதயச்சந்திரன் எழுதிய “மாபெரும் சபைதனில்”
ஆகிய இரண்டு நூல்களையும் பயணத்தில் படிக்க எடுத்துக் கொண்டேன். முதல் நூலின் அரசியல்
முக்கியத்துவத்தாலும் இரண்டாம் நூலின் சுவாரஸ்யத்தாலும் கிடைத்த நேரத்தில் எல்லாம்
படித்து 2025 முடியும் முன்பே நூல்களை படித்து முடித்து விட்டேன்.
வீடு திரும்பி எக்ஸெல்லில் பதிவு செய்து கணக்கு பார்த்தால்
படித்த நூல்கள் 132, படித்த பக்கங்கள் 25,473.
உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது.
இன்னொரு தகவலையும் சொல்லியாக வேண்டும், கொஞ்சம் அற்பத்தனமாக இருந்தாலும் . . .
தோழர் ச.சுப்பாராவ் அவர்களின் வாசிப்புக் கணக்கை பார்த்தேன்.
114 புத்தகங்கள் – 25392
பக்கங்கள்.
நான் ஆங்கிலப் புத்தகங்கள் எதையும் வாசிக்கவில்லை,
நூல் எதுவும் எழுதவில்லை, கட்டுரைத் தொடரும் எழுதவில்லை. அதனால் இந்த ஒப்பீடு பொருத்தமில்லை
என்றாலும் ஒரு அற்ப சந்தோஷம்.
அடுத்த வருடத்திற்கு இலக்கு எதுவும் நிர்ணயித்துக்
கொள்ளவில்லை. படிக்க வேண்டிய நூல்கள் ஏராளமாக இருக்கிறது. சென்னை புத்தக விழா, கண்
சிமிட்டி வரவேற்கிறது.
சத்யஜித்ரே வின் திரைக்காவியமான “பதேர் பாஞ்சாலி”
நாவலை எழுதிய “விபூதிபூஷண் பந்தோபாத்யாய”
எழுதிய “இலட்சிய இந்து ஓட்டல்” நாவலோடு இந்த ஆண்டு வாசிப்பு தொடங்கி விட்டது.
இதோ பட்டியல்
|
எண்
|
நூல்
|
ஆசிரியர்
|
பக்கம்
|
|
1
|
மாயச்சதுரகம்
|
முகமது
யூசுப்
|
310
|
|
2
|
உலக
சினிமா
|
செழியன்
|
768
|
|
3
|
வட்டாரத்துக்கோடி
|
புலியூர்
முருகேசன்
|
196
|
|
4
|
மக்களிசை
மேதை எம்.பி.சீனிவாசன்
|
இக்பால்
அகமது
|
276
|
|
5
|
தணியா
தீயின் நாக்குகள்
|
கமலாலயன்
|
156
|
|
6
|
நக்சல்பாரி
- ஒரு கிராமத்தின் பெயர் மட்டுமல்ல
|
இரா.முருகவேள்
|
150
|
|
7
|
ஆதிச்சநல்லூர்
முதல் கீழடி வரை
|
நிவேதிதா
லூயிஸ்
|
222
|
|
8
|
நோ
ஆணி ப்ளீஸ்
|
கீதா
இளங்கோவன்
|
186
|
|
9
|
ஆண்ட்ரூஸ்
விடுதி
|
எஸ்.சுஜாதா
|
104
|
|
10
|
ஆண்கள்
நலன்
|
ஜெ.தீபலட்சுமி
|
176
|
|
11
|
ஞாபக
ஊற்று
|
கலாபிரியா
|
177
|
|
12
|
மத்தவிலாச
பிரகசனம்
|
பிரளயன்
|
70
|
|
13
|
என்
உள்ளம் அழகான வெள்ளித்திரை
|
கலாபிரியா
|
136
|
|
14
|
நன்மாறன்
கோட்டைக்கதை
|
இமையம்
|
211
|
|
15
|
தோல்
|
டி.செல்வராஜ்
|
695
|
|
16
|
கரும்
பலகைக்கு அப்பால்
|
கலகல
வகுப்பறை சிவா
|
80
|
|
17
|
சயனைட்
|
தீபச்செல்வன்
|
308
|
|
18
|
வீரப்பன்
பெயரால் மனித வேட்டை
|
பாலமுரளிவர்மன்
|
126
|
|
19
|
தொலைந்து
போனவர்கள்
|
சா.கந்தசாமி
|
167
|
|
20
|
எம, எஸ் - காற்றினில் கரைந்த
துயர்
|
டி.எம்.கிருஷ்ணா
|
56
|
|
21
|
எங்கேயும்
எப்போதும்
|
எஸ்.பி.பி
நினைவலைகள்
|
143
|
|
22
|
நெல்லை எழுச்சியும் வ.உ.சியும் 1908
|
அ.வெங்கடாசலபதி
|
246
|
|
23
|
பதினெண்
மேற்கணக்குக் காதைகள்
|
பிரபு
தர்மராஜ்
|
200
|
|
24
|
13 வருடங்கள்
- ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள்
|
ராம்சந்த்ராசிங்
தமிழில் இரா.செந்தில்
|
207
|
|
25
|
இன்னும்
எத்தனை காலத்திற்கு நிலவை கூண்டிலெயே அடைத்து வைக்க முடியும்?
|
சுசித்ரா
விஜயன். தமிழில் இ.பா.சிந்தன்
|
304
|
|
26
|
சந்தாலி
|
சக்தி
சூர்யா
|
304
|
|
27
|
ரீட்டாவின்
கல்வி
|
பிருந்தா
காரத் தமிழில் அபினவ் சூர்யா,
சித்தார்த் .
|
224
|
|
28
|
சமரம்
|
தபோ
விஜயகோஷ் தமிழில் ரவிச்சந்திரன் அரவிந்தன்
|
264
|
|
29
|
சங்கர்லால்
துப்பறிகிறார் பாகம் 4
|
தமிழ்வாணன்
|
432
|
|
30
|
பிஞ்சுகள்
|
கி.ராஜநாராயணன்
|
94
|
|
31
|
ஆறாவது
வார்டு
|
அந்தோன்
செகாவ் தமிழில் ரா.கிருஷ்ணையா
|
87
|
|
32
|
ஆனை
மலை
|
பிரசாந்த்
வே
|
240
|
|
33
|
பாலஸ்தீனம்
: நம்மால் என்ன செய்ய முடியும்?
|
இ.பா.சிந்தன்
|
143
|
|
34
|
மணிரத்னம்-
அழகியலும் கருத்தியலும்
|
யமுனா
ராஜேந்திரன்
|
252
|
|
35
|
புரட்சிப்
பெருநதி
|
சு.பொ.
அகத்தியலிங்கம்
|
174
|
|
36
|
எதனையும்
மறக்க இயலாது
|
நேஹால்
அகமது - தமிழில் சுனந்தா சுரேஷ்
|
160
|
|
37
|
1946 இறுதிச்
சுதந்திரப் போர்
|
பிரமோத்
கபூர் தமிழில் ச.சுப்பாராவ்
|
400
|
|
38
|
உலகை
மாற்றிய புரட்சியாளர்கள்
|
மருதன்
|
207
|
|
39
|
வஸ்ந்தத்தின்
இடிமுழக்கம்
|
அசோக்
தாவ்லே மற்றும் பலர்
|
32
|
|
40
|
களம்
கண்ட வேங்கைகள்
|
த்ஞ்சை
கே.பக்கிரிசாமி
|
110
|
|
41
|
மரிச்ஜாப்பி
- உண்மையில் நடந்தது என்ன?
|
ஹரிலால்
நாத் - தமிழில் ஞா.சத்தீஸ்வரன்
|
330
|
|
42
|
பாரி
படுகளம்
|
பிரளயன்
|
72
|
|
43
|
தில்லைக்
கோயில்களும் தீர்ப்புக்களும்
|
சிகரம்
ச.செந்தில்நாதன்
|
148
|
|
44
|
பாலலை
நில ரோஜா
|
கு.சின்னப்ப
பாரதி
|
299
|
|
45
|
குறத்தி
முடுக்கு
|
ஜி.நாகராஜன்
|
95
|
|
46
|
விசாவிற்காக
காத்திருக்கிறேன்
|
டாக்டர்
அம்பேத்கர்
|
55
|
|
47
|
அவளது
வீடு
|
எஸ்.ராமகிருஷ்ணன்
|
271
|
|
48
|
அன்றொரு
நாள் இதே நிலவில்
|
பாரததேவி
|
224
|
|
49
|
மர்மக்கதைகள்
|
சுஜாதா
|
295
|
|
50
|
யானைகளோடு
பேசுபவன்
|
ச.சுப்பாராவ்
|
165
|
|
51
|
பட்டுப்பூச்சி
|
நா.பார்த்தசாரதி
|
128
|
|
52
|
கல்கியின்
சிறுகதைகள்
|
கல்கி
|
304
|
|
53
|
நளபாகம்
|
தி.ஜானகிராமன்
|
319
|
|
54
|
இதற்குத்தானே
ஆசைப்பட்டாய் பாலகுமாரா
|
பாலகுமாரன்
|
238
|
|
55
|
மௌனம்
கலைத்த சினிமா
|
சோழ
நாகராஜன்
|
128
|
|
56
|
பச்சை
வயல் மனது
|
பாலகுமாரன்
|
288
|
|
57
|
ஆலம்கீர்
ஔரங்கசீப்
|
புலியூர்
முருகேசன்
|
241
|
|
58
|
சிறுகதைகள்
|
புலியூர்
முருகேசன்
|
429
|
|
59
|
பகவத்
கீதை பற்றி
|
டாக்டர்
அம்பேத்கர்
|
34
|
|
60
|
ஆர்.
எஸ். எஸ். ஸின் அரசியல்
|
சி.சொக்கலிங்கம்
|
39
|
|
61
|
பகவான்
புத்தர்
|
பொன்னீலன்
|
14
|
|
62
|
அறுசுவை
|
மடிப்பாக்கம்
வெங்கட்
|
132
|
|
63
|
அப்பாசாமியும்
லாக்டவுனும்
|
மடிப்பாக்கம்
வெங்கட்
|
81
|
|
64
|
கனவு
தொழிற்சாலை
|
மடிப்பாக்கம்
வெங்கட்
|
112
|
|
65
|
அந்த
கேள்விக்கு வயது 98
|
இரா.எட்வின்
|
152
|
|
66
|
கதா
விலாசம்
|
எஸ்.ராமகிருஷ்ணன்
|
360
|
|
67
|
ரெண்டாம்
ஆட்டம்
|
லட்சுமி
சரவணகுமார்
|
432
|
|
68
|
குற்றப்பரம்பரை
|
வேல.ராமமூர்த்தி
|
399
|
|
69
|
ஜிந்தாபாத்
ஜிந்தாபாத்
|
ச.தமிழ்ச்செல்வன்
|
176
|
|
70
|
மக்கள்
போராட்டங்கள் -ஷெல்லியின் கண்ணோட்டம்
|
முனைவர்
ஆர்.கிருஷ்ணமாச்சாரி தமிழில் ஆர்.ரமணன்
|
192
|
|
71
|
பச்சையும்
சிவப்புமாய் ஒரு பாதாம் மரம்
|
முத்தரசி
|
196
|
|
72
|
நகுலன்
வீட்டில் யாருமில்லை
|
எஸ்.ராமகிருஷ்ணன்
|
144
|
|
73
|
ஆகாயத்தில்
எறிந்த கல்
|
ஆதவன்
தீட்சண்யா
|
95
|
|
74
|
மாபெரும்
வீரர்கள்
|
சி.பி,சிற்றரசு
|
104
|
|
75
|
இந்திய
வரலாற்றில் இளைஞர்கள்
|
ச.தமிழ்ச்செல்வன்
|
32
|
|
76
|
வாச்சாத்தி
வன் கொடுமை
|
பெ.சண்முகம்
|
24
|
|
77
|
தர்காக்களும்
இந்து இஸ்லாமிய ஒற்றுமையும்
|
ஆ.சிவசுப்ரமணியன்
|
30
|
|
78
|
மீரட்
சதி வழக்கு
|
முசாபர்
அகமது
|
24
|
|
79
|
தீண்டத்தகாதவன்
|
தொகுப்பு
சுகன்
|
174
|
|
80
|
தேர்ந்தெடுத்த
சிறுகதைகள்
|
கி.ராஜநாராயணன்
|
238
|
|
81
|
சந்திரஹாசம்
|
சு.வெங்கடேசன்
|
144
|
|
82
|
கம்லாவும்
நானும்
|
கடுகு
|
208
|
|
83
|
குன்றென
நிமிர்ந்து நில்
|
ஆர்.பாலகிருஷ்ணன்
|
48
|
|
84
|
தேசாந்திரி
|
எஸ்.ராமகிருஷ்ணன்
|
252
|
|
85
|
இலக்கற்ற
பயணி
|
எஸ்.ராமகிருஷ்ணன்
|
184
|
|
86
|
மாபெரும்
சபைதனில்
|
உதயச்சந்திரன்
|
344
|
|
87
|
புத்தகக்
காதல்
|
ச.சுப்பாராவ்
|
243
|
|
88
|
தலைப்பில்லாத
ஒரு கதை
|
அந்தோன்
செகாவ் தமிழில் ச.சுப்பாராவ்
|
128
|
|
89
|
ஆயுத
எழுத்து 2
|
சாத்திரி
|
280
|
|
90
|
அஜிமுல்லாகான்
|
முத்துமீனாட்சி
|
20
|
|
91
|
மிச்சமிருக்கும்
ஒன்பது விரல்கள்
|
ஆதவன்
தீட்சண்யா
|
54
|
|
92
|
கைரதி
377
|
மு.ஆன்ந்தன்
|
120
|
|
93
|
ஒரு
கம்யூனிஸ்டின் வாழ்க்கை பதிவு
|
வே.கண்ணன்
|
64
|
|
94
|
நில்
கவனி தாக்கு
|
சுஜாதா
|
126
|
|
95
|
ஒரு
கூர்வாளின் நிழலில்
|
த்மிழினி
|
271
|
|
96
|
என்
சக பயணிகள்
|
ச.தமிழ்ச்செல்வன்
|
192
|
|
97
|
இதன்
பெயரும் கொலை
|
சுஜாதா
|
213
|
|
98
|
ஞானம்
புதுசு
|
ம்
முகில்
|
214
|
|
99
|
ரமலோவ்
|
சரவணன்
சந்திரன்
|
191
|
|
100
|
மெர்க்குரிப்
பூக்கள்
|
பாலகுமாரன்
|
335
|
|
101
|
நானே
மகத்தானவன்
|
அ.பாக்கியம்
|
233
|
|
102
|
நாம்
ஏன் கியூபா பக்கம் நிற்க வேண்டும் ?
|
இ.பா.சிந்தன்
|
95
|
|
103
|
ஸ்ரீரங்கத்துக்
கதைகள்
|
சுஜாதா
|
316
|
|
104
|
நாயக்கர்
மாளிகை
|
இந்திரா
சௌந்தர்ராஜன்
|
224
|
|
105
|
மூன்று
பிள்ளைகள்
|
கு.அழகிரிசாமி
|
40
|
|
106
|
கியூபாவின்
மருத்துவப் புரட்சி
|
மத்திய
சென்னை தமுஎகச
|
71
|
|
107
|
சமூகப்
போராளிகள்
|
பேரா.
சோ.மோகனா
|
87
|
|
108
|
மத்ராஸ்
மண்ணும் கதைகளும்
|
விநாயக
முருகன்
|
142
|
|
109
|
மானசரோவர்
|
அசோக்மித்திரன்
|
215
|
|
110
|
உலகைக்
குலுக்கிய பத்து நாட்கள்
|
வி.பத்மநாபன், தமிழில் யூமா வாசுகி
|
48
|
|
111
|
இருள்
கிழித்த செஞ்சுடர்கள்
|
மதுரை
நம்பி
|
95
|
|
112
|
வீர
வேங்கை வெங்கடாசலம்
|
என்.ராமகிருஷ்ணன்
|
96
|
|
113
|
புகார்ப்போட்டியின்
மீது படுத்துறங்கும் பூனை
|
சீனு
ராமசாமி
|
303
|
|
114
|
அப்பம்
வடை தயிர்சாதம்
|
பாலகுமாரன்
|
368
|
|
115
|
மாயச்சதுரகம்
|
முகமது
யூசுப்
|
310
|
|
116
|
மகாத்மா
பிறந்த மண்ணில்
|
சிவசங்கரி
|
92
|
|
117
|
ஒரு
கம்யூனிஸ்டின் நினைவுக்குறிப்புகள்
|
பி.ராமச்சந்திரன்
|
160
|
|
118
|
வ.உ.சி
யின் திரிசூலம்
|
ஆ.சிவசுப்ரமணியன்
|
110
|
|
119
|
சாப்பாட்டுப்
புராணம்
|
சமஸ்
|
112
|
|
120
|
இந்தியாவின்
கரும்புப் பெண்மணி ஜானகி அம்மாள்
|
இ.பா.சிந்தன்
|
40
|
|
121
|
வர்க்கப்
போரின் வரலாற்று நாயகர்கள்
|
கோவை
கனகராஜ்
|
125
|
|
122
|
நெருக்கடி
நெருப்பாறு
|
கலைஞர்
கருணாநிதி
|
100
|
|
123
|
மத்தவிலாச
பிரகசனம்
|
பிரளயன்
|
70
|
|
124
|
வ.உ.சி
யின் சுதேசிக் கப்பலும் தொழிற்சங்க இயக்கமும்
|
ச.தமிழ்ச்செல்வன்
|
16
|
|
125
|
பாப்லோ
நெருதா கவிதைகள்
|
தமிழ்ல்
சுகுமாரன்
|
232
|
|
126
|
பட்டாம்பூச்சி
|
ஹென்றி
ஷாரியர் தமிழில் ரா.கி.ரங்கராஜன்
|
855
|
|
127
|
ஆயுத
எழுத்து
|
சாத்திரி
|
375
|
|
128
|
ஆயுத
எழுத்து 2
|
சாத்திரி
|
280
|
|
129
|
பெயரிடப்படாத
படம்
|
டி,கே.கலாபிரியா
|
248
|
|
130
|
பொது
நலன் கருதி பிரசுரிக்கப்படாத கதை
|
ஆதவன்
தீட்சண்யா
|
99
|
|
131
|
எதிர்பார்க்கும்
வடிவில் எதிரி இல்லை
|
ஆதவன்
தீட்சண்யா
|
160
|
|
132
|
மாலிக்காபூர்
|
செ.திவான்
|
119
|
|
|
|
|
25473
|