அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சொன்னதை "ஒப்புதல் வாக்குமூலம்" என்று சொல்லாமல் வேறென்ன சொல்ல முடியும்.
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சொன்னதை "ஒப்புதல் வாக்குமூலம்" என்று சொல்லாமல் வேறென்ன சொல்ல முடியும்.
மேலே உள்ள படங்களை பார்த்துக் கொள்ளுங்கள், நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் இந்த கம்பீரமான விளையாட்டு அரங்கை புதுடெல்லிக்கு சென்று நீங்கள் நேரில் பார்க்க விரும்பினாலும் அதற்கு வாய்ப்பு கிடையாது.
ஏனென்றால் இந்த விளையாட்டு அரங்கம் இடிக்கப்படவுள்ளது.
இதுதான் புதுடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம். எண்பதுகளில் இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்திய போது கட்டப்பட்ட அரங்கம்.
அப்படி என்றால் இது பழைய அரங்கமாகத்தானே இருக்கும்! பலவீனமாகி இருக்குமே! இடித்தால் என்ன தவறு என்று நீங்கள் கேட்கலாம்.
இந்த அரங்கம் 1982 ல் கட்டப்பட்டாலும் அது மீண்டும் 2010 ல் இந்தியா, காமன்வெல்த் போட்டிகளை நடத்திய போது 961 கோடி ரூபாய் செலவில் மறு சீரமைக்கப்பட்டு நவீனமயமாக்கப்பட்டது.
அது மட்டுமல்ல 27 செப்டம்பர் 2025 முதல் 5 அக்டோபர் 2025 வரை மாற்றுத் திறனாளிகளுக்காக உலக சேம்பியன்ஷிப் போட்டிகள் இதே அரங்கில்தான் நடந்தது. அதற்காக பல வசதிகளை அதிகரிக்க ஐம்பது கோடி ரூபாய் இப்போதுதான் செலவழிக்கப்பட்டுள்ளது.
ஆக இப்போது இந்த ஸ்டேடியத்தை இடிக்க வேண்டிய அவசியம் என்ன உள்ளது?
புதிய விளையாட்டு மையத்தை உருவாக்கப் போவதாக சொல்கிறார்கள்.
அதற்கான திட்டம் தயாராக உள்ளதா?
இல்லைங்க.
எவ்வளவு செலவாகும் என்ற மதிப்பீடு உள்ளதா?
இல்லைங்க.
இப்போது கால்பந்து விளையாடலாம். தட களப் போட்டி நடத்தலாம், குதிரை சம்பந்தப்பட்ட விளையாட்டுக்கள் நடத்தலாம். ஊக்க மருந்து சோதனை மையம் உள்ளது. இந்திய விளையாட்டு முன்னேற்ற ஆணையத்தின் அலுவலகம் உள்ளது. வேறு ஏதாவது புதிய விளையாட்டு இணைக்க வாய்ப்பு உண்டா?
தெரியாதுங்க.
ஸ்டேடியம் இடிக்கப்பட்டால் மேலே சொன்னவை எல்லாம் எங்கே செல்லும்?
தெரியாதுங்க.
அப்பறம் என்னதான்யா தெரியும்?
இந்த ஸ்டேடியம் மோடிக்கு பிடிக்காத நேருவின் பெயரில் உள்ளது.
அதனால்தானா?
ஆமாங்க. அதனால்தான் ஸ்டேடியத்தை இடிக்கறோம்.,
புதுசா கட்டுவீங்களா?
கட்டினாலும் கட்டுவோம். மதுரை ஏ.ஐ.ஐ.எம்.எஸ் மாதிரி கிடப்பில போட்டாலும் போடுவோம். ஆனா?
என்ன ஆனா?
ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் பெயரில இனி டெல்லியில் ஸ்டேடியம் கிடையாது.
அப்படியா?
நேருவுக்கு பதிலா மோடி தூக்கி வச்சுக்கற சர்தார் படேல் பெயரில் அகமதாபாத்தில் இருந்த ஸ்டேடியத்தை லைட்டா புதுசாக்கிட்டு படேல் பெயரை தூக்கிட்டு மோடி அவரு பெயரையே வச்சுக்கிட்டவரு. படேலுக்கே இதான் மோடி மரியாதைன்னா, நேருவுக்கு ????????
மேலேயுள்ள படத்திற்கும் அதில் உள்ள கேள்விகளுக்கும் கீழே உள்ள தகவல்தான் காரணம்.
இதில் என்ன கொடுமை என்றால் 56 இஞ்ச் கோழையின் இந்த காமெடியை நம்பி இரண்டாவது ஆபரேஷன் சங்கி வரப்போவதாக மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் மூடச்சங்கிகள் சில்லறையை சிதற விட்டுக் கொண்டிருக்கிறார்கள். . ..
மேலே உள்ளது துப்பாக்கி திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி.
இந்தப் படம் என்றில்லை பெரும்பாலான தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் வில்லனிடமும் வில்லன் கூட்டத்திடமும் துப்பாக்கி இருக்கும். ஆனாலும் அவர்கள் முட்டாள்கள் போல வெறுங்கைகளால் சண்டை போட்டு ஹீரோவிடம் தோற்றுப் போவார்கள்.
அந்த முட்டாள் வில்லன்கள் போலவே பெரும்பாலான குண்டு வெடிப்புக்களை நடத்தும் தீவிரவாதிகள், எப்படி பாஜகவிற்கு தேர்தல் ஆதாயம் கிடைப்பது போல குண்டு வைக்கிறார்கள்!
இது என்னுடைய கருத்து இல்லை, ஒரு சந்தேகம், அவ்வளவுதான்.
நேற்று டெல்லி செங்கோட்டை வாயிலில் வெடிகுண்டு வெடித்து எட்டு பேர் இறந்த சம்பவத்திற்கும் இன்று பீகாரில் இறுதி கட்ட தேர்தல் என்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லைதான். ஆமாம் இல்லைதான் . . .
பெண்களுக்கான கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா இரண்டாவது முறையாக வென்றுள்ளது.
இரண்டாவது முறையாகவா?
இதுதானே முதல் முறை என்று புருவம் உயர்த்துகிறீர்கள் அல்லவா!
சிவ கார்த்திகேயன் தயாரித்து நடித்த "கனா" திரைப்படம் நினைவில் உள்ளதல்லவா!
எனக்கு பிடித்த படம் அது. அப்போது எழுதிய பதிவு கீழே . . .
மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் நேற்று ஒரு பதிவும் அதற்கு ஒரு போலி ஐ.டி (ஆண்டாளை வைரமுத்து இழிவுபடுத்துகிறார் என்று உருவான சர்ச்சையின் போது உருவான போலி இவர்) போட்ட பின்னூட்டமும் அதற்கு நான் கொடுத்த பதிலும் கீழே உள்ளது.
சங்கிகளுக்கு சிக்கல் என்றால் பாய்ந்தோடி வரும் நீதி, நேர்மை, கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை பின்பற்றும் மாடரேட்டர் வழக்கம் போல காணாமல் போகி விட்டார்.
மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் நான் ஏன் தொடர்ந்து சண்டை செய்கிறேன்?
மேலே பராசக்தி சிவாஜி பதில் சொல்கிறார் . . .
தெரு நாய்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பு பற்றி இன்று ஆங்கில இந்துவில் வந்துள்ள செய்தியை படித்து நான் புரிந்து கொண்டவை
கல்வி நிறுவனங்கள், விளையாட்டு மைதானங்கள், அரசு அலுவலகங்கள், மருத்துவ மனைகள், பேருந்து நிலையங்கள், பேருந்து டெப்போக்கள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றில் திரியும் தெருநாய்களை
உள்ளாட்சி அமைப்புக்கள் பிடித்து அவற்றுக்கு என ஒரு அடைப்பிடம் உருவாக்கி கருத்தடை செய்து . . . .
எந்த பகுதியிலிருந்து தெரு நாய்கள் பிடித்துக் கொண்டு வரப்பட்டதோ, அதே பகுதியில் அவை மீண்டும் விடப்படக்கூடாது, இதை நாங்கள் மிகவும் தெளிவோடு சொல்கிறோம். எந்த பகுதியிலிருந்து பிடிக்கப்பட்டதோ அதே பகுதியில் மீண்டும் விடுவது எங்கள் ஆணைக்கே முரணாகி விடும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும்.
இவைதான் தீர்ப்பில் உள்ளவை.
மேலே உள்ள பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் உள்ள தெரு நாய்களை எதுவும் செய்ய வேண்டாமா? அவைகள் எப்போதும் போல சுதந்திரமாக திரியலாமா? அவற்றை பிடிக்க மாட்டீர்களா?
நீங்கள் குறிப்பிட்ட பகுதிகளை விட ஆயிரம் மடங்கு தெரு நாய்கள் மற்ற பகுதிகளில்தான் இருக்கின்றன. அவற்றை கட்டுப்படுத்தாமல் தெரு நாய் பிரச்சினை எப்படி தீரும்?
பிடித்து கருத்தடை செய்யப்பட்ட தெரு நாய்களை பிடிக்கப்பட்ட பகுதியில் விடக்கூடாது என்றால் பின் எங்கே விடுவீர்கள்? ஏற்கனவே பிரச்சினை பெரிதாக உள்ள இடங்களிலா?
தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டும்தான் கால்நடைகளினால் விபத்துக்கள் ஏற்படுகிறதா?
கொஞ்சம் நிதானமாக யோசித்து அனைவருக்கும் பாதுகாப்பு கிடைக்கும்படி தெளிவான உத்தரவுகளை பிறப்பியுங்கள் நீதியரசர்களே!
மேலே உள்ள இரண்டு படங்களும் இன்று காலை எடுக்கப்பட்டவை. என் வீட்டு வாசலில் உலா வரும் தெருநாய்கள் கோஷ்டி சண்டை ஒன்றை முடித்து விட்டு திரும்பிய போது பாதுகாப்பாக காம்பவுண்டுக்குள் நின்று எடுத்தது.
செய்தித்தாளிலிருந்து நான் புரிந்து கொண்டது சரியென்றால் இந்த பிரச்சினைக்கு தீர்வே இல்லை.