ஒரு ஊழியனின் குரல்
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Friday, March 29, 2024
அப்போ மோடி என்ன கிழவன்????
பணப்பூர் வேலை நாளும் AFSPA தொடர்வதும்
நேற்று இரவு முழுதும் மணிப்பூர் ஆளுனர், 41 % கிறிஸ்துவர்கள் கொண்ட மணிப்பூர் மாநிலத்தில், இன்னமும் அமைதி திரும்பாத ரத்த பூமியில் ஈஸ்டர் பண்டிகை அன்று அலுவலக நாளாக அறிவித்து உருவாக்கிய சர்ச்சைதான் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்திருந்தது. பின்பு அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.
இந்த சர்ச்சையின் பின்னணியில் வேறு ஏதோ வில்லங்கத்தை சத்தம் இல்லாமல் பில்லா ரங்கா கூட்டணி செய்திருக்கும் என்று சந்தேகம் வந்தது.
ஆம். நிஜம்தான்.
இன்றைய செய்தித்தாள் உண்மையைச் சொன்னது.
ராணுவத்திற்கு தரப்பட்டுள்ள கொடூரமான, ஜனநாயக விரோதமான ராணுவப்படைகள் சிறப்பு அதிகாரச்சட்டம் நாகாலாந்து மற்றும் அருணாசலப் பிரதேசத்தில் இன்னும் ஆறு மாதத்திற்கு விரிவு படுத்தப்பட்டுள்ளது.
அதற்கு ஒரு நாள் முன்பாக AFSPA ஐ திரும்பப் பெறுகிறோம் என்று அமித்ஷா வஜனம் பேசியுள்ளார்.
மக்களின் சுதந்திரத்தை பறிக்க, யாராலும் கேள்வி கேட்க முடியாத அதிகாரத்தை கொடுத்துள்ள ஆட்சியாளர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா?
சிந்திப்பீர்
Thursday, March 28, 2024
எந்த சினிமாவில் நாட்டாமை?
தேவயானியை சூர்யவம்சம் படத்தில் கலெக்டராக்கியது போல ராதிகாவை எம்.பி யாக்குவேன் என்று சொன்ன நாட்டாமை அவர்களே, ராதிகாவை எந்த படத்தில் எம்.பி ஆக்குவேன் என்பதை மட்டும் சொல்லவில்லையே?
ஆனால் நீங்க ரொம்ப லேட்டு.
மணிரத்தினத்திடம் சொல்லி பொன்னியின் செல்வன் படத்திலேயே அனிருத்த பிரம்மராயர் வேடத்தில் ராதிகாவை நடிக்க வைத்திருந்தால் பிரதம அமைச்சராக நடித்த பெருமையே கிடைத்திருக்குமே!
ஐய்யோ! அது ஆண் வேடமாயிற்றே என்று யோசித்தீர்களா?
மணிமேகலை பாத்திரத்தையே படத்தில் தூக்கி விட்டார். மதுராந்தகன்தான் செம்பியன் மாதேவியின் அசல் மகன் என்று கதையை மாற்றி சேந்தன் அமுதனையும் பூங்குழலியையும் அம்போவென்று விட்டு விட்டார்.
ஆதித்த கரிகாலனும் அருள்மொழியும் குந்தவையும் சந்திப்பதாக நாவலின் ஐந்து பாகத்திலும் இல்லாததை புதிதாக கொண்டு வந்தார்.
இவ்வளவு மாத்தினவரு அநிருத்த பிரம்மராயரை மட்டும் பெண்ணாக மாத்தி இருக்க மாட்டாரா என்ன?
CAA - வரம் அருளும் பூசாரிகள்
குடியுரிமைச்சட்டத்தின்படி குடியுரிமை வேண்டும் என்று விண்ணப்பம் கொடுப்பவர்களின் மதம் என்ன என்பதை உறுதி செய்யும் சான்றிதழை அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கோயில், சர்ச் அல்லது வழிபாட்டுத் தளத்தின் பூசாரிகள் கொடுத்தால் போதுமாம்.
மேலே உள்ள செய்தி இன்றைய ஆங்கில இந்து நாளிதழின் முதல் பக்க செய்தி.
ஆக, இனி பூசாரிகள் காட்டில் மழைதான்.. பண மழைதான் . . .
ஏன் எந்த மதம் என்பது முக்கியமாகிறது.
பாகிஸ்தான், வங்க தேசம், ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த இந்து, கிறிஸ்துவர், சீக்கியர், பார்ஸி, புத்த, ஜைன மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே குடியுரிமைக்காக விண்ணப்பிக்க முடியும்.
இந்நாடுகளில் இருந்து அகதிகளாக வந்த இஸ்லாமியர்களோ, மியன்மர், இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து வந்த எந்த மதத்தவரும் விண்ணப்பிக்கவே முடியாது.
குடியுரிமைச்சட்டத்தின் முதல் கோணல் இதுதான்..
Wednesday, March 27, 2024
தமிழ்நாடு மட்டும் போதாது . . .
முகநூலில் பார்த்த அருமையான படம்.
ஆனால் தமிழ்நாடு மட்டும் மோடியை சுண்டி விட்டால் போதாது.
ஒட்டு மொத்த இந்தியாவும் செய்ய வேண்டிய பணி.
ஏனென்றால்
மோடி ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கும் எதிரி.
இந்திய மக்களின் முன்னேற்றத்திற்கும், ஒற்றுமைக்கும், சுய மரியாதைக்கும் கருத்துரிமைக்கும், ஜனநாயகத்திற்கும் எதிரி.
அதனால்
ஒட்டு மொத்த இந்தியாவும் மோடியை நிராகரிக்க வேண்டும்.
Tuesday, March 26, 2024
இனி "பாரத்மாதா கீ ஜெய்" கிடையாதா சங்கிகளா?
Monday, March 25, 2024
வண்ணமயமாகட்டும் இந்தியா!
ஒற்றைத்தன்மையை திணிக்க முயலும் பாஜகவை நிராகரித்து இந்தியாவின் பன்முகத் தன்மையை பாதுகாப்போம்.
இந்தியாவை பாதுகாக்க இந்தியா அணியை வெற்றி பெறச் செய்வோம்.
ஹோலி பண்டிகை போல வாழ்வும்