Thursday, April 16, 2026

ரஜினி&கமல் - பாஜக காப்பி

 


ஸ்டிக்கர் ஒட்டுவது என்ற கலாச்சாரம் சென்னை பெரு மழையின் போது ஏ1 ஜெயலலிதா ஆரம்பித்து வைத்தது.

திமுக அரசோ இல்லை வேறு எந்த மாநில அரசோ எந்த ஒரு புதிய மக்கள் நலத் திட்டத்தை அறிமுகம் செய்தாலும் அவர்கள் எங்களைப் பார்த்து காப்பி அடித்து விட்டார்கள், ஸ்டிக்கர் ஒட்டி விட்டார்க்ள் என்று கதை விடுவார்கள், மோடிக்கும், மோடி வகையறாக்களுக்கும் மக்கள் நலன் என்பதற்கும் ஸ்னானப் ப்ராப்தி கூட கிடையாது என்றாலும். 

அப்படி மற்றவர்களை ஸ்டிக்கர் பாய்ஸ் என்று சொல்பவர்கள் காப்பி அடித்த கதைதான் இந்த பதிவு.

ரஜினியும் கமலும் மீண்டும் இணையவுள்ள படத்திற்கான ப்ரோமா வீடியோ வைரலான ஒன்று.

அதை அப்படியே காப்பியடித்து கமலஹாசன், ரஜினிகாந்திற்கு பதிலாக பில்லா, ரங்கா கிரிமினல் கூட்டாளிகளை கொண்டு வந்துள்ளனர்.




மோடி சொல்லும் வளர்ச்சி என்பது இன்னும் வரவில்லை என்பதையும் அதற்கு இன்னும் 21 ஆண்டுகள் ஆகும் என்று தமிழ்நாடு பாஜகவே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டது.

காப்பி காணொளியை தயாரித்தவர்கள் கொஞ்சம் புத்திசாலிகள். ஒரிஜினலில் வயதான ரஜினி, கமலைப் பார்த்து இளம் பெண்கள், அரைகுறை ஆடைகளோடு மெய்மறந்து பார்ப்பதாக, கொஞ்சம் கேவலமாகவே இருக்கும். காப்பியில் அதை வெட்டி விட்டார்கள். AI யில் தயார் செய்தபோது  அந்த இளம் பெண்களைப் பார்த்து வயதானவர்கள் ஜொள்ளு விடுவது போல அவர்களின் உண்மையான குணாம்சத்திற்கு ஏற்ப வந்திருக்கும் போல! அதனால் வெட்டியிருப்பார்கள். 

ஒரிஜினல் காணொளியில் "யார் ஹீரோ?" என்ற கேள்வி வரும். இங்கே அந்த கேள்விக்கே இடமில்லை. அப்படிப்பட்ட கேள்வி வருமானால் கேட்டவர்களின் பதவி அவ்வளவுதான். 

பிகு: எழுதி ரொம்ப நாளாச்சிதான். இன்று கருப்பு சட்டை அணியும் நாள் அல்லவா! அதனால் அமித்ஷா கருப்பு சட்டை போட்ட படம் உள்ளதால் இன்று பகிர்ந்து விட்டேன். 

Wednesday, April 15, 2026

மகளிர் இட ஒதுக்கீடு என்ற பெயரில்

 


"நீங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்களா இருந்தீங்க, இன்னிக்கு நீங்களும் என்னை மாதிரியே மாறிட்டீங்க, நான் செஞ்ச தவறிலயே பெரிய தவறு இதுதான்"

உதிரிப்பூக்கள் திரைப்படத்தில் குளத்தில் இறங்கி தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற ஊரின் முடிவை நிறைவேற்ற குளத்திற்குள் இறங்கும் முன்பு விஜயன் பேசும் வசனம் அது.

மகளிர் இட ஒதுக்கீடு வேணும்னு கேட்டுக்கிட்டு இருந்த உங்க எல்லாரையும் இன்னிக்கு மகளிர் இட ஒதுக்கீடு வேண்டாம்னு சொல்ல வச்சுட்யேன். நான் செஞ்சதுலயே மிகப் பெரிய சாதனை இதுதான்.

-இதுதான் மோடியின் மனதில் ஓடும் வசனமாக இருக்கும்.

நாளை மோடி கொண்டு வரப்போகும் மசோதாவால் தொகுதி எண்ணிக்கைகள் எப்படி மாறும் என்பதை கீழே உள்ள பட்டியல் உணர்த்தும். 


இப்போதுள்ள 545 என்ற எண்ணிக்கையின் விகிதத்தின் படி 850 ற்கு உயர்த்தினால் 203 இடங்களை பெற வேண்டிய தென்னிந்திய மாநிலங்கள் 166 இடங்களை பெறுவதும் 313 இடங்களை பெற வேண்டிய இந்தி பேசும் வட மாநிலங்களான உபி,மபி, பீகார், குஜராத், ராஜஸ்தான் 367 இடங்களை பெறும். 

இதை மோசடி என்றழைக்காமல் வேறென்ன சொல்வது?

இதனை கண்டிப்பாக முறியடிக்க வேண்டும். 

காங்கிரஸ் கட்சி என்ன செய்யப் போகிறது? 

அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டம் பற்றி நான் கடந்த ஒரு வாரமாகச் சொல்லி வரும் அச்சம் இன்று நிரூபணமாகியிருக்கிறது
மக்களவையில் தமிழ்நாட்டின் எண்ணிக்கை தற்போது 39. இது 58 ஆக உயரும் என்று சொன்னார்கள். இது வெறும் மாயை என்று நான் சொன்னேன்
தொகுதி மறுவரையறை செய்யும் போது 58 என்பது 46 ஆக குறையும்
அதே நேரத்தில், உத்தர பிரதேசத்தின் தற்போது எண்ணிக்கை 80. இது முதலில் 120 ஆக உயரும், தொகுதி மறுவரையறைக்குப் பின் சுமார் 140 ஆக மேலும் உயரும்
மக்கள் தொகையை நிலைப்படுத்திய 5 தென் மாநிலங்களின் தற்போதைய பிரதிநித்துவம் 24.3%. இது குறைந்து 20.7% ஆகும்
மக்களவையில் தென் மாநிலங்களின் குரல் அழுத்தப்படும், ஒடுக்கப்படும்
அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை ஒற்றுமையாக எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்

மேலே உள்ளது முன்னாள் ப.சிதம்பரம் சொன்னது. இவர் சொல் காங்கிரஸ் அம்பலம் ஏறுமா? பப்பு என்ற குற்றச்சாட்டை நிஜமாக்கிக் கொண்டிருக்கிற ராகுல் காந்தியும் அவரது ஆலோசகர்களான மாணிக்கம் தாகூர், கிரிஷ் சோடங்கர், ஜோதிமணி போன்ற பாஜக ஸ்லீப்பர் செல்களும் யோசிக்க விடுவார்களா?

மோடி செய்வது ஜனநாயகக் குற்றம் என்றால் அதை காங்கிரஸ் ஆதரித்தால் அது ஜனநாயகத் துரோகம்.

கடந்த கால அனுபவம் அந்த அச்சத்தை உருவாக்கியுள்ளது. அதை காங்கிரஸார்தான் போக்க வேண்டும்.

மோடிக்கு வாரிசாகும் தகுதியுள்ள மோசடிப்பேர்வழி

 


கீழேயுள்ள புகைப்படத்தில் உள்ள முகத்தை நன்றாக மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.


ராஜ்யசபாவிற்கு துரத்தப்பட்ட நிதீஷ்குமாருக்குப் பதிலாக பீகார் முதலமைச்சராக இன்று பதவியேற்கவுள்ள சாம்ராட் சவுத்ரி.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் கௌரவ டாக்டரேட் பட்டம் பெற்றதாக,

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்றதாக இவர் தேர்தல் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பிரச்சினை என்னவென்றால் ஐயா, பத்தாம் க்ளாஸே பாஸ் செய்யவில்லை. 

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் நிஜமாகவே இவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தார்களா? எதற்கு கொடுத்தார்கள் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது.

பனிரெண்டாம் வகுப்பு கூட படிக்காதவர்கள், திறந்த வெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வியில் பட்டப்படிப்பு  படிக்க தொடங்குவதற்கு முன்பாக ஒரு அடிப்படை வகுப்பில் பங்கேற்க வேண்டும். அதில் கலந்து கொண்டது மட்டுமே இவரது உயர் தகுதி.

எம்.ஏ (எண்டயர் பொலிட்டிக்கல் சைன்ஸ்) படித்ததாக கதை விடும் மோடிக்கு பொருத்தமான வாரிசு இவர்தானே!

பிரதமராக, முதல்வராக படிப்பு அவசியமா என்ற கேள்வியோடு சில மேதாவிகள் வருவார்கள். 

மோடியும் சௌத்ரியும் படிக்காதது பிரச்சினை இல்லை. படித்ததாக பொய் சொன்னதுதான் பிரச்சினை. 

Tuesday, April 14, 2026

காப்பான் வில்லனும் விவசாயிகள் விரோத நிர்மலா அம்மையாரும்

 


காப்பான் திரைப்படத்தின் ஒரு காட்சியை கீழேயுள்ள காணொளியில்  பாருங்கள். 



அந்த வில்லனின் இடத்தில் அதானி, அம்பானியை வைத்துப் பாருங்கள்.  வில்லனின் ஆலோசனையை மறுக்கும் ஆர்யா, சூர்யாவின் இடத்தில் தமிழக, கேரள முதல்வர்கள்,  கம்யூனிஸ்டுகள், விவசாய சங்கங்கள், எதிர்க்கட்சிகள்  ஆகியோரை வைத்துப் பாருங்கள்.

காட்சியின் இறுதியில் வில்லன் கொதிப்பது போலத்தான் இப்போது நிர்மலா அம்மையார் கொதித்துக் கொண்டிருக்கிறார்.

திரைப்படத்தின் இறுதியில் எப்படி வில்லனின் சூழ்ச்சி முறியடிக்கப்படுமோ அது போல நெல், கோதுமை உற்பத்தியை நாசமாக்க நினைக்கும் மோடி, நிர்மலா வகையறாக்களின் சதியும் தோற்றுப் போகும்.

பிகு: காப்பான் திரைப்படத்தை முதல் முறை பார்க்கும் போது பிரதமர் மோகன்லால் தாடி வைத்திருந்ததால் மோடியை குறிப்பிடுகிறார்களோ என்று நினைத்தேன். இன்னொரு முறை தொலைக்காட்சியில் பார்த்த போதுதான் நான் நினைத்தது தவறு என்று புரிந்தது. அது தனி பதிவாகவே எழுத வேண்டிய ஒன்று. 



Monday, April 13, 2026

விவசாயிகளும் மக்கு மந்திரி நிர்மலாவும்

 


"நெல் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு தனியாக ஊக்கத் தொகை அளிப்பதால் நெல் உற்பத்தி அதிகமாகிறது. அதனால் பல பிரச்சினைகள் வருகிறது. எனவே நெல்லுக்கு மாநில அரசு தரும் ஊக்கத் தொகையை நிறுத்த வேண்டும்"

என்று நிதியமைச்சகம் தமிழ்நாட்டு அரசுக்கு கடிதம் அனுப்பியதாக முதல்வர் குற்றம் சுமத்தினார்.

அப்படியெல்லாம் நான் ஒன்றும் எழுதவில்லை என்று நிர்மலா அம்மையார் சாதித்தார்.

நிதியமைச்சகம் அனுப்பிய கடிதத்தை முதல்வர் பகிரங்கப் படுத்தி விட்டார்.


இந்த கடிதம் நெல் மற்றும் கோதுமை உற்பத்தி செய்யும் விவசாயிகள் மீது வன்மத்தை கக்குகிறது.

நெல் மற்றும் கோதுமை பயிரிடுவதால் அதிக தண்ணீர் செலவாகிறது, உரப்பயன்பாடு அதிகரிக்கிறது. மண்ணே நாசமாகிறது, வைக்கோலை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசடைகிறது என்றெல்லாம் அடுக்கி விட்டு பருப்பு பயிரிடு, பருத்தி நடு, எண்ணெய் வித்துக்கள் போடு என்று உபதேசிக்கிறது அக்கடிதம்.

வெங்காயம், பூண்டு சாப்பிட மாட்டேன், அதனால் அவற்றின் விலை உயர்வு பற்றி தெரியாது என்று நிர்மலா அம்மையாருக்கு விவசாயம் பற்றி என்ன தெரியும்? எந்த மண்ணில் எந்த காலத்தை என்ன பயிரிடுவது என்று விவசாயிகளுக்கு தெரியுமா? இல்லை இந்த மக்கு மந்திரிக்கு தெரியுமா?

கோதுமை, நெல் பயிரிடாவிட்டால் உணவுக்கு மக்கள் என்ன செய்வார்கள்? பருத்தியை உண்ண முடியுமா? ரொட்டியோ, சோறோ இல்லாமல் பருப்பை வைத்து என்ன செய்ய?

விவசாயிகள் பற்றியோ மக்கள் பற்றியோ கவலையில்லாத மக்கு மந்திரி நிர்மல, தன் அமைச்சகம் அனுப்பிய கடிதத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? தன் அமைச்சகம் அனுப்பிய கடிதமே தனக்கு தெரியாமல் அனுப்பப்பட்டு விட்டது என்று மக்குத்தனமாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பாரா அல்லது வழக்கம் போல ஆணவமாக குரைப்பாரா? 

தந்தை நாட்டின் பெயர் சொல்ல தைரியமில்லையா மோடி?

 


இரான்-அமெரிக்கா போர் நிறுத்தம் இருக்கும் சூழலில் அதனை சீர்குலைக்க லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி நூற்றுக் கணக்கான அப்பாவி மக்களை கொன்றது.

அத்தாக்குதல் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. வெண்டைக்காயையும் விளக்கெண்ணெயையும் சேர்த்து ஒரு அறிக்கை.

லெபனான் மீதான தாக்குதலுக்காகவும் உயிரிழப்பிற்காகவும் வருந்தி இனி இப்படி ஒரு தாக்குதல் நடக்காமல் இருப்பது நலம் என்ற ரீதியில் அந்த அறிக்கை செல்கிறது.

தாக்குதல் நடத்திய இஸ்ரேல் கண்டிக்கப்படவே இல்லை. ஏன் இஸ்ரேலின் பெயர் கூட எந்த இடத்திலும் இல்லை.

தந்தை நாட்டின் மீது அவ்வளவு பயமா மோடி?

இஸ்ரேல் உங்களுக்கு கொடுத்த ‘Speaker of the Knesset Medal’  விருதை பறித்து விடுவார்கள் என்ற பயமா?

Sunday, April 12, 2026

பிரகாஷ்ராஜ் சீனை கிறுக்குத்தனமாய் காப்பியடித்த விஜய்

 


"கோ" திரைப்படத்தில் ஒரு காட்சியில் காரில் வரும் முதலமைச்சர் பிரகாஷ்ராஜ், பேட்டியெடுக்கும் கார்த்திகாவிடம் கடுப்படித்தபடி சாலையில் இறங்கி நடக்கத் தொடங்குவார். மிகப் பெரிய போக்குவரத்து நெரிசல் உருவாகும். "என் கெத்தை பாத்தியா, மக்கள் மத்தியில எனக்கு இருக்கிற மரியாதையை கவனிச்சியா" என்ற படி மீண்டும் காரில் உட்கார்ந்து கொள்வார்.

அது திரைப்படக் காட்சி.

அந்த காட்சியை இன்று காப்பியடித்தார் தமிழக ரத்துக் கழகத்தின் தலைவர் விஜய்.

திடீரென (முன் கூட்டியே திட்டமிட்ட படி) சைக்கிள் ஓட்ட ஆரம்பித்து விட்டார்.


கேரவனில் போனாலே பின்னால் தொடரும் மூட ரசிகர்கள் கூட்டம் சைக்கிளில் போனால் சும்மா விடுமா?

விபத்துக்களும் நெரிசல் மரணங்களும் நடப்பதற்கான வாய்ப்புக்கள் தோன்றினாலும் அதிர்ஷ்டவசமாக எதுவும் நடக்கவில்லை.

சினிமா சீன் போல கிறுக்குத்தனம் செய்த விஜயின் சைக்கிள் பயணம், அவரது தற்குறிகளில் ஒருவர் பட்டாசு கொளுத்துப் போக அவர் பயந்து போய் கேரவனில் ஏற நிறைவுக்கு வந்தது.

துரதிர்ஷ்டவசமாக ஏதாவது நடந்திருந்தால் தன் கிறுக்குத்தனத்தை மூடி மறைக்க திமுக மீது பழி போட்டிருப்பார் விஜய். 

தமிழ்நாட்டு அரசியலின் துயரம் விஜய்