Monday, December 1, 2025

பிரபாகரனை செஃபாகவே முன்னிறுத்தும் சீமான்

 


பிரபாகரனை சீமான் வெறும் பத்து நிமிடம்தான் சந்தித்தார் என்று விஷயம் தெரிந்தவர்கள் முன்பே சொல்லியுள்ளனர். ஒரே ஒரு புகைப்படம் மட்டும்தான் எடுத்துக் கொண்டுள்ளார். அது கூட இவர் பெருமையுடன் காண்பிக்கும் படமல்ல, அது  போட்டோஷாப் செய்யப்பட்டது என்று போட்டோஷாப் செய்தவரே சொல்லியுள்ளார்.

ஒரு இயக்கத்தின் தலைவராக இருந்தவரை சீமான் இதுவரை எப்படியெல்லாம் முன்னிறுத்தியுள்ளார்.

இவருக்கு ஆமைக்கறி செய்து கொடுத்ததாக சொல்லியுள்ளார்.

அடுத்து இட்லிக்குள் கறியை வைத்து கொடுத்ததாக சொல்லியுள்ளார்.

இவர் சாப்பிடும் பொருட்களை துல்லியமாக கவனித்து அதற்கேற்றார் போல அடுத்த வேளை சாப்பாடுகளை போட்டார் என்றும் சொல்லி உள்ளார்.

இதோ இப்போது மான் ஊறுகாய் சாப்பிடச் சொன்னதாக சொல்லியுள்ளார். 

அந்த காணொளியை இங்கே பாருங்கள்.


"அடேய் சீமான், நான் ஒரு இயக்கத்தின் தலைவனடா! என்னை ஒரு செஃப் என்ற அளவில் சுருக்கிவிட்டாயடா"

என்று கேட்க பிரபாகரன் இல்லாத துணிவுதான் சீமானுக்கு. . .

எல்லோரும் தற்குறி வெட்டிக் கழகத்தைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள் என்று கவன ஈர்ப்புக்காகக் கூட சீமான் இந்த கதையை உருட்டியிருக்கலாம். 


பிகு என்னத்தான் கதை விட்டாலும் சீமான் எச்சரிக்கையான மனிதர்தான். இதே மான் ஊறுகாயை இந்தியாவில் சாப்பிட்டதாக உருட்டியிருந்தால் சிறைக்கு போக வேண்டியிருக்கும் என்று தெரிந்தவர் அல்லவா அவர்!

Sunday, November 30, 2025

என்ன ரங்கசாமி அங்கிள் பயமா? - விஜய்???

 


புதுச்சேரியில் விஜய் நடத்த திட்டமிட்டிருந்த சாலைக் காட்சி (ROAD SHOW) க்கு புதுச்சேரி அரசு அனுமதி மறுத்து விட்டது.

கரூர் போல சம்பவம் நடக்கக்கூடாது என்ற அச்சத்தால் அனுமதியை மறுத்துள்ளார்கள்.

அதனால்

விஜய் அடுத்த காணொளியில் "என்ன ரங்கசாமி அங்கிள், என்னைப் பார்த்து பயமா? " என்று கேட்பார் என்று நம்புகிறேன்.

கேட்டாலும் கேட்கலாம்.

ஆனால்

காவல்துறையை கவனிக்கிற புதுவை உள்துறை அமைச்சரும் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஒரு கோஷ்டியோடு பாஜகவிற்கு தாவி அதிகாரத்தை தொடர்ந்து ருசிக்கும் நமச்சிவாயத்தை கேட்பாரா?

அதெப்படி கேட்பார்?

என்ன இருந்தாலும் பாஜகவின் அங்கம்தானே தவெக!!!!

Saturday, November 29, 2025

மோடி அரசு - நேற்றைய உண்மையும் இன்றைய பொய்யும்

 


நேற்றைய ஆங்கில இந்துவின் முதல் பக்கத்தில் வெளியான செய்தி கீழே. 


பன்னாட்டு நிதி நிறுவனமான ஐ.எம்.எஃப், இந்தியாவின் கணக்கிடும் முறைகளுக்கும் புள்ளி விபரங்களை சேகரிக்கும் விபரங்களுக்கும்  'சி" தரம் அளித்துள்ளது. ஒட்டு மொத்த உற்பத்தி உட்பட பல்வேறு முக்கியமான அளவீடுகளை கணக்கிடுவதில் ஏராளமான குறைபாடுகள், தவறுகள், தில்லுமுல்லுகள் இருப்பதால்தான் இந்தியாவிற்கு "சி" தரம் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய முதல் பக்கத்து செய்தி நேற்றைய செய்தியுடன் தொடர்பானது. ஆமாம்.  இந்தியாவின் ஒட்டு மொத்த உற்பத்தியில் இரண்டாவது காலாண்டில் 8 % வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக சொல்கிறது.


ஒட்டு மொத்த உற்பத்தியை கணக்கிடுவதில்  இந்தியா தில்லுமுல்லு செய்வதாக நேற்றைய செய்தி சொன்னது. ஒட்டு மொத்த உற்பத்தியில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக இன்றைய செய்தி சொல்கிறது.

மோடி அரசு எதைச் சொன்னாலும் அது டுபாக்கூர் செய்திதான். 

Friday, November 28, 2025

பல தார மண தடைச்சட்டத்தின் நோக்கம் என்ன?

 


அஸ்ஸாம் மாநில அரசு பல தார மணத்தை தடை செய்து சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது. 

முதல் மனைவி உயிருடன்  இருக்கையில் இன்னொரு திருமணம் செய்பவர்களுக்கும்

அத்திருமணத்தை செய்து வைக்கிற

பூஜாரி, பாதிரியார், மௌல்வி  ஆகியோருக்கும்

சிறைத்தண்டனை கிடைக்கிற வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

மேலோட்டமாக பார்க்கையில் இது சரியான சட்டமாகவும் முதல் மனைவியை ஏமாற்றும் கணவனுக்கு தண்டனை கிடைக்க வழி வகுக்கும் சட்டமாகவும் தோன்றலாம்.

இந்த சட்டம் யாருக்கெல்லாம் பொருந்தாது என்று கொடுக்கப்பட்டுள்ள விளக்கம்தான் இச்சட்டத்தின் நோக்கத்தை அம்பலப்படுத்துகிறது.

பழங்குடி இன மக்களுக்கும் ஆறாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இச்சட்டம் பொருந்தாது என்று விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் செய்வது அந்த பகுதிகளில் உள்ளவர்களின் பழக்கமாக உள்ளதால் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளிக்கிறார்கள்.

அப்படிப் பார்த்தால் இஸ்லாமியர்களிடமும் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்கிற பழக்கம் உள்ளதே! அதை அவர்களின் மதமும் அனுமதிக்கிறதே! (இன்றைய பொருளாதார சூழலில் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் அரிதாகிக் கொண்டிருக்கின்றன என்பதுதான் யதார்த்தம்) அப்படி இருக்கையில் அவர்களுக்கும் விலக்கு அளிக்கலாமே! 

பல தார மணம் செய்யும் ஆண்களிடமிருந்து பெண்களை காப்பதுதான் அஸ்ஸாம் பாஜக அரசின் நோக்கமாக இருந்திருந்தால் யாருக்குமே விலக்கு கொடுத்திருக்காது. பழக்கம் என்று சொல்லி ஒரு சாராருக்கு விதிவிலக்கு அளித்து அதே பழக்கம் உள்ள இன்னொரு சாராரை சட்டத்திற்கு உட்படுத்தினால் அதற்கு ஒரே ஒரு நோக்கம்தான் உண்டு.

இஸ்லாமியர்களை அச்சத்திலேயே வாழ வைப்பது . . .

ஊழல் குற்றச்சாட்டு காரணமாக காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவிற்கு தாவி மோடி வாஷிங் மிஷினால் சுத்தம் செய்யப்பட்ட ஆள்தான் அஸ்ஸாம் முதல்வர் ஹிமானந்த பிஸ்வாஸ்.

பரம்பரை சங்கிகளை விட மிகவும் மோசமாக பஞ்சத்துக்கு சங்கிகள் ஆனவர்கள் நடந்து கொள்வார்கள். இது அதற்கொரு உதாரணம். 

இதை நான் என் அனுபவத்திலும் உணர்ந்திருக்கிறேன். 


Thursday, November 27, 2025

விஜய் - செங்கோட்டையன் கொலைகாரக் கூட்டாளிகள்

 


நேற்று ஊடகங்கள் எதிர்பார்த்தபடி இன்று செங்கோட்டையன் தவெக வில் சேர்ந்து விட்டார். 

இது மிகவும் பொருத்தமான கூட்டணிதான்.

பொறுப்பற்ற அணுகுமுறையால் 41 பேர் மரணத்திற்கு காரணமானவர் விஜய்.

வனத்துறை, காவல்துறை யால் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளான வாச்சாத்திப் பெண்களுக்கு நியாயம் கிடைப்பதற்காக போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இன்றைய மாநிலச் செயலாளரும் மலைவாழ் மக்கள் சங்கத்தின் அன்றைய மாநிலப் பொதுச்செயலாளருமான தோழர் பெ.சண்முகத்தை கொலை செய்ய திட்டமிட்டவர் செங்கோட்டையன்.

என்ன சந்தேகமாக இருக்கிறதா?

கீழே உள்ள காணொளியை பாருங்கள்


இப்போது  சொல்லுங்கள்.

இந்த கொலைகாரக் கூட்டணி பொருத்தம்தானே !!!!

பிகு: மேலே உள்ள படம் சிங்கம் 2 படத்தில் இரண்டு போதை மருந்து கடத்தல் கூட்டாளிகள் சந்திக்கையில் எடுக்கப்பட்டது. . .

ஜி.கே.வாசன் காட்டில இனிமே 😝😝😝😝😝


ஜி,கே.வாசன் கட்சிக்கு மிகப் பெரிய சம்பவம் இனிமேல்தான் நடக்கவுள்ளது. 

ஆமாம்.




அகில உலக தரகுப்புயல், செல்லுமிடங்களில் எல்லாம் சீரழிவை உருவாக்கிய, அரசியலுக்கு வரும் முன்னே ரஜினியை அரசியலில் இருந்து துரத்திய த.அ.மணியன் வாசன் கட்சியில் சேர்ந்து விட்டாராம்.

ஏதோ அப்பாவோட பழைய பெருங்காய டப்பியை வச்சு ஒரு எம்.பி சீட் ஓசில வாங்கி பாஜகவுக்கு ஜால்ரா அறிக்கை கொடுத்துக்கிட்டு இருந்தாரு வாசன்.

இனிமே தரகுப்புயல் ஐயா, அந்த கட்சியை சர்வ நாசம் செய்யாமல் இருக்க மாட்டாரு!

ஆனா தரகுப்புயல் ஐயா, நீங்க போயிருக்க வேண்டிய இடம் த.வெ.க. அநேகமா வாசனை முடிச்ச பின்னாடி அங்கே போவீங்களோ?

Wednesday, November 26, 2025

கவுண்டமணி பிடித்த திமிங்கலமும் தவெக ......

 


சின்னவர் திரைப்படத்தில் கவுண்டமணியின் வலைக்குள் ஏதோ பெரிதாக சிக்கிக் கொள்ளும். அது என்னவென்று தெரியும் முன்பே அது திமிங்கலம் என்றும் பல் பல லட்சம், தோல் ஒரு கோடி, மாமிசம் சில கோடி என்று சக மீனவர்கள் சொல்ல, இவரும் தன் எதிர்காலத்தில் என்னவெல்லாம் செய்யப் போகிறேன் என்றும் அளப்பார். 

கிட்டத்தட்ட கவுண்டமணி போல தவெக ஆட்கள் கனவு கொண்டிருக்கிறார்கள். அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெக வந்தால் அவருக்கு அமைச்சர் பதவி கொடுப்பதா இல்லை துணை முதல்வர் பதவி கொடுப்பதா என்று விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.



கவுண்டமணியின் வலையில் சிக்கியது என்ன?

அவரின் முறைப்பெண் கோவை சரளாவை காதலிக்கும் செந்தில். 

கடைசியில் கவுண்டமணியின் வலைதான் கிழிந்து போகும்.