Thursday, February 5, 2026

அவர்கள் அவர்கள்தான். ஆனால் அவர்களா?

 


நேற்று மணிப்பூரில் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது.

யும்மாம் கேம்சந்த்சிங் என்ற மெய்தி இனத்தவர் முதலமைச்சராகவும் நிம்சேன் கிப்கேன் என்ற குக்கி இனப் பெண் எம்.எல்.ஏ வும் லோசில் டிகோ என்ற நாகா இனத்தவரும் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர். 

மணிப்பூரில் உள்ள அனைத்து குக்கி மற்றும் நாகா அமைப்புக்கள், அரசில் தங்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் இணையக்கூடாது என்றும் தாங்கள் வாழும் பகுதியை தனியான யூனியன் பிரதேசமாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

அவர்களை பாஜக அரசு தாக்கியதன் ஒடுக்கியதன் விளைவு அது. மத்திய அரசின் மீதும் மோடியின் மீதும் அவர்கள் எப்போதோ நம்பிக்கை இழந்து விட்டனர். புதிதாக உருவான அமைச்சரவை ஒரு வெத்து வேட்டு என்பதையும் அவர்கள் அறிவார்கள். 

அவர்கள் சந்தித்த இன்னல்கள், கொடுமைகள், பெண்களுக்கு ஏற்பட்ட அராஜகங்கள், இழந்த உயிர்கள், அழிந்த உடமைகள் அப்படிப்பட்ட நிலைமைக்கு அவர்களை தள்ளியுள்ளன.

இந்த சூழலில் குக்கி இனத்தையும்  நாக இனத்தையும் சேர்ந்தவர்களை துணை முதலமைச்சராக்கினால் பிரச்சினை தீரும் என்று சாணக்கியத்தனமாக முடிவெடுத்துள்ளதாக  பாஜக  கருதுகிறது.

நிம்சேன் கிப்கேனும்  லோசில் டிகோவும் குக்கி, நாகா இனத்தவர்கள்தான். ஆனால் அந்த இனத்தை பிரதிநிதித்துவப் படுத்துபவர்களா? அவர்களின் நியாயத்திற்காக குரல் கொடுத்தவர்களா? அம்மக்களின் நம்பிக்கையை பெற்றவர்களா?

இல்லை,

இல்லவே இல்லை.

இதுதான் யதார்த்தம். 

அந்த இனங்களை சேர்ந்தவர்களை துணை முதல்வராக்குவது என்பது பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற விருப்பத்தின் பேரில் செய்யப்பட்டது அல்ல. எப்படி ராம்நாத் கோவிந்த் ஒரு பொம்மையாக இருந்தாரோ, எப்படி திரௌபதி முர்மு பொம்மையாக இருக்கிறாரோ, அது போன்ற பொம்மைகளாக இருக்க பதவி கொடுக்கப்பட்டவர்கள். 

அதனால் அமைதிக்கு வாய்ப்பில்லை.

பிகு: நேற்று மாநிலங்களவையில் கமலஹாசனின் உரை நன்றாக இருந்தது என்பதை இரண்டு மூன்று முறை பார்த்து கேட்ட பின்பே புரிந்தது. எளிய மொழியில் நேரடியாக இருந்திருந்தால் வீச்சு இன்னும் நன்றாகவே இருந்திருக்கும்.

ஒரு குழப்பமான தலைப்பை வைக்க அவரது உரையே காரணமாக இருந்தது. 

 

Wednesday, February 4, 2026

தற்காலிக நீதிபதிகள் - அராஜகம்

 


நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு (Collegium) மிக மிக மோசமான முடிவொன்றை எடுத்துள்ளது.

ஓய்வு பெற்ற ஐந்து நீதிபதிகளை அலகாபாத் நீதிமன்றத்தின் தற்காலிக நீதிபதிகளாக இரண்டாண்டு காலத்திற்கு நியமித்துள்ளார்கள்.

இதன் பொருள் என்ன?

புதிதாக நீதிபதிகளை தீர்ந்தெடுக்க உங்களுக்கு மனமில்லையா இல்லை புதிய நீதிபதிகளாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தகுதி உள்ளவர்கள் மொட்டைச் சாமியாரின் உபி மாநிலத்தில் யாரும் இல்லையா?

மத்திய, மாநில அரசுகளுக்கு ஒத்துப் போகக் கூடிய நீதிபதிகளை புதிதாக கண்டுபிடித்து பயிற்சி கொடுப்பதற்கு பதிலாக பழையவர்களே வசதி என்று நினைத்தார்களோ!

ஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் வேலை கொடுப்பது என்பது அரசுத் துறையோ இல்லை  வேறு நிறுவனமோ  மிக மிக மோசமானது. இளைஞர்களுடைய வாய்ப்பை பறிக்கிற அராஜகம்.

இது மிக மிக மோசமான உதாரணம். . . .


எடப்பாடி துரத்தும் முன்பு ஆட்டுக்காரனே . . .

 


தன் தந்தையின் உடல் நலனை கவனித்துக் கொள்வதற்காக தெர்தல் பொறுப்புக்களிலிருந்து விலகுவதாக ஆட்டுக்காரனின் அறிவிப்பு வெளி வந்துள்ளது.


எங்களோடு கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டுமானால் ஆட்டுக்காரனை தலைவர் பதவியிலிருந்து தூக்க வேண்டும் என்ற எடப்பாடியின் நிபந்தனைக்கு பாஜக ஏற்கனவே அடி பணிந்திருந்தது.

ஆனாலும் ஆட்டுக்காரனின் அல்லக்கைகள் ஆட்டுக்காரனை அடுத்த முதல்வர் என்ற ரேஞ்சில் பில்ட் அப் கொடுத்த வந்த போதே சிக்கல் வரும் என்று எதிர்பார்த்தேன்.

வந்து விட்டது என்றே தோன்றுகிறது.

 ஆட்டுக்காரனை கட்சியிலிருந்தே தூக்க வேண்டும் என்று எடப்பாடி வெளிப்படையாக சொல்வதற்கு முன்பாக, ஆட்டுக்காரனே உஷாராகி விலகியதுதான் யதார்த்தம் என்று சின்னக்குழந்தைகளுக்குக் கூட தெரியும்.


Tuesday, February 3, 2026

மீண்டும் மோடியை சிறைப்படுத்திய ட்ரம்ப்

 


இந்தியாவை மோடி மீண்டும் அமெரிக்காவிடம் அடமானம் வைத்துள்ளார். 

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கியதை நிறுத்தியதற்காகவும்
அமெரிக்காவிடமிருந்தும் எதிர்காலத்தில் வெனிசுலாவிடமிருந்து வாங்க ஒப்புக் கொண்டதற்காகவும்,
அமெரிக்கப் பொருட்களுக்கான வரியை பூஜ்ஜியமாக்குவதற்கு ஒப்புக் கொண்டதற்காகவும்

அமெரிக்கா இந்தியப் பொருட்களுக்கான வரியை மனமிறங்கி 25 % லிருந்து  18 % ஆக குறைக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

இதை ட்ரம்ப் அதிகாரபூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.


இதெல்லாம் ஒரு டீலா மோடி?

இப்படி இந்திய நலனுக்கு எதிராக செயல்பட வெட்கமில்லையா?

இதிலே 56 இஞ்சர் என்று பெருமை வேறு.

அதாம்லே நிர்மலா சீத்தாராமன் !

 


நிர்மலா அம்மையார் பட்ஜெட்டில் கொடுத்துள்ள ஒரு அறிவிப்பு கீழே உள்ளது.


கடலே இல்லாத வாரணாசியிலும் பாட்னாவிலும் கப்பல் ரிப்பேர் மையம் எப்படி சாத்தியம் என்று எல்லோரும் கிண்டலடித்துள்ளார்கள்.

ஐடியா இல்லாத ஆளுங்க!

அவங்களுக்கு நிர்மலா அம்மையாரின் ப்ளானே தெரியலை.

வாரணாசியிலும் பாட்னாவிலும் கப்பல் ரிப்பேர் சென்டருக்கு கப்பல் வர வேண்டும். அதனால் அருகிலிருந்த கடலிருந்து கப்பல்கள் செல்லும் அளவிற்கு மிகப் பெரிய கால்வாய்கள் தோண்டப்படும். சேது சமுத்திர திட்டத்தை இவர்கள் சீரழித்தாலும் இதனை செயல்படுத்துவார்கள். 

அந்த கால்வாய்கள் தோண்டுவதற்கான ஒப்பந்தம் அதானி, அம்பானிக்கு வழங்கப்படும்.

அந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்காக அதானி, அம்பானிக்கு ஸ்டேட் வங்கி உள்ளிட்ட அரசு வங்கிகள் கடன் தரும்.

எப்படி விமான நிலையங்களும் துறைமுகங்களும் அதானி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோ, அது போல கப்பல் ரிப்பேர் சென்டர்களும் அதானிக்கு வழங்கப்படும். 

அதை வாங்குவதற்கான பணம்?

எதற்கு இருக்கின்றன அரசு வங்கிகள்!

வாங்கிய கடனை அதானி எப்படியும் திருப்பி கட்ட மாட்டார். அதனால் சில வருடங்கள் கழித்து அனைத்து கடனும் தள்ளுபடி செய்யப்பட்டு விடும். 

அதானி, அம்பானிக்கு கொடுக்க எதுவும் இல்லாத போது இப்படி எதையாவது புதிதாக உருவாக்கித்தானே தர வேண்டும்!

அதனால்தான் கப்பல் ரிப்பேர் சென்டர்.

அங்கதான் நிக்கறாங்க நிர்மலா சீத்தாராமன். 

Monday, February 2, 2026

மரண பயத்தில் நடுங்கிய பாஜக . . .


 பாஜகவினர் இன்று மரண பயத்தில் நடுங்கிப் போய் விட்டனர். 

முன்னாள் ராணுவத் தளபதி இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே எழுதிய “விதியின் நான்கு நட்சத்திரங்கள்” (Four Stars of Destiny) என்ற புத்தகத்தின் ஐந்து வரிகளை வாசிக்கவிடாமல் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சரும் உள்துறை அமைச்சரும் கடந்த ஒன்றரரை மணி நேரமாக நாடாளுமன்றத்தில் போராடினர்.

அப்படி என்ன எழுதப்பட்டுள்ளது?

ஆகஸ்ட் 31, 2020 அன்று இரவு 8:15 மணிக்கு, சீனாவின் ஆர்மி மற்றும் அதன் நான்கு சீன டாங்கிகள் லடாக்கில் உள்ள ரெசின் லா நோக்கி முன்னேறி வருகின்றன! அவை ஏற்கனவே இந்திய எல்லையில் சில நூறு மீட்டருக்குள் வந்து விட்டன.

இந்திய ராணுவத் தளபதி, ஜெனரல் நரவனே பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோருக்கு அவசர அழைப்புகளை விடுத்து நமது ராணுவத்தை உடனே முன்னேறி, சீனாவின் ராணுவத்தை தடுத்து நிறுத்த அனுமதி கேட்கிறார்!
“நாங்கள் உத்தரவு தரும் வரை துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டாம்” என்று டெல்லியில் இருந்து கட்டளை வருகிறது! சீனராணுவம் தொடர்ந்து முன்னேறுகிறது! நமது ஆர்மி கமாண்டர் உச்ச கட்ட டென்ஷனில் என்ன செய்வதென்று தெரியாது விழி பிதுங்குகிறார்!
சீனர்கள் அவர்களது படைகள் முன்னேறி வருகின்றன! பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்துக்கு அவர் மீண்டும் மீண்டும் வெறித்தனமான அழைப்புகள் அனுப்புகின்றார் .
ஆனால் எந்தப் பயனும் இல்லை. இந்தியாவின் அரசியல் தலைமையிடமிருந்து எந்த தெளிவான செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் எதுவும் டெல்லியில் இருந்து வரவில்லை!
சாத்தியமான அனைத்து வழிகளிலும் துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதி கேட்டு எல்லையில் ராணுவ கமாண்ட் அலறுகிறது! ஆனால் ராணுவத் தளபதிக்கு இன்னும் தெளிவான நிர்வாக உத்தரவுகளை டெல்லியில் உள்ள உயர்மட்ட அரசாங்கக் குழு எந்த உத்தரவும் தராமல் மௌனம் காக்கிறது!
ஒருவழியாக இரவு 10:30 மணிக்கு, பிரதமரிடம் பேசிய பிறகு, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத் தளபதி நரவனேவைத் திரும்ப அழைத்து, பிரதமரின் அறிவுறுத்தல் படி,
“உங்களுக்கு எது சரியென்று படுகிறதோ அப்படிச் செய்து கொள்ளுங்கள்! என்று பொறுப்பில்லாத பதிலைத் தருகின்றார்!

ஆனால் அதற்குள் சீனாவின் ராணுவம் நம்மை ஒரு வழி பண்ணி விட்டது!

ராகுல் காந்தியை பேச விடாமல் எப்படி தடுக்கிறார்கள் என்பதை கீழே உள்ள காணொளியை பாருங்கள்.


குற்றச்சாட்டிற்கு பதில் சொல்ல பாஜகவினர் தயாராக இல்லை. மாறாக பத்திரிக்கையில் சொல்லியதை படிக்கக் கூடாது. பிரசுரிக்கப் படாத புத்தகத்தை படிக்கக் கூடாது என்றெல்லாம்தான் பம்மாத்து செய்கிறார்கள்.

ஏனென்றால் அவர்களுக்குத் தெரியும்,

மோடி ஒரு வெற்று வேட்டு. யாரைக் கண்டாலும் நடுங்கிப் போவார் என்று.

அதனால்தான் ஒட்டு மொத்த பாஜகவினரும் "மரண பயத்தை காண்பிச்சுட்டாங்க பரமா" என்று கதறுகிறார்கள்.

இன்னும் கூட அவர்கள் கதறுவார்கள்.

பிகு" நீல நிறத்தில் இருப்பதை மதுரை தோழர் பகத்சிங்க் அவர்களின் பக்கத்திலிருந்து எடுத்து பகிர்ந்து கொண்டுள்ளேன்.

சங்கிகள் - திருந்த மாட்டார்கள்

 


பாஜகவின் பெரிய சங்கி எச்.ராசா ஒரு நிகழ்வில் பங்கேற்ற போது அவருக்கு உடல் நலன் பாதிக்கப்ப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் மேடையில் சரிந்து விழும் போது திமுக வைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய மருத்துவரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு பெண் மருத்துவரும் உடனடியாக உதவிக்கரம் நீட்டியுள்ளனர். திமுக கொண்டு வந்த தமிழறிஞர் இட ஒதுக்கீட்டுத் திட்டம் மூலம் மருத்துவரான தமிழிசை அம்மையார் அவர்களும் தலையிட்டுள்ளார்.

தமிழிசை நீங்கலாக மற்றவர்களும் தலையிட்டுள்ளது காணொளி ஒன்றில் தெளிவாக தெரிகிறது.

எச்.ராசாவிற்கு மற்றவர்கள் உதவியதை பார்த்த சிலர் பதிவிட்டுள்ளனர். முதல்வர் சென்ற வாகனத்தின் டயர் வெடித்த போது அது முருகன் செயல் என்று உரக்கச் சிரித்த சங்கிகள் போல யாரும் எதுவும் எழுதவில்லை. தமிழ்நாட்டின் மனித நேய மரபை உணர்ந்து இனியாவது எச்.ராசா வெறுப்பரசியலை கைவிடுவார் என்ற நம்பிக்கையைத்தான் தெரிவித்திருந்தார்கள்.

ஆனால் சங்கிகளால் இதனை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர்கள் தலைவருக்கு ஒரு இஸ்லாமியரும் காங்கிரஸ் பெண்மணி ஒருவரும் உதவினார் என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. சில்லறை சங்கிகள் மட்டுமல்ல பெரிய சங்கி தமிழிசை கூட உண்மைகளை மூடி மறைத்து ஸ்டிக்கர் ஒட்டியதாக கதை விடத் தொடங்கினர்.

முதல்வர் சென்று நலன் விசாரித்ததைக் கூட கொச்சைப்படுத்தி உள்ளனர். 

சங்கிகள் மனித நேயம் என்பதற்கு அர்த்தம் தெரியாத, எந்த நாகரீகமும் அற்ற காட்டுமிராண்டிகள்,  

நாளை எச்.ராசா நலம் பெற்று வந்தால் கூட விஷம் போல வெறுப்பைத்தான் கக்குவார். 

அவர்கள் அனைவருமே என்றுமே  திருந்தாத ஜந்துக்கள்.