Tuesday, December 16, 2025

சங்கிகளின் வந்தே மாதர காமெடி - DON'T MISS

 


மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்காக 'வந்தே மாதரம்" பாடலின் 150 ஆவது ஆண்டு என்றொரு நாடகத்தை மோடி வகையறாக்கள் நடத்தினார்கள்.

நாடாளுமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியோடு நிறுத்திக் கொள்ளாமல் மாநிலங்களிலும் நடத்தியுள்ளார்கள்.

அப்படி ராஜஸ்தானில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் 150 ஆண்டுகளுக்கு முன்பாக பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய பாடலுக்கு பதிலாக எந்த பாடலை ஒலிபரப்பியுள்ளார்கள் என்பதை கீழே உள்ள காணொளியில் பார்த்து மகிழ்ந்து சிரியுங்கள். அந்த மாநில முதல்வர் வேறு அங்கே இருந்துள்ளார்.



தங்கள் கட்சித்தலைவர் அமித் ஷாவின் புகைப்படத்திற்கு பதிலாக இயக்குனர் சந்தான பாரதி, அம்மன் பட வில்லன் ஜண்டா ஆகியோரின் படங்களை போட்டு சுவரொட்டி அடித்த கும்பல்தானே!

மகாத்மா பெயரைச் சொல்ல வெட்கமா மோடி



 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் பெயரை Viksit Bharat Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) என்று மோடி அரசு மாற்றியுள்ளது.

மகாத்மா காந்தியை கொன்றவர்கள்  அவரது கொள்கைகளையும் கொன்று விட்டார்கள். அதனால் அந்த கொலைகாரர்களுக்கு ஒரு திட்டத்தின் பெயரில் கூட மகாத்மா காந்தியின் பெயர் இருப்பது வெட்கமாக உள்ளது போல.

அதனால் திட்டத்தின் பெயரை Viksit Bharat Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin)  என்று மாற்றி விட்டார்கள். எந்த எழவாவது புரிகிறதா?

நேருவை இன்றளவும் வசை பாடுகிறார்கள். நேரு அளவிற்கு மகாத்மா காந்தியையும் வசை பாடினால் அசிங்கமாக போய் விடும். அதனால் பெயரை தூக்கி விட்டார்கள்.

இன்னும் மிச்சம் இருப்பது ரூபாய் நோட்டுக்கள் மட்டும்தான். 

அதில் என்றைக்கு கோழை சாவர்க்கர்/கோட்சே வகையறாக்களின் படத்தை போடப் போகிறார்களோ? 

Monday, December 15, 2025

தகுதியற்றவர்களின் ஆட்சியின் மரணங்கள்

 


போன மாதம் சத்திஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் நடந்த ரயில் விபத்து நினைவில் உள்ளதல்லவா!

பதினைந்து பேரை காவு வாங்கிய அந்த விபத்து குறித்து ஆய்வு செய்த ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் பிரிஜேஷ் குமார் மிஷ்ரா கொடுத்த அறிக்கையின் விபரங்கள் என்ன சொல்கிறது தெரியுமா?

அந்த ரயிலின் இஞ்சின் ட்ரைவர் அந்த ரக ரயில்களை ஓட்டுவதற்காக நடத்தப்படும் தேர்வில் தோற்றுப் போனவராம். அதே போல அந்த ரயிலின் கார்டும் அந்த பதவிக்கான தகுதி வரம்பை எட்டாதவராம். உதவி இஞ்சின் ட்ரைவரும் சிவப்பு சிக்னலை பார்த்தும் வண்டியை நிறுத்த முயற்சிக்கவில்லை.

தகுதித் தேர்வில் தோற்றுப் போன பலரும் பல ரயில்வே கோட்டங்களில் ரயில்களை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அந்த அறிக்கை அளிக்கும் இன்னொரு செய்தி.

உண்மையில் சொல்ல வேண்டுமானால்

ரயில்களை இயக்கியவர்கள் தகுதியற்றவர்கள் அல்ல.

பயணிகள் நலன் பற்றி கவலைப்படாத, ஆட்சி நடத்த தகுதியற்ற மோடி அரசுதான் பயணிகளின் மரணத்துக்கான உண்மையான காரணம். 

அந்த வக்கீல்கள் அனாமதேயங்களா?

 


நேற்றைய ஆங்கில இந்து நாளிதழில் ஒரு செய்தி பார்த்தேன். 

தி.குன்றம் தீர்ப்பாளரை பதவி நீக்கம் செய்தால் ஒட்டு மொத்த நீதித்துறையே நிலை குலைந்து போய்விடும் என்பதால் அவரை பதவி நீக்கம் செய்ய அளித்துள்ள மனுவை நிராகரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் உள்ள வக்கீல்கள் மக்களவை தலைவருக்கு கையெழுத்திட்டு கடிதம் அனுப்பியுள்ளார்களாம்.



சரி, இதை அனுப்பியவர்கள் யார் என்று பார்த்தால் இந்த செய்தியில் யாருடைய பெயரும் இல்லை. எந்த வழக்கறிஞர் அமைப்பின் பெயரும் இல்லை. ஜாதி, மத அமைப்புக்களின் பெயர் கூட இல்லை. இந்த மனுவில் எத்தனை வக்கீல்கள் கையெழுத்திட்டுள்ளனர் என்ற விபரமமும் இல்லை. ஆனால் ஒரு லட்சத்து இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட தீர்ப்புக்கள் வழங்கியுள்ளார் என்ற சங்கிகளின் கட்டுக்கதை மட்டும் மனுவில் உள்ளது.

சமூக வலைத்தளங்களில் சங்கிகள் எப்படி அனாமதேயமாக, போலி ஐடிக்களில் பின்னூட்டம் போடுவார்களோ அது போல சபாநாயகருக்கு அனாமதேயமாக, மொட்டைக் கடிதம் அனுப்பி விட்டார்கள் போல. . .


Sunday, December 14, 2025

கேரளா - பின்னடைவும் முன்னேற்றமும்

 


கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அச்சத்தையும் கவலையையும் அதே நேரம் நம்பிக்கையையும் அளிக்கிறது.

திருவனந்தபுரம் மாநகராட்சியில் அதிக இடங்களை (பெரும்பான்மை இடங்களை அல்ல, ஆனாலும் பாஜக வாஷிங் மெஷினில் கொலைக்குற்றத்திலிருந்து விடுபட்ட காங்கிரஸ் கட்சியின் சசி தரூர் உதவியுடன் சில கவுன்சிலர்களை விலைக்கு வாங்கி விடுவார்கள்) பெற்றுள்ளது அச்சத்தை அளிக்கிறது ஈறை பேனாக்கி பேனை பெருமாளாக்கும் கேடு கெட்ட சூட்சுமத்தை அறிந்த சங்கிகள் ஒட்டு மொத்த கேரளத்திலிருந்தும் இடதுசாரிகளை வீழ்த்தி விட்டோம் என்று பிரச்சாரம் செய்வார்கள் என்பதுதான் அச்சம்.

இடது முன்னணிக்கு பின்னடைவா?

ஆம். பின்னடைவுதான். ஏற்கனவே பொறுப்பிலிருந்த பல இடங்களை இழந்துள்ளது என்பது நிச்சயமாக பின்னடைவுதானே!

மோடியும் காங்கிரஸும் சொல்வது போல இடது முன்னணி கேரளத்திலிருந்து முற்றிலுமாக துடைத்தெறியப்பட்டு விட்டது.

பொய், மிகப் பெரிய பொய்


மேலே உள்ள பட்டியலே உண்மையைச் சொல்லும்.  மாநகராட்சிகளில் பெரிய இழப்பு இருந்தாலும் கிராமப் பஞ்சாயத்துக்களிலும்  ஒன்றிய, மாவட்ட பஞ்சாயத்துக்களிலும்  கணிசமான எண்ணிக்கை கிடைத்துள்ளது.

திருவனந்தபுரத்தைத் தவிர மற்ற பகுதிகளில் பாஜக இழந்ததுதான் அதிகம். 

வழக்கறிஞர் தோழர் பிரதாபன் வாக்கு சதவிகிதம் பற்றிய புள்ளி விபரத்தை பகிர்ந்திருந்தார். அது கீழே


2024 ல் நாடாளுமன்ற தேர்தலின் போது,
காங்கிரஸ்:- 45.40%
இடதுசாரி:- 33.60%
தேஜகூ:- 19.40%
வாக்குகள் பெற்றன.

தற்போது உள்ளாட்சி தேர்தலில்
காங்கிரஸ்:- 42%
இடதுசாரி:- 40%
தேஜகூ:-9%. வாக்குகள் பெற்றுள்ளன.
2024 ஐ விட கூடுதலான வாக்கு சதவீதத்தை இடது ஜனநாயக முன்னணி பெற்றும் வெற்றி பெற இயலவில்லை.



இந்த புள்ளி விபரம் நம்பிக்கையையும் அளிக்கிறது. கவலையும் அளிக்கிறது.

திருச்சூரில் காங்கிரஸ் தன் வாக்குகளை சுரேஷ் கோபிக்கு மடை மாற்றிக் கொடுத்தமைக்கு பாஜக இப்போது நன்றிக் கடன் ஆற்றியுள்ளதோ என்றொரு சின்ன சந்தேகம் வருகிறது.

அதே நேரம் பின்னடைவு ஏற்பட்டாலும் தளம் அப்படியே இருப்பதால் இடது முன்னணி தன் பலவீனங்களை கண்டறிந்து அவற்றை களைந்திடும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

தோழர் பினராயி விஜயன் தலைமையிலான மாநில ஆட்சி எவ்வளவு சிறப்பான பணிகளை செய்திருந்தாலும் எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை கொண்டு வந்திருந்தாலும் உள்ளாட்சித் தேர்தலில் அந்த வார்டில் நிற்பவர் யார்? அந்த தெருவில் அவர் எப்படி நடந்து கொண்டார் என்பதெல்லாம்தான் முக்கியமான காரணிகள்.

பத்தாண்டு கால கேரள மக்களுக்கு செழிப்பான ஆட்சியில் சில களைகளும் முளைத்திருக்கும். அந்த களைகளை கறாராக அகற்றுவதற்கான நடவடிக்கைகளை இடது முன்னணி எடுத்திடும் என்று நம்புகிறேன்.

காலத்தே களைகளை அகற்றத் தயங்கினால் அது பெரும் புதராக மாறி பின்னடைவுகளை உருவாக்கிடும், மேற்கு வங்கத்தைப் போல.

கேரளா மேற்கு வங்கம் அல்ல என்பதை 2025 ல் நிரூபிக்கும் என்றே நம்புகிறேன்.

வாக்குகளின் சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பதால் அலட்சியம் வந்திடுமோ என்பது கவலையளிக்கிறது.

Saturday, December 13, 2025

மோடியும் நேருவின் கொள்ளு பேத்தியும்

 


உருப்படியாக எதையும் செய்ய இயலாத மோடி, நாடாளுமன்றத்தில் நடத்திய ஒரு வெட்டி விவாதம்தான் "வந்தே மாதரம்" 150 வது ஆண்டு.

அதையும் ஜவஹர்லால் நேருவை வசை பாடத்தான் பயன்படுத்திக் கொண்டார்.

அதற்கு பதிலளித்து நேருவின் கொள்ளுப் பேத்தி பிரியங்கா கொடுத்த பதிலடி சிறப்பாகவே இருந்தது. 

அந்த காணொளி கீழே


ஆமாம். நேரு பற்றி ஒரு விவாதம் வைத்துக் கொள்ளலாமா என்ற கேள்விக்கு மோடியும் அவர் அல்லக்கைகளும் பதில் சொல்லவே இல்லையே! 

ஏற்கனவே பட்ட அசிங்கம் போதும் என்ற அறிவு கூட மோடிக்கு கிடையாதா என்ன!

Thursday, December 11, 2025

தி.குன்றம் தீர்ப்பாளரின் வழக்கு கணக்கு

 திருப்பரங்குன்றம் தீர்ப்பாளர் அதி வேகமாக வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்ததாக பாஜக பொய்யன் நாராயணன் திருப்பதி பீற்றிக் கொண்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.கனகராஜ் அவர்களின் முகநூல் பதிவில் அட்டகாசமான விளக்கத்தை அளித்துள்ளார்.  நம்ம தீர்ப்பாளர் அளித்த தீர்ப்புக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கு மேல் என்றால் எந்த லட்சணத்தில் அவர் வேலை செய்துள்ளார் என்பதையும் இப்பதிவு அம்பலப்படுத்துகிறது.



கணக்கு வழக்கல்ல; இது வழக்கு கணக்கு சார் !
2017 முதல் 2025 வரை 9 வருடங்களில் 1,20,426 வழக்குகளை நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் அவர்கள் வழக்கை ஏற்று விசாரித்து தீர்ப்பையும் எழுதியதாக இன்று ஒரு செய்தி பகிரப்படுகிறது.
உண்மையிலேயே அப்படி நடந்திருந்தால் அது ஒரு அசாதாரணமான வேகம் . அதை பகிர்ந்துள்ள பாஜகவின் BJP Tamilnadu திரு நாராயணன் திருப்பதி Narayanan Thirupathy BJP அவர்கள் நீதிபதி சுவாமிநாதன் அவர்களை
"பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திராவிட மாடல் ஏன் துடிக்கிறது என்று இப்போது புரிகிறதா?"
என்று எழுதியிருக்கிறார்.
இதை உண்மை என்று கொண்டால் எந்த விதமான வார விடுமுறை, பண்டிகை விடுமுறை, மருத்துவ விடுப்பு, தேசிய விடுமுறை என எந்த விடுப்பும் எடுக்காமல் எல்லா நாட்களும் அதாவது வருடத்தில் 365 நாட்களும் பணி செய்ததாக கொண்டால் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் அதாவது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை (அதுவும் சாப்பாடு டீ அல்லது வேறு எந்த ஓய்வுக்கும் செல்லாமல்) பணி செய்து இருந்தால் நாளைக்கு எத்தனை வழக்குகளை சராசரியாக தீர்ப்பு சொல்லியிருக்க முடியும் என்று கணக்கு போடலாமா ?
இந்த வருடம் முடிய இன்னும் ஒரு 20 நாட்கள் இருக்கிறது .
அந்த நாளையும் சேர்த்து நாம் கணக்கிடலாம் .
மொத்த வழக்குகள் -1,20,426
மொத்த வருடங்கள் -9
ஆண்டுக்கு சராசரி வழக்குகள்-13,380.6
நாளைக்கு சராசரி வழக்கு-36.66
ஒரு மணி நேரத்திற்கு சராசரி வழக்கு -4.58
அதாவது ஒரு வழக்கிற்கு ஆன சராசரி நேரம்-13.1 நிமிடங்கள் .
அதாவது சராசரியாக ஒவ்வொரு வழக்கையும் ஏற்று விசாரித்து குறுக்கு விசாரணை செய்து அதன் பிறகு அதை பரிசீலித்து தீர்ப்பு எழுதுவதற்கு 13 நிமிடங்கள் ஒரு நொடிதான் சராசரியாக எடுத்திருக்கிறார்.
உண்மையில் மந்திரவாதிகளால் மட்டுமே சாத்தியமானதை நீதிபதி ஜிஆர் சாமிநாதன் அவர்கள் நிகழ்த்திக் காட்டி இருக்கிறார்.
நம்முடைய பாராட்டுக்களை அவருக்கு உரித்தாக்குவோம்.