Monday, October 28, 2024

விஜய் – சுமந்தின் புது முதலாளி

 


சில முக்கியமான பணிகள் இருந்ததால் விஜய் பேசியதை நான் பார்க்கவில்லை./கேட்கவில்லை. ஆனால் அரசியல் கற்றறிந்த பல பொறுப்பானவர்களின் பதிவு, அந்த உரையை சினிமாவில் பேசும் பஞ்ச் டயலாக்குகளாகவும்  அரசியல் தெளிவற்ற அவியலாகவும் இருந்தது என்றும் பதிவிட்டிருந்தனர்.

 அந்த உரையை சக்தி மிக்க ஒன்றாகவும் எழுச்சி மிக்கதாகவும் வர்ணித்துள்ளார் புதிதாக பூமர் அடையாளம் பெற்றுள்ள ட்விட்டர் தரகர் சுமந்த்ராமன். பவண் கல்யாண் உரையும் அப்படித்தான் இருந்தது என்ற பின்னூட்டத்திற்கு ஆமாம், அவர் இப்போது துணை முதல்வர் என்று பூரிப்புடன் சொல்லியுள்ளார்.

 


இதன் மூலம் சுமந்து உலகிற்கு தெரிவிக்கும் செய்தி ஒன்றுதான்.

 

“இனி எண்டே முதலாளி விஜய்”

 

Friday, October 25, 2024

கொலை- சங்கிகளின் ஒப்புதல் வாக்குமூலம்

 


கனடாவில் நிகழ்த்திய கொலை போல அமெரிக்காவிலும் ஒரு காலிஸ்தான் ஆதரவாளரை கொலை நடத்த அமித்ஷாவின் தலைமையிலான உளவுத்துறை RAW) திட்டம் தீட்ட, அது தோல்வியில் முடிந்துள்ளது. அந்த கொலைக்கான  ஏற்பாடுகள் செய்ய அனுப்பப்பட்ட உளவாளி விகாஷ் யாதவ். கொலை முயற்சிக்கு அவன் ஏற்பாடு செய்த வாடகைக் கொலைகாரனே ஒரு அமெரிக்க உளவுத்துறை அதிகாரி. அதனால் அந்த கொலையும்  நடக்கவில்லை. இந்திய சதியும் அம்பலமாகி விட்டது. இப்போது அமெரிக்கா விகாஷ் யாதவை தங்களிடம் ஒப்படைக்குமாறு நிர்ப்பந்தம் அளிக்கிறது.

 அதற்கு ஒரு சங்கி போட்ட பதிவை பாருங்கள்.

 


“ஏ அமெரிக்காவே, நீ மட்டும் பாகிஸ்தானுக்கு ரகசியமாக சென்று உன்னுடைய எதிரி ஒசாமா பின் லேடனை கொலை செய்யலாம். நாங்கள் மட்டும் எங்கள் எதிரியை உன் நாட்டில் கொல்லக் கூடாதா? உனக்கொரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா? ஒசாமா பின் லேடனை கொன்றவர்கள் எல்லாம் நாயகர்களாக கொண்டாடீனீர்களே! விகாஷ் யாதவ் மட்டும் குற்றவாளியா”

 என்று போகிறது அந்த பதிவு.

 இந்தியா செய்திருப்பது ஒரு சர்வதேசக் குற்றம். இதற்கு வெட்கப்பட வேண்டும். மாறாக ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்தது போன்ற பதிவெல்லாம் எழுதுவது ஒன்றைத்தான் சொல்கிறது.

 சங்கிகள் அடி முட்டாள்கள்.

 பிகு: இந்த பிரச்சினையில் விவாதிக்க வேண்டிய இன்னொரு செய்தியும் உள்ளது. அதுதான் அடுத்த பதிவு

 கைவிடப்படும் உளவாளிகளின் கதறல்

Thursday, October 24, 2024

கைவிடப்பட்ட உளவாளியின் கதறல்

 


விகாஷ் யாதவ் குறித்த முந்தைய பதிவின் தொடர்ச்சி இது. RAW அதிகாரியான விகாஷ் யாதவ், நிகில் குப்தா என்ற அமெரிக்கவாழ் இந்தியர் மூலம் குர்பந்வத்சிங் பண்ணும் என்ற காலிஸ்தான் ஆதரவாளரை கொல்ல ஏற்பாடு செய்கிறார். வாடகைக் கொலைகாரனாக ஏற்பாடு செய்யப்பட்ட ஆள் அமெரிக்க உளவுத்துறை ஆள் என்பதால் திட்டம் அம்பலமானது. 

விகாஷ் யாதவை பாதுகாக்க இந்திய அரசு என்ன செய்கிறது.

கை விட்டு விட்டது.

விகாஷ் யாதவ் RAW விலிருந்து எப்போதோ ராஜினாமா செய்து விட்டார். அதனால் அவரது நடவடிக்கைக்கும் மத்தியரசுக்கும் சம்பந்தம் கிடையாது என்று அமித்ஷாவின் உள்துறை கைவிரித்து விட்டது. இனி இந்த பிரச்சினையிலிருந்து தப்பிப்பது விகாஷ் யாதவின் சாமர்த்தியம். அது அவ்வளவு சுலபமாக இருக்கப் போவதில்லை.

விகாஷ் யாதவ் சம்பவம் ஒரு தனித்த நிகழ்வல்ல.

குல்பூஷன் ஜாதவ் என்ற கப்பற்படை அதிகாரி பல வருடங்கள் பாகிஸ்தானில் உளவு பார்த்து சில நாச வேலைகளும் செய்து மாட்டிக் கொண்டு மரண தண்டனை பெற்றார். அவர் உயிர் இன்னும் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. அவர் எப்போதோ கப்பற்படையிலிருந்து ஒய்வு வாங்கிக் கொண்டு விட்டார். அவரது நடவடிக்கைகளுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கை விரித்து விட்டது.

ஆஸ்திரேலியாவில் உளவாளி வேலை பார்த்த நால்வரை அந்த நாட்டு அரசாங்கம் துரத்தி விட்டதால் அவர்கள் உயிர் பிழைத்தனர்.

கத்தார் நாட்டு நீதிமன்றம் அந்நாட்டில் உளவு பார்த்த எட்டு இந்திய கப்பற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்தது. அவர்கள் மோடியின் முதலாளிகளான இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாலோ என்னவோ கத்தார் அரசின் கையில் காலில் விழுந்து அவர்களை விடுதலை செய்ய வைத்து விட்டது.

வரலாற்றில் ஆராய்ந்தால் எக்கச்சக்கமான சிக்கிக் கொண்ட  உளவாளிகளின் துயர ஓலத்தை கேட்க முடியும். 

இந்தியா என்றில்லை, எல்லா நாடுகளுமே உளவாளிகளை பயன்படுத்துகின்றன. உளவாளிகளின் பணி என்றைக்கும் நேர்மையானதல்ல. அழிவு வேலைகள் செய்வதோ அல்லது அழிவு வேலைகளுக்கான ஆயத்தங்களை செய்வதோதான். அதனால்தான் உளவாளிகள் சிக்கிக் கொள்ளும் போது அவர்களை ஏவி விட்டவர்கள், தங்களுக்கும் உளவாளிக்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கிக் கொள்கின்றார்கள். 

பணத்திற்காக, பதவிக்காக, சில அற்ப சந்தோஷங்களுக்காக, தேச பக்தி என்று உசுப்பேற்றுவதால் ஏற்படும் போலிப் பெருமிதத்திற்காக உளவாளி வேலை பார்க்கும் எவரும் நிம்மதியாக இருந்த முடியாது. மாட்டிக் கொள்ளும் வரை மிதப்பில் இருக்கலாம். மாட்டிக் கொண்டால் எதிர்காலம் நிர்மூலம்.

உளவாளிகள் எனும் அம்புகள் துயரத்தில் கதறும் அதே நேரத்தில் எய்தவர்கள் அடுத்த இளிச்சவாய் அம்புகளை தயாரித்துக் கொண்டிருப்பார்கள் என்பதுதான் சோகமான உண்மை. 


நீங்கள் நினைக்கப் படுவீர்கள்(பு.நீ.தே) சந்திரசூட்!

 ஃப்ரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் அவர்களின் முகநூல் பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன். சிலரது பிம்பம் ஆரம்பத்திலேயே தகர்ந்து போகும். இவரது பிம்பம் பணி ஓய்வின் போது . .

பு.நீ.தே - புதிய நீதி தேவதை . . . .


நீங்கள் நினைக்கப் படுவீர்கள் சந்திரசூட்!

(வினோத் குமார் சந்த் என்பவர் எழுதிய இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் சுற்றிக் கொண்டிருக்கிறது. அவர் யாரென்று தெரியவில்லையென்றாலும் அவரது மதிப்பீடு துல்லியமாக இருக்கிறது என்பதால் தமிழில்: ஆர். விஜயசங்கர்)

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பின்வரும் காரணங்களுக்காக நினைக்கப் படுவார்:

சக நீதிபதிகளுடன் சேர்ந்து ராமர் கோவில் தீர்ப்பை எழுதிவிட்டு அதன் கீழ் கையொப்பமிடும் துணிச்சல் இல்லாதவர் என்பதற்காக;

தேர்தல் பத்திரம் சட்டவிரோதமானது என்று கூறிய பின்னர் பத்திரம் மூலம் பெறப்பட்ட பணத்தைத் திரும்ப வசூலிப்பதையோ அல்லது அதில் ஈடுபட்டவர்களைத் தண்டிப்பதையோ உறுதி செய்யாதவர் என்பதற்காக;
சண்டீகர் நகர மேயர் தேர்தலுக்குப் பொறுப்பான அதிகாரியைக் குற்றவாளி என்று சொல்லிவிட்டு அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதற்காக;

மஹாராஷ்டிராவில் அமைக்கப்பட்ட ஷிண்டே/ஃபத்னாவிஸ்/அஜித் பவார் அரசையும் அதற்குத் துணை போன ஆளுநரின் செயல்களையும் சட்ட விரோதமானவை என்று கூறிவிட்டு, அதைக் குறித்து ஒரு உறுதியான நடவடிக்கையை எடுக்காமல், சட்டவிரோதமாகத் தொடரும் சபாநாயகரிடம் பொறுப்பைத் தூக்கியெறிந்துவிட்டு, அவர் சட்டவிரோதமான முடிவுகளை எடுக்க அனுமதித்து விட்டு, அந்த அரசு மீதமிருக்கும் பதவிக் காலம் முழுவதிலும் தொடர அனுமதித்தவர் என்பதற்காக;

ஹிண்டன்பர்க் நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்குத் தொடருமாறு அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் கூறாமல், ஹிண்டன்பர்க் கூறிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க ‘வல்லுனர்களைக்’ கொண்ட ஒரு குழுவின் விசாரணைக்கு உத்தரவிட்டு, அந்த விசாரணையில் ஹிண்டன்பர்க்கையும் ஒரு தரப்பாக ஆக்காமல், அந்த ‘வல்லுனர்’ குழுவின் இறுதி அறிக்கையை தெய்வ வாக்காகக் கருதி அதானி நிறுவனத்திற்கு நன்னடத்தைச் சான்றிதழ் வழங்கியதற்காக;

காஷ்மீர் தொடர்பான அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 371ஐ ரத்து செய்தது அரசியலமைப்புச் சட்டப் படி செல்லுமா என்கிற வழக்கை இழுத்தடித்து, அந்த விவகாரத்தில் சட்டப்படி கலந்தாலோசித்திருக்க வேண்டிய ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தின் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டு அந்த மாநிலம் குடியரசுத் தலைவரின் ஆட்சியின் கீழ் இருந்தது என்கிற உண்மையைப் புறக்கணித்துவிட்டு, ரத்து செய்த முடிவு சரிதான் என்று முடிவு செய்ததற்காக; அவருடைய இந்தச் செயல் குடியரசுத் தலைவரே குடியரசுத் தலைவரைக் கலந்தாலோசித்து அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 371 ரத்து செய்யப்பட வேண்டுமென்று முடிவெடுத்தார் என்கிற ஒரு விசித்திரமான நிலைக்கு இட்டுச் சென்றதற்காக;

உமர் காலித் பணக்காரராகவோ அல்லது வலிமை மிக்கவராகவோ இல்லையென்பதாலும், அவர் முஸ்லிமாக இருக்கிறார் என்பதாலும் அவருக்கு பிணையை மறுத்து சிறையில் தொடர்ந்து இருக்கச் செய்ததற்காக;

பீமா கொரேகான் வழக்கு முற்றிலும் போலியானது, போலீஸும் அரசியல்வாதிகளும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் கணிணிகளில் புகுத ஆதாரங்களின் அடிப்படையில் புனையப்பட்டது என்பதைக் காட்டும் நம்பத் தகுந்த தடயவியல் ஆதாரங்கள் இருந்த போதிலும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தொடர்ந்து சிறையில் இருப்பதையும், பாதிரியார் ஸ்டேன் ஸ்வாமியின் மரணத்தையும், சமீபத்தில் பேராசிரியர் ஜி.என். சாய்பாபாவின் மரணத்தையும் அனுமதித்தமைக்காக.

பணி ஓய்வு பெறும் நேரத்தில் இவைதான அவர் விட்டுச் செல்லும் பாரம்பரியங்கள்.

ஆம், அவர் ஒரு நூலைக் கையில் பிடித்துக் கொண்டு கண்களைத் திறந்திருக்கும் நீதி தேவதையின் சிலையை இறுதியில் திறந்து வைத்திருக்கிறார்.

ஆயினும், ஆதாரத்தின் அடிப்படையில் நீதி வழங்காமல், தனக்கு சரியான பாதையைக் காட்டுவாரென அவர் நம்பிய கடவுளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு அவர் செய்த பிரார்த்தனையின் அடிப்படையில் நீதி வழங்கியதன் மூலம் அவர் அரசியலமைப்புச் சட்டத்தின் எழுத்துக்கள் மற்றும் உணர்விற்கு அவர் மரியாதை அளிக்கவில்லை.

தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அவர்களே, நீங்கள் இவை அனைத்திற்காகவும், ஏமாற்றும் நோக்கில் செயல்பட்டீர்கள் என்பதற்காகவும் நீங்கள் நினைக்கப் படுவீர்கள்!

மேற்கூறிய அனைத்தும் வரலாற்றின் ஒரு பகுதியாகி விட்டன. அதை மாற்ற முடியாது. அது பாலத்தினடியில் ஓடிவிட்ட நீர் போலத்தான்.

பின் குறிப்பு: நீங்கள் ஒரு தனிப்பட்ட சடங்கில் புகைப்படக்காரர்கள் புடைசூழ பிரதமருடன் சேர்ந்து பூஜை செய்தீர்கள் என்பதற்காகவும் நினைக்கப் படுவீர்கள்.


கொல்லப்பட்ட கடைசி தருணத்திலும் கம்பீரம்

 பெல்ஜியம் தோழர் இ.பா.சிந்தன் அவர்களின் முக நூல் பக்கத்திலிருந்து எடுத்தது. இஸ்ரேலால் கொல்லப்பட்ட ஹமாஸ் இயக்கத்தலைவர் யாஹ்யா சின்வர் அவர்களின் இறுதி உயில். தமிழாக்கம் செய்தவர் தோழர் ராஜ சங்கீதன்.

LAST MOMENTS OF YAHYA SINVAR என்ற இந்த காணொளியை யூடூயுபில் பாருங்கள். ஒரு கை வெட்டப்பட்டு வாழ்வின்  இறுதித்தருணத்தில் இருக்கையில் பறந்து வரும் ட்ரோன் மீது ஒற்றைக் கையால் தடியை வீசி எரியும் தீரத்தை பார்க்க மறவாதீர். கீழேயுள்ள படத்தில் சொல்லப்பட்டது போல அமெரிக்க அடிமையாக பாலஸ்தீனத்திற்கு எதிரான சவுதி அரேபிய மன்னரின் அரியணையை விட சின்வரின் சோபா கம்பீரமானது. 

பாலஸ்தீனத்தின் வரலாற்றில் அம்மக்களின் துரோகியாக, எதிரியாக மோடியும்  பதிவு செய்யப்படுவார். 



ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வர் எழுதியிருந்த இறுதி உயில் சுருக்கம்:

இந்த வார்த்தைகளை எழுதுகையில் என் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் எண்ணி பார்க்கிறேன். சந்துகளில் திரிந்திருந்த பால்யகாலம் தொடங்கி பல வருட சிறைவாசம் வரையான வாழ்க்கையையும் இந்த நிலத்தில் சிந்தப்பட்ட ஒவ்வொரு துளி ரத்தத்தையும் நினைவுகூருகிறேன்.
1962ம் ஆண்டில் நான் கான் யூனிஸ் முகாமில் பிறந்தேன். பாலஸ்தீனம் கிழித்தெடுக்கப்பட்டு நினைவாக மட்டுமே எஞ்சியிருந்த காலக்கட்டம் அது. அரசியல்வாதிகளின் மேஜைகளில் மறக்கப்பட்ட வரைபடமாக பாலஸ்தீனம் கிடந்தது.
நெருப்புக்கும் சாம்பலுக்கும் இடையில் வளர்ந்தவன் நான். ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் வாழ்வது, நிரந்தர சிறைவாசம் என்பதை வாழ்க்கையின் தொடக்கத்திலேயே புரிந்திருந்தேன்.
இங்கு பிறக்கும் ஒவ்வொருவரும் தன் நெஞ்சில் உடையாத ஓர் ஆயுதத்தை ஏந்தியிருக்க வேண்டும். விடுதலைக்கான தூரம் நெடியது என்பதை உணர்ந்திருக்க வேண்டும்.
முதன்முறையாக 1988ம் ஆண்டில் சிறைக்கு சென்றேன். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இருள் நிறைந்த அந்த சிறைகளின் ஒவ்வொரு சுவரிலும் தூரத்து அடிவானத்துக்கான ஒரு ஜன்னலை நான் கண்டேன். ஒவ்வொரு சிறையிலும் விடுதலைக்கான வழி காட்டும் வெளிச்சம் தெரிந்தது,.
பொறுமை என்பது பண்பல்ல, ஆயுதம் என்பதை சிறையில் கற்றுக் கொண்டேன். மிகவும் கடுமையான ஆயுதம் அது. ஒவ்வொரு துளியாக மொத்த கடலையும் குடிக்க முனையும் ஒருவரின் முயற்சிக்கு நிகரான ஆயுதம்!
என்னுடைய அறிவுரை இதுதான்: சிறைகளுக்கு அஞ்சாதீர்கள். விடுதலைக்கான நெடும்பாதையின் அங்கங்கள் அவை.
விடுதலை என்பது வலியில் பிறப்பது; பொறுமையில் பக்குவப்படுவது! 2011ம் ஆண்டு “வஃபா அல் அஹ்ரார்” ஒப்பந்தத்தில் நான் விடுவிக்கப்பட்ட போது, போராட்டத்தை விட்டுச் சென்றுவிட வில்லை. வலிமை பெற்றிருந்தேன். நம்பிக்கை அதிகமாகி இருந்தது. நாம் முன்னெடுப்பது சாதாரண போராட்டமல்ல என்பதையும் நம் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை நாம் சுமக்கும் விதி போராட்டம்தான் என்பதையும் புரிந்து கொண்டேன்.
என்னுடைய அறிவுரை, துப்பாக்கியையும் வழுவாத சுயமரியாதையயும் அழிவுறா நம் கனவையும் கைவிட்டு விடாதீர்கள் என்பதுதான். நம் போராட்டத்தை நாம் கைவிட்டுவிட வேண்டுமென எதிரி விரும்புகிறான். நம் நோக்கத்தை நெடிய பேச்சுவார்த்தை மூலம் நீர்த்துப் போக வைக்க விரும்புகிறான்.
ஆனால் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் உரிமை பெற்றிருக்கும் ஒரு விஷயத்துக்காக பேச்சுவார்த்தை நடத்தாதீர்கள். உங்களின் ஆயுதங்களை விட, உங்களின் உறுதி அவர்களை அச்சுறுத்துகிறது.
போராட்டவுணர்வு என்பது நமக்கான ஆயுதம் மட்டுமில்லை, நம் சுவாசத்தில் பாலஸ்தீனத்தின்பால் நாம் கொண்டிருக்கும் அன்பு அது; ஆக்கிரமிப்பும் படையெடுப்பும் தாக்குதலும் தொடர்ந்தாலும் இங்கு நாம் தொடர்ந்து நீடிப்பதற்கான பற்று அது!
உயிரிழந்த ஈகியரின் ரத்தத்துக்கு உண்மையாக இருங்கள். முட்களாலான பாதையில் நமக்கான விடுதலைப் பாதையை தங்களின் ரத்தம் கொண்டு போட்டவர்கள் அவர்கள்தான். அரசியல்வாதிகள் தரும் கணக்குகளுக்காகவும் அரசப் பிரதிநிதிகள் காட்டும் ஆட்டத்துக்காகவும் அவர்களின் ஈகையை விரயமாக்கி விடாதீர்கள்.
முன்னவர்கள் தொடங்கியதை முடிக்கத்தான் நாம் இங்கு இருக்கிறோம். என்ன விலை கொடுக்க நேர்ந்தாலும் இந்த பாதையிலிருந்து நாம் விலகிடக் கூடாது. பூமியே நம்மை குறுக்கினாலும் உறுதிப்பாட்டின் தலைநகரமாகவும், தொடர்ந்து துடிக்கும் பாலத்தீன இதயமாகவும் காசா இருக்கும்.
2017ம் ஆண்டில் ஹமாசின் தலைவராக நான் ஆனபோது, வெறும் அதிகாரப் பரிமாற்றமாக அதை நான் பார்க்கவில்லை. கற்களால் தொடங்கி துப்பாக்கிகளால் தொடரும் ஒரு பெரும் போராட்டத்தின் தொடர்ச்சியாகதான் பார்த்தேன்.
விடுதலையை நோக்கி நாம் வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஒரு விலையை கொடுக்க வேண்டும் என்பதை தெரிந்திருந்தேன். ஆனால் ஒன்றை மறந்து விடாதீர்கள். சரணடைவதால் நாம் கொடுக்கும் விலை இவற்றை விட மிக அதிகமாக இருக்கும். எனவே வேர், மண்ணை பிடித்திருப்பது போல், இந்த நிலத்தை பிடித்திருங்கள். வாழ வேண்டுமென முடிவெடுத்து விட்ட மக்களை எந்தக் காற்றாலும் பெயர்த்தெடுக்க முடியாது.
அல் அக்ஸா போர், உடல்களுக்கு எதிரான ஆன்மாக்களின் போர்; ஆயுதங்களுக்கு எதிரான உறுதியின் போர்!
நான் விட்டுச் செல்வது என் தனிப்பட்ட மரபு அல்ல, ஒரு கூட்டு மரபு! விடுதலைக் கனவு கொண்ட ஒவ்வொரு பாலஸ்தீனருக்கும், உயிர் துறந்த மகனை தோளில் சுமந்த ஒவ்வொரு தாய்க்கும், தோட்டா உயிர் குடித்த மகளை சுமந்த ஒவ்வொரு தந்தைக்கும் அந்த மரபை நான் விட்டுச் செல்கிறேன்.
போராட்டம் வீண் போகாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். போராட்டம் என்பது துப்பாக்கியின் தோட்டா மட்டும் அல்ல, நாம் மதிப்புடனும் மரியாதையுடனும் வாழ்வதற்கான அடிப்படையும் அதுதான்.
உலகம் நீதி வழங்கும் என எதிர்பார்க்காதீர்கள். நம் வலியை வெறுமனே உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தற்கு நானே சாட்சி. நீதியை எதிர்பார்க்காதீர்கள்; வழங்குங்கள்! பாலஸ்தீனர்களின் கனவை நெஞ்சில் ஏந்துங்கள். ஒவ்வொரு காயத்தையும் ஆயுதம் ஆக்குங்கள். ஒவ்வொரு கண்ணீரிலும் நம்பிக்கையை பெற்றெடுங்கள்.
இதுவே என் உயில். உங்களின் ஆயுதங்களை ஒப்படைக்காதீர்கள். கற்களை கீழே போடாதீர்கள். ஈகியரை மறந்திடாதீர்கள். நீங்கள் உரிமை கொண்டிருக்கும் கனவை காவு கொடுத்து விடாதீர்கள்.
நாம் இங்குதான் இருப்போம். நம் நிலத்தில், நம் நெஞ்சங்களில், நம் குழந்தைகளின் எதிர்காலத்தில் நாம் இருப்போம்.
இறுதி வரை நான் நேசித்த நிலத்தையும் பெருமலை போல் என் தோள்களில் சுமந்த கனவையும் உங்களிடம் ஒப்படைக்கிறேன்.
நான் வீழ்ந்தால், நீங்களும் வீழ்ந்திடாதீர்கள். என்றுமே வீழாத பதாகையை எனக்காக ஏந்துங்கள். என் ரத்தத்தை, ஒரு தலைமுறை வலிமை பெறுவதற்கான பாலமாக மாற்றுங்கள்.
சொந்த நிலம் என்பது சொல்வற்கான கதையல்ல, வாழ்வதற்கான யதார்த்தம் என்பதை மறந்து விடாதீர்கள்.
உயிரை ஈகை செய்த ஒவ்வொருவரிடமிருந்தும் ஆயிரக்கணக்கான போராளிகள் பிறப்பார்கள்.
மீண்டும் போர் வருகையில் நான் உங்களுடன் இல்லாது போயிருந்தால், விடுதலைக்கான அலைகளின் முதல் துளி நான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Wednesday, October 23, 2024

காவியடிச்சா பி.எஸ்.என்.எல் ஓடாது

 


காலி செய்து விட்டு காவியா?

உருப்படியாக எதையும் செய்ய துப்பில்லாத மோடி அரசு வெற்று, வெட்டி நடவடிக்கைகள் எடுப்பதில் மட்டும் குறைச்சல் கிடையாது.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் லோகோவிற்கு காவிச்சாயம் பூசி விட்டு “கனெக்டிங் இந்தியா” என்ற வாசகத்தை “கனெக்டிங் பாரத்” என்று மாற்றியுள்ளது.

அப்படி லோகோவைற்கு காவி அடித்துள்ள மோடி அரசு,

பி.எஸ்.என்.எல்  நிறுவனத்தை  இழப்பின் பிடியிலிருந்து விடுவிக்க எந்த நடவடிக்கையும் எடுத்தது கிடையாது.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு மற்ற தொலை தொடர்பு நிறுவனங்கள் அளிக்க வேண்டிய பாக்கித் தொகையை வசூலித்துக் கொடுக்க எந்த  முயற்சியும் எடுத்தது இல்லை.

பி.எஸ்.என்.எல் தனது கட்டமைப்பை மேம்படுத்த தேவைப்படும் இயந்திரங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படுவதில்லை.

பி.எஸ்.என்.எல் மீட்பிற்காக அறிவிக்கப்பட்ட தொகையை கொடுக்கவும் இல்லை.

4 ஜி  சேவை வருகிறது, வருகிறது என்ற சொல்லப் படுகிறதே தவிர, இன்னும் வந்த பாடில்லை.

ஒப்பந்த ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஊதியம் ஒழுங்காக கொடுக்கப்படுவதில்லை.

“கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ ஓடாது” என்பது எந்த அளவு உண்மையோ அது போல லோகாவுக்கு காவிச்சாயம் பூசுவதன் மூலம் பி.எஸ்.என்.எல் நிலைக்காது, முன்னேறாது.

தான் வளர்த்த நாய் இறந்து விட்டது என்பதை நாகேஷிடம் வருத்தமாக சொல்லும் நண்பர் தான் அதற்கு பெயரெல்லாம் வைத்ததாக சொல்வார். அதற்கு நாகேஷ், “நாய்க்கு பேர் வச்சியே நாயே, சோறு வச்சியா?” என்று கேட்பார்.

“லோகோவுக்கு காவிச்சாயம் பூசினியே, பி.எஸ்.என்.எல் பிரச்சினைகளை தீர்க்க என்ன செய்தாய்” என்று நாம் கேட்க வேண்டும்.

Tuesday, October 22, 2024

மோடி தமிழுக்கு பாதுகாப்பா? முருகா!!

 


தமிழுக்கு போதுமான நிதி ஒதுக்குவது கிடையாது தமிழ்நாட்டைச் சேர்ந்த திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு கிடையாது. தமிழ்த்தாய் வாழ்த்துக்களின் வரிகளை வெட்டுபவரின் ஆளுனர் பதவி பாதுகாப்பாகவே இருக்கிறது. இதையெல்லாம் விட பெரிய கொடுமை ஒன்று உண்டு.

 ஆமாம்.

 


ஒவ்வொரு முறை தமிழ்நாட்டிற்கு வரும் போதும் தப்பு தப்பா திருக்குறலைச் சொல்லி  அதை கொலை செய்வது.

 பெட்ரோல் விலை உயர்வு பற்றிய கேள்விக்கு பதில் சொல்லாம்ல் ;”ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீராம்” என்று சத்தம் போட்டுக் கொண்டே தப்பித்துக்    சென்றதைக் கூட    மன்னித்து விடலாம் எல்.முருகன், தமிழுக்கு மோடிதான் பாதுகாப்பு என்று சொலவதை விட்டு மன்னிக்கவே முடியாது எல்.முருகன்