Thursday, February 27, 2020

திசை திருப்பாதீர் வெங்காய நாயுடு . . .


இந்தியா சந்தித்த விபத்துக்களில் வெங்காய நாயுடு துணை ஜனாதிபதி என்ற பொறுப்பில் இருப்பதும்தான்.

புதுவைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர் "நீங்கள் உங்கள் தாய் மொழியை நேசியுங்கள். ஆனால் பல மொழிகளையும் கற்றுக் கொள்ளுங்கள்" 

என்று கூறியுள்ளார்.

இதுவரை சரிதான்.

அதற்கடுத்த வார்த்தைதான் சங்கி மங்கி குணாம்சத்தை காண்பித்து விட்டது.

"ஹிந்தி தெரிந்தவராக இருப்பதால்தான் நாராயணசாமிக்கு அவர் கட்சியில் மரியாதை" 

என்று  அவரை சீண்டி விட்டு

"ஒரு மொழிக்கு எதிரான வெறுப்பு என்பது மோசமானது. அதை கண்டிக்க வேண்டும்"

என்று விஷத்தை கக்கி உள்ளார்.

திருவாளர் வெங்காய நாயுடு அவர்களே, தமிழகத்தில் யாரும் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் அல்ல. இந்தியை திணிப்பதற்கு எதிரானவர்கள். இந்தியை மட்டும் முன்னிறுத்து மற்ற மொழிகளை குழி தோண்டி புதைக்க எண்ணும் உங்கள் இந்தி வெறிக்கு எதிரானவர்கள். 

இந்த உண்மை தெரிந்தும் தமிழர்களை இந்தி மொழிக்கு எதிரானவர்கள் என்று திசை திருப்புவது விஷமத்தனமானது.

உங்கள் பதவிக்கேற்ற கண்ணியத்தோடு பதவிக்காலம் முடியும் வரையிலாவது செயல்படுங்கள்.




No comments:

Post a Comment