Tuesday, July 19, 2016

கடவுளை அங்கஹீனம் செய்பவர்கள் பக்தர்களா?

 
மரம் வெட்டிகள் என்ற பட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சியிடமிருந்து பறிக்க இந்து முன்னணி தீவிரமாக முயற்சிக்கிறது என்று கீழே உள்ள கடிதம் சொல்கிறது. 
 
 
 
இயற்கையை நாசமாக்குவதில் எவ்வளவு ஆர்வம் பாருங்கள்.  கானகத்தை பாதுகாக்க முயற்சிப்பவர்கள் மீது அபாண்டமாக பழி போடுவதற்கும் அதன் மூலம் மக்கள் மத்தியில் நச்சைக் கக்கவும் தயாரால இருக்கிறார்கள்.
 
அவர்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டியுள்ளது. 
 
திருவண்ணாமலை மலை முழுவதுமே சிவனின் வடிவம் என்று சொல்லித்தான் கிரிவலம் செல்கிறார்கள். மலையில் உள்ள மரங்களை வெட்டுவது என்பது சிவனின் அங்கங்களை வெட்டி அவரை முடமாக்கும் வேலை அல்லவா? 
 
கடவுள் பெயரால் பிழைப்பு நடத்தும் ஒரு அமைப்பு கடவுளை அங்கஹீனம் செய்யலாமா? 
 
இதிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள். 
 
இவர்களின் பக்தி என்பது எவ்வளவு பெரிய மோசடி என்று. 

No comments:

Post a Comment