Monday, September 23, 2013

நித்யானந்த மோடி அல்லது மோடியானந்தா – அதிசயமே இல்லை








மேலே உள்ள படங்களைப் பார்த்தீர்களா?

ஒரு தோழர் மின்னஞ்சலில் அனுப்பி நரேந்திர மோடியின் யோக்கியதை இதுதான். இவரை எப்படித்தான் படித்தவர்களும் நம்புகிறார்களோ என்று கோபமாக கேட்டிருந்தார்.

ஆனால் எனக்கு என்னமோ அதிர்ச்சியும் ஏற்படவில்லை. அதிசயமாகவும் தோன்றவில்லை. இயல்பான கூட்டணி இது.

திருடர்கள் திருடர்களோடுதான் இணைவார்கள்.

ஒரு மோசடிப் பேர்வழிக்கு இன்னொரு மோசடிப் பேர்வழிதான் அடைக்கலம் கொடுப்பான்.

நித்தியானாந்தாவை இன்னும் நம்பி வழிபடும் கூட்டம் இருக்கத்தான் இருக்கிறது. நரேந்திர மோடியின் ரத்த வெறியை, கொலைகளை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் போலி புள்ளி விபரங்களை நம்பி அவர் ஒரு சிறந்த நிர்வாகி என்று ஓலமிடும் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது. அவர் வந்தால் நல்லது என்று தாங்களும் முட்டாள்தனமாக நம்பிக் கொண்டு நம்மையும் ஏமாறச் சொல்கிறது.

இந்த முட்டாள் மந்தைதான் கடவுள் பெயரைச் சொல்லி ஏமாற்றும் எல்லா மோசடிப் பேர்வழிகளுக்கும் மூல தனம்.

விசாரித்துப் பாருங்கள்.

நித்யானந்தா ஆசிரமம் கட்ட நரேந்திர மோடி குஜராத்தில் ஆயிரம் ஏக்கர் நிலம் கூட கொடுத்திருக்கலாம்.

மதுரை ஆதீனத்திற்கு தங்க சிம்மாசனம் கொடுத்தது போல மோடிக்கும் கோடிக்கணக்கில் ஏதாவது நித்யானந்தா கொடுத்திருக்கலாம். தந்தி டி.வி யிலும் தாமரை டி.வி யிலும் சொற்பொழிவாற்றுகிற நித்யானந்தா நாளை நரேந்திர மோடிக்கான வாக்கு வேட்டையில் ஈடுபட்டால் கூட ஆச்சர்யப் படவேண்டிய அவசியமில்லை.

3 comments:

  1. IT IS VERY NATURAL TO HAVE HAND WITH HAND OF BJP AND ALL HINDU SAMIYARS. NO WONDER. IT IS OPEN. BUT CONGRESS AND OTHER SO CALLED SECULAR PARTIES USED TO GIVE HANDS UNDERNEATH.

    ReplyDelete
  2. "தீதும் நன்றும் பிறர் தர வாரா" மக்கள் இப்போதாவது உணரவில்லை என்றால் பின் எப்போதுமே மீள முடியாது.

    ReplyDelete
  3. Ungal aakkam nandraaga ullathu. Fb share pannum vasathi irunthaal nandraga irukkum

    ReplyDelete