Monday, February 25, 2013

பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்கு சட்டத்திற்கு விரோதமானது - தீர்ப்பை வழங்கிய நீதிபதி கே.டி.தாமஸ்


ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்கு தண்டனையை எதிர் நோக்கும் பேரறிவாளன்,முருகன்,சாந்தன் ஆகிய மூவரையும் தூக்கிலிடக்கூடாது எனவும் அவ்வாறு நிகழ்ந்தால் அது இந்திய அரசியல் சட்ட முறைமைக்கு எதிரானதாக ஆகிவிடும் எனவும் எச்சரித்திருக்கிறார் முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ்.13 ஆன்டுகளூக்கு முன் அந்த தண்டணையை வழங்கிய நீதிபதியே அவர்தான்.

''நான் தான் முன்னின்று அந்த மூவருக்கும் தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தேன்.அது மிகவும் கொடுமையானது ஏனென்றால் அது அரசியல் சட்ட முறைமைக்கும் இயல்புக்கும் எதிரான நீதி வழுவிய ஒரு தீர்ப்பு என்று இப்போது தான் உணர்கிறேன் இத்தகைய வழக்கில் தீர்ப்பெழுதும் முன் அந்த மனிதர்களின் முன்னாள் வரலாறு அவர்களின் நிறுவப்பட்ட பண்புகள் ஆகியவற்றை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என சட்ட விதி 21 உபதேசிக்கிறது. அம்முறைமையை நாங்கள் கணக்கில் எடுக்காது நான் உட்பட மூன்று நீதிபதிகளும் தவறிழைத்துவிட்டோம். இதே கருத்தை முன்னாள் நீதிபதி எஸ்.பி. ஸின்ஹா அவர்களும் வெளிப்படுத்திருக்கிறார்.. 


மேலும் சாதாரண ஆயுள் தண்டனைக்கைதிகளுக்கு சிறைத்துறை வழங்கும் சில சலுகைகள் கூட 21-ஆண்டுகள் அதாவது இரட்டை ஆயுள் தண்டனை அனுபவித்து விட்ட இந்த ஏழைகள் மூவருக்கும் வழங்கப்படவில்லை. இதற்கப்புறமும் தூக்கு என்று ஆட்சியாளர்கள் முழங்கினால் அது ஒரே குற்றத்துக்கான இரண்டு தண்டனையாகவும் மேலும் நீதித்துறைகள் கண்டிராத மிக மோசமான நிகழ்வாகவும் அமையும் அதனால் அம்மூவரையும் வாழவிடவேன்டும் என ’’ கே.டி.தாமஸ்அறிவுறுத்தியிருக்கிறார்.


இத்தனை நாள் கழித்து இதனை சொல்லியுள்ள நீதியரசர்
இந்த தூக்கு தண்டனையை தடுக்க என்ன செய்யப் போகின்றார்?

சட்டபூர்வமான நடவடிக்கைகளை அவரே எடுக்கலாமே?

அதை செய்தால் அப்போது அவரைப் பாராட்டலாம். 
 

No comments:

Post a Comment