Thursday, August 18, 2011

தமிழர்கள் பற்றி அமெரிக்க அதிகாரியின் கொழுப்பெடுத்த நையாண்டி - இன்னமும் நீடிக்கும் நிற வெறி!



அமெரிக்க தூதரக துணை அதிகாரி மௌரீன் சோ 
என்ற அம்மையார்  எஸ்.ஆர்.எம் பலகலைக் 
கழகத்தில் பேசுகிற போது  தமிழர்களை நக்கல் 
செய்து   பேசியுள்ளார். 


அவர் இந்தியாவில் 72  மணி நேரம் ரயிலில்
 பயணம் செய்து     இறங்கும் போது  அவர்
தமிழர்கள்  போல அசிங்கமாகவும்  கறுப்பாகவும்
இருந்தாராம்.


என்ன ஒரு கொழுப்பெடுத்த பேச்சு?


தாங்கள்தான் உயர்வானவர்கள், மற்றவர்கள்
கேவலமானவர்கள்  என்ற  வக்கிரமான 
 நிறவெறியின்  வெளிபாடல்லவா இது!


இதிலே  வட இந்திய மாணவர்கள் 
கைதட்டி விசிலடித்து  கொண்டாடினார்களாம்!


 நினைக்கவே  எரிச்சலாக உள்ளது. ஒரு
மாநில மக்களை இழிவு படுத்துவதை  
வரவேற்கும்  மாணவர்கள்  எங்கே 
இந்திய  ஒருமைப்பாட்டை  பாதுகாக்கப்
போகின்றார்கள்?


அவர்  நகைச்சுவையாகத்தான் பேசினார் 
என எஸ்.ஆர்.எம்  பல்கலைக்கழகம்  
சப்பைக்கட்டுவது  அவர்களிடம்  
ஊறிப்போயுள்ள  அடிமைப்புத்தியையே 
உணர்த்துகின்றது.


அமெரிக்க  தூதரகம்  இப்போது  மன்னிப்பு
கேட்டுள்ளது. தமிழர்களை  இழிவு  படுத்திய
அந்த அதிகாரியை  தமிழ் மண்ணிலிருந்தே 
அப்புறப்படுத்த வேண்டும்.

தமிழ்  அமைப்புக்கள் இப்பிரச்சினையை 
கையிலெடுக்க வேண்டும்
 

2 comments:

  1. தமிழ் அமைப்புக்கள் இப்பிரச்சினையை
    கையிலெடுக்க வேண்டும்

    நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html

    ReplyDelete