Wednesday, August 17, 2011

அமெரிக்காவில் அடிமைகள்




எங்கள் கோட்டச்சங்க  மாத இதழான  சங்கச்சுடர்  ஜுலை  மாத  
இதழிற்காக  எழுதியது.


நூல்  அறிமுகம்

நூல்  ;                          அமெரிக்க  கறுப்பு  அடிமையின்  சுயசரிதை



 


ஆசிரியர்  ;                பிரெடரிக்   ட்க்ளஸ்

 

தமிழில்    :                 இரா. நடராஜன், கடலூர்

 

வெளியீடு :                 பாரதி  புத்தகாலயம்
                                        சென்னை - 18

 

விலை     :                   ரூபாய்  50 /-

 

அமெரிக்க  வரலாற்றின்  இருண்ட  பக்கங்க்ளாக  
அங்கே  நிலவி  வந்த  அடிமை  முறையை
சொல்ல வேண்டும். ஆப்பிரிக்க  நாட்டின்  

சிறுவர்கள்  சிறை பிடிக்கப்பட்டு  அமெரிக்கா
கொண்டு வரப்பட்டு  அங்கே  விவசாயப் 

பண்ணைகளில்  மிகப் பெரிய உழைப்புச்
சுரண்டலுக்கு  உட்படுத்தப்பட்டனர்.  அப்படி

அடிமைகளாய் கொண்டு வரப்பட்ட பெண்கள்
பாலியல் கொடுமைகளுக்கு  உட்படுத்தப்பட்டு  

பிறக்கும்  குழந்தைகளும்  அடிமைகளாக
கொடுமைகளுக்கு  ஆளாக வேண்டும்.

 

அப்படி  ஒரு ஆப்பிரிக்க அடிமைக்கும்  அமெரிக்க 
முதலாளிக்கும்  பிறந்து  அடிமையாய்  வாழ்ந்து  
விடுதலையின்  தாகத்தில்  தப்பி வந்து   
பிற்காலத்தின்  அடிமைகளுக்காக  குரல் கொடுத்த  
பிரெடரிக் டக்ளஸ்  என்பவரின்  அடிமை கால 
வாழ்வு  பற்றியதுதான்
இந்த  நூல்.

 

கையில் எடுத்தால் முடிக்கும் வரை கீழே  வைக்க
முடியாத நூல்களில்  இதுவும் ஒன்று.
அடிமை முறையின்  அராஜகத்தை  கண் முன்னே

 நிறுத்தும் நூல் இது. சவுக்கடிகள் சாதாரணம், 
உணவு  என்பது  அரை வயிற்றுக்குத்தான், கல்வி 
கூடாது, சவுக்கடியில் இறந்தாலும்  கேள்வி கேட்க
முடியாது., கடவுள் புகழை பரப்புபவர்கள்  அடிமை முறை  
தொடர்வது, கடவுளுக்கான தொண்டு  என்று  
ஏமாற்றுவது, பெண்களை  தங்களின் பாலியல் 
வக்கிரங்களுக்கு  பயன்படுத்துவது, வயதான பெண்களை
காட்டின்   நடுவே  சாகட்டும்  என தனியே கொண்டு 

விடுவது  போல  தான் பார்த்த  அனுபவித்த  பல 
கொடுமைகளை  ட்க்ளஸ்  விவரித்துள்ளார்.

 

முதலாளி  இறக்கும் போது மற்ற சொத்துக்களை  
வாரிசுகளுக்கு  பங்கிடுவது போலவே  அடிமைகளையும்  
பங்கிடுவது  என்ற முறையை  படிக்கும் போது
அமெரிக்கர்கள்  மற்றவர்களை  என்றுமே  

மனிதர்களாக  கருதியதில்லை  போலும்
என்ற கோபம்தான்  எழுகின்றது.

 

தொடர்ந்து  தாக்கும்  முதலாளியை  ட்க்ளஸ்  திருப்பி  
அடிக்கும் போது  அவன்  பின்வாங்க, இவருக்கு  
விடுதலை  வேட்கை  அதிகரிக்கிறது. அவர்  எப்படி
தப்பினார்  என்பதை  மற்றும்  விவரிக்கவில்லை. 

அது மற்ற  அடிமைகளுக்கு  சிக்கலாகும்  என்பதே  
அத்தயக்கத்தின்  காரணம்.

 

1840ல்  வெளி வந்த இந்த நூல் அன்று  அமெரிக்காவில்
 மிகவும்  அதிகமாக  விற்பனையான  ஒரு புத்தகம். 
இந்த நூலை உலக அடிமை முறை  பற்றிய  மிக
முக்கியமானதொரு  ஆவணம்  எனறே  

சொல்லலாம்  என மிகச்சரியாக  நெல்சன் 
மாண்டேலா குறிப்பிட்டுள்ளார்.  மிகச்சிறப்பான  
முறையில்  தமிழாக்கம் செய்துள்ள  இரா.நடராஜன்
 பாராட்டுக்குரியவர்.

அலெக்ஸ் ஹேவியின் " ஏழு தலைமுறைகள் " 
படித்த போது  ஏற்பட்ட தாக்கம் , கோபம், எல்லாமே
இப்புத்தகத்தை படித்து முடித்த போதும் உருவானது.


No comments:

Post a Comment