Monday, March 28, 2016

சுஜாதா சொன்னது சரிதான்




நேற்று என் புத்தக அலமாரியை சுத்தம் செய்கையில் மதன் எழுதிய "வந்தார்கள், வென்றார்கள்" கண்ணில் பட்டது. ஏற்கனவே இரண்டு முறை படித்திருந்தாலும் ஒரு சில செய்திகளை உறுதிப்படுத்திக் கொள்ள மீண்டும் படிக்கத் தொடங்கினேன். இன்று சென்னை வேறு போக வேண்டியிருந்ததால் பயணத்தின் போது முழுமையாய் படித்தும் முடித்து விட்டேன்.

இந்தியாவின் பல நூற்றாண்டு வரலாற்றை இவ்வளவு எளிமையாகவும் சுவையாகவும் யாரும்  எழுதியதும் கிடையாது. வரலாறு என்பதற்காக கடுமையான மொழியும் கிடையாது. இன்றைய வழக்கத்தில் இருக்கும் மொழி நடையிலேயே எழுதியிருப்பதுதான் இந்த நூலின் சிறப்பு. 

"இம்மாதிரி யாராவது சரித்திரப்பாடம் எழுதியிருந்தால் நான் சரித்திரத்தில் நூற்றுக்கு நூறு வாங்கியிருப்பேன்" என்று முன்னுரையில் சுஜாதா எழுதியிருப்பார். 

அது நூற்றுக்கு நூறு சரி.

இது போல இயற்பியல் நூல் எளிமையாக இருந்திருந்தால் நான் கூட பனிரெண்டாம் வகுப்பில் அந்த பாடத்தில் ஏற்கனவே வாங்கியதை விட அதிகமான மதிப்பெண்கள் வாங்கியிருப்பேன். 

ஆனால் அது அவ்வளவு சுலபமானது அல்ல என்பதை இன்று படிக்கத் தொடங்கிய இன்னொரு நூல் உணர்த்துகிறது. அது பற்றி படித்து முடித்ததும் எழுதுவேன். 

2 comments:

  1. உண்மைதான் நண்பரே
    நானும் படித்து மகிழ்ந்திருக்கிறேன்

    ReplyDelete
  2. எளிமையான அறிமுகம். நன்று!

    ReplyDelete