Thursday, July 1, 2010

வெற்றிப் பயணம் தொடரும்

                                 








இன்று எங்களின் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்
அறுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.  மனம்
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எல்.ஐ.சி யில் பணியில்
சேராவிட்டால் இந்த அமைப்பில் இணையும் வாய்ப்பு
கிடைத்திருக்காது.  ஒரு சரியான திசைவழியில் செல்லும்
வாய்ப்பும் கிடைத்திருக்காது.


அலுவலகம், விட்டால் வீடு என்ற சராசரி குமாஸ்தா
வாழ்வில் காலம் முடிந்து போவதற்குப் பதிலாக
எல்லாவற்றையும் ஒரு அறிவியல் பார்வையோடு
அணுக கற்றுக் கொடுத்த ஒரு அமைப்பு. நிறுவனம்
நன்றாக இருந்தால்தான் நாமும் நன்றாக இருக்க
முடியும். நேர்மையான உழைப்பை வழங்குங்கள் என
உறுப்பினர்களை வலியுறுத்தும் அமைப்பு. நிறுவனத்தை
பாதுகாக்க தொடர்ந்து போராட்ட களத்தில் சளைக்காமல்
செயல்படும் அமைப்பு.

அலுவலகத்தின் நான்கு சுவர்களோடு நின்று போகாமல்
கையெழுத்து இயக்கம், பிரச்சார இயக்கம் என தன
உறுப்பினர்களை மக்கள் மத்தியில் இயங்கசசெய்த
சங்கம். உழைக்கும் மக்களின் ஒன்று பட்ட போராட்டம்
இல்லாமல் விடிவு சாத்தியமில்லை என உணர்த்தியுள்ள
சங்கம்.

மதச்சார்பின்மை, தீண்டாமை ஒழிப்பு போன்றவற்றில்
கவனம் செலுத்தும் அமைப்பு, நேரடியாக களத்தில்
நிற்கும் அமைப்பு. அவசர நிலை காலத்திற்கு எதிராக
உறுதியோடு போராடிய அமைப்பு.

உலகமயமாக்கலுக்கு எதிராக இந்தியாவிலேயே
முதல் குரல் எழுப்பிய அமைப்பு.

எல்.ஐ.சி தோன்றும் முன் உருவாக்கி, எல்.ஐ.சி யை
உருவாக்கி, இன்றுவரை  பாதுகாத்தும் வருகிற அகில 
இந்திய இன்சுரன்ஸ் ஊழியர் சங்கம் இன்று தனது
அறுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. 

மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். இந்த சங்கத்தில் 
நானும் ஒரு உறுப்பினர் என்பதிலே பெருமை 
கொள்கிறேன். இந்த வெற்றிப் பயணம் தொடரும்.
எங்கள் தியாக முன்னோரை போற்றுகிறேன். 

No comments:

Post a Comment