உக்ரைன் ரஷ்யா மீதான போரை நிறுத்த வேண்டும். உக்ரைனுக்கு இனி ஆயுத சப்ளை கிடையாது, அமெரிக்கா இதுவரை செய்த உதவிக்கு மாற்றாக உக்ரைன் தன் கனிம வளத்தை கொடுத்து விட வேண்டும் என்றெல்லாம் ட்ரம்ப் சொல்லிக் கொண்டிருந்தார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படை வெளியேறும் என்ற அறிவிப்பிற்கே பாரக் ஒபாமா நோபல் அமைதி விருது பெற்றது போல ட்ரம்பிற்கும் ஆசை போல என்று நினைத்திருந்தேன்.
அப்படியெல்லாம் எதுவும் கிடையாது என்பதை இன்றைய செய்தி உணர்த்தி விட்டது. அமெரிக்கா உக்ரைனுக்கு மீண்டும் ஆயுத சப்ளையை தொடங்கி விட்டது.
அப்பறம் என்ன?
போர்தான்! அழிவுதான், மறு கட்டமைப்புதான், அதுக்கான டீலிங்தான்.
ஒரு கிறுக்கனிடம் சிக்கிக் கொண்டு உலகமே தவிக்கிறது . . .
No comments:
Post a Comment