Thursday, April 10, 2025

அந்த அரசியல்வாதியும் இசை ஞானமும்

 


சங்கீத கலாநிதி டி.எம்.கிருஷ்ணாவின் முகநூல் பதிவொன்று மிகவும் சுவாரஸ்யமாக இருந்ததால் அதனை தமிழாக்கம் செய்து பகிர்ந்து கொள்கிறேன்.

"திரு ஆர்.எம்.வீரப்பன் அவர்களைப் பற்றிய ஒரு ஆவணப்படம் இன்று வெளியாகியுள்ளது. அவரைப்பற்றிச் சொல்ல என்னிடம் ஒரு கர்னாடகக் கதை ஒன்று உள்ளது.

திரு ஆர்.எம்.வீரப்பன் பல கர்னாடக இசைக் கச்சேரிகளுக்கு தொடர்ச்சியாக வருபவர்.

நான் புதுமுகமாக இருந்த காலத்தில் என்னுடைய கச்சேரி ஒன்றுக்கு வந்திருந்தார். அந்த கச்சேரியில் நீலகண்ட சிவன் முகாரி ராகத்தில் உருவாக்கிய "இன்றைக்கு சிவ கிருபை வருமோ?" என்ற கீர்த்தனையை பாடினேன். 

கச்சேரி முடிந்ததும் மேடைக்கு வந்து என்னை பாராட்டிய அவர் "சிவ கிருபை வருமோ" கீர்த்தனையின் அனு பல்லவி வரிகளை சொல்லச் சொன்னார். பாதியில் நிறுத்திய அவர், நான் எங்கே தவறு செய்தேன் என்று சுட்டிக் காட்டி "இந்த கீர்த்தனையை முசிறி பாடி கேட்டுள்ளீர்களா?' என்றும் கேட்டார். அதனை நான் கேட்க வேண்டியது அவசியம் என்பதை அவர் நாசூக்காக சொன்னார்.

கர்னாடக இசைக் கலைஞர்களான எங்களுக்கு அரசியல்வாதிகளுக்கு இசை பற்றி எதுவும் தெரியாது என்றொரு கருத்து உண்டு. அது எவ்வளவு தவறான கருத்து என்பதை இச்சம்பவம் உணர்த்தியது." 

இந்த சம்பவத்தை எழுதிக் கொண்டிருக்கும் போதே இசை ஞானம் கொண்ட இன்னொரு அரசியல் வாதி நினைவுக்கு வந்தார். மிருதங்க மேதை உமையாள்புரம் சிவராமன் பற்றி அவர் எழுதிய கட்டுரையைக் கூட இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

அந்த அரசியல்வாதி யார்?

அவர்

தோழர் எம்.ஏ.பேபி,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச்செயலாளர்.

பிகு :  அவருக்கு வாழ்த்து தெரிவித்தோ, மதுரை போய் விட்டு வந்தது பற்றி கூட இன்னும் எழுதவில்லை என்பதும் இப்போது நினைவுக்கு வந்தது. எழுதுவேன்.  

No comments:

Post a Comment