Thursday, April 10, 2025

அந்த அரசியல்வாதியும் இசை ஞானமும்

 


சங்கீத கலாநிதி டி.எம்.கிருஷ்ணாவின் முகநூல் பதிவொன்று மிகவும் சுவாரஸ்யமாக இருந்ததால் அதனை தமிழாக்கம் செய்து பகிர்ந்து கொள்கிறேன்.

"திரு ஆர்.எம்.வீரப்பன் அவர்களைப் பற்றிய ஒரு ஆவணப்படம் இன்று வெளியாகியுள்ளது. அவரைப்பற்றிச் சொல்ல என்னிடம் ஒரு கர்னாடகக் கதை ஒன்று உள்ளது.

திரு ஆர்.எம்.வீரப்பன் பல கர்னாடக இசைக் கச்சேரிகளுக்கு தொடர்ச்சியாக வருபவர்.

நான் புதுமுகமாக இருந்த காலத்தில் என்னுடைய கச்சேரி ஒன்றுக்கு வந்திருந்தார். அந்த கச்சேரியில் நீலகண்ட சிவன் முகாரி ராகத்தில் உருவாக்கிய "இன்றைக்கு சிவ கிருபை வருமோ?" என்ற கீர்த்தனையை பாடினேன். 

கச்சேரி முடிந்ததும் மேடைக்கு வந்து என்னை பாராட்டிய அவர் "சிவ கிருபை வருமோ" கீர்த்தனையின் அனு பல்லவி வரிகளை சொல்லச் சொன்னார். பாதியில் நிறுத்திய அவர், நான் எங்கே தவறு செய்தேன் என்று சுட்டிக் காட்டி "இந்த கீர்த்தனையை முசிறி பாடி கேட்டுள்ளீர்களா?' என்றும் கேட்டார். அதனை நான் கேட்க வேண்டியது அவசியம் என்பதை அவர் நாசூக்காக சொன்னார்.

கர்னாடக இசைக் கலைஞர்களான எங்களுக்கு அரசியல்வாதிகளுக்கு இசை பற்றி எதுவும் தெரியாது என்றொரு கருத்து உண்டு. அது எவ்வளவு தவறான கருத்து என்பதை இச்சம்பவம் உணர்த்தியது." 

இந்த சம்பவத்தை எழுதிக் கொண்டிருக்கும் போதே இசை ஞானம் கொண்ட இன்னொரு அரசியல் வாதி நினைவுக்கு வந்தார். மிருதங்க மேதை உமையாள்புரம் சிவராமன் பற்றி அவர் எழுதிய கட்டுரையைக் கூட இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

அந்த அரசியல்வாதி யார்?

அவர்

தோழர் எம்.ஏ.பேபி,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச்செயலாளர்.

பிகு :  அவருக்கு வாழ்த்து தெரிவித்தோ, மதுரை போய் விட்டு வந்தது பற்றி கூட இன்னும் எழுதவில்லை என்பதும் இப்போது நினைவுக்கு வந்தது. எழுதுவேன்.  

சங்கிகள் மட்டுமல்ல அதிமுகவினரும் கூட . . .

 


சங்கிகள் மூடர்கள் என்பது அனைவரும் அறிந்ததுதான். அதிமுக உறுப்பினர்கள் கூட அப்படித்தான் இருந்திருக்கின்றனர் என்பதை பழைய பதிவு ஒன்று சொன்னது.

ஒரு தகவலை சரி பார்க்க பழைய பதிவுகளை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது கண்ணில் பட்ட பழைய பதிவு கீழே உள்ளது.

பதிவுக்கு செல்வதற்கு முன்பாக ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்.

காங்கிரஸ் ஆட்சியில் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது கொடுத்தார்கள். அவருக்கு அந்த விருது அவசியமில்லை என்று ஒரு நீண்ட, நெடிய பதிவு ஒன்றை எழுதினேன். அதிகமான பின்னூட்டங்கள், ஆனால் அனைத்தும் நாகரீகமாக வந்த பதிவு அது.

சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா அவசியமில்லை - சுட்டெரிக்கும் உண்மைகள்  என்ற அந்த பதிவை இணைப்பின் மூலம் அதனை படித்து விடுங்கள்.

 அந்த பதிவை குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் மூன்று பக்கத்திற்கு வெளியிட்டார்கள். அதற்கு வந்த வாசகர் கடிதம்தான் அதிமுகவினர் பற்றிய மதிப்பீட்டிற்குக் காரணம்.

 

Friday, November 29, 2013

எம்.ஜி.ஆர் "பாரத ரத்னா" வை திருப்பி அனுப்பினாரா? சொர்க்கத்திலிருந்தா? 

 

சச்சினுக்கு பாரத ரத்னா அவசியமில்லை என்று நான் எழுதியிருந்தது     கடந்த வெள்ளியன்று வெளியான குமுதம் ரிப்போர்ட்டர் இதழில்
பிரசுரமாகி இருந்தது. அக்கட்டுரைக்கான வாசகர் கடிதங்கள் இன்று
வெளியான குமுதம் ரிப்போர்ட்டர்  இதழில் பிரசுரமாகியுள்ளது.

மொத்தம் ஏழு கடிதங்கள். அதிலே நான்கு கடிதங்கள் எனது கருத்திற்கு
ஆதரவாகவும் மூன்று கடிதங்கள் மாற்றுக் கருத்துக்களோடும் 
வெளியாகியுள்ளது. 

பொது வெளியில் எழுதும் போது விமர்சனங்கள் கண்டிப்பாக வரும்  என்ற புரிதலோடுதான் எழுதுகிறோம். அது வாசகர்களுக்கான  கருத்துச் சுதந்திரம். இது வலைப்பக்கத்திற்கும் பொருந்தும். என்ன வரும் பின்னூட்டங்கள் கொஞ்சம் வன்மத்தோடோ, வக்கிரத்தோடோ இல்லை அபத்தமாகவோ, இல்லை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு இடப்பட்டால் கொஞ்சம் கடுமையாக எதிர் வினை ஆற்ற வேண்டியுள்ளது.

சரி இப்போது விஷயத்திற்கு வருகிறேன்.மாற்றுக் கருத்தோடு வந்த மூன்று கடிதங்களும் எம்.ஜி.ஆர் பற்றி   நான் எழுதியிருந்ததை சரியாக புரிந்து கொள்ளாமல் எழுதப்  பட்டவை. அதற்கும் விளக்கமளிக்க முடியும். ஆனாலும் நான்  எழுதப் போவதில்லை. மிகவும் போரடித்து விட்டது.

ஆனாலும் கூட

சிவகாசியைச் சேர்ந்த  ரெய்கி செ.வேதமூர்த்தி அவர்கள் எழுதிய
கடிதத்தை படித்து விட்டு விழுந்து விழுந்து சிரித்தேன்.

இதோ அந்த கடிதம்.

"பாரத ரத்னா விருது குறித்து எஸ்.ராமன் அநாவசியமாக     எம்.ஜி.ஆரையும்  அவரது  தொண்டர்களையும் வம்புக்கு இழுக்கிறார். இதை அப்போதே கருணாநிதி செய்து எம்.ஜி.ஆர் திருப்பி அனுப்ப,  ' இல்லை. உங்களுக்கு தகுதியின் அடிப்படையில்தான்   தரப்பட்டதாக மத்திய அரசும் விளக்கமும் தந்தது""

நான் எனது கட்டுரையில் எம்.ஜி.ஆருக்கு அவர் இறந்ததற்குப்   பின்பே பாரத ரத்னா அளிக்கப்பட்டது என்பதை மிகவும் தெளிவாக  எழுதியிருந்தேன். மரணத்திற்குப் பிறகு அளிக்கப்பட்ட    பாரத ரத்னா விருதை திருமதி ஜானகி ராமச்சந்திரன் பெற்றுக்  கொள்ள, அதை எம்.ஜி.ஆர் எப்படி திருப்பி அனுப்பினார்? 


மத்திய அரசு எம்.ஜி.ஆருக்கு எப்படி விளக்கம் அளித்தது?   யார் எங்கே சென்று விளக்கம் அளித்தார்கள்? யார் எம்.ஜி.ஆருக்கு   விளக்கம் அளிக்க சொர்க்கம்/நரகம் சென்றார்கள்? 

இதற்குத்தான் இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசியில்  வடிவேலு மிகவும் தெளிவாக, ஆணித்தரமாக சொன்னார்.

" வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே"

 

 

Wednesday, April 9, 2025

செம காமெடி சீமான் . . .

 


முகநூலில் நான் பார்த்து ரசித்த, வாய் விட்டு சிரித்த ஒரு சீமான் காமெடி, கீழே, நீங்களும் சிரிக்க . . .



மொழி புரியாவிட்டாலும் உணர்வூட்டும் . . .

 


முகநூலில் பார்த்த காணொளி கீழே உள்ளது.

அரசியல் சாசனத்தின் முகப்பு பின்புலத்தில் உள்ளது. இது பாடலா, முழக்கமா அல்லது சேர்ந்திசையா?

மொழி புரியவில்லை.

ஆனால் உணர்வூட்டுகிறது.

ஆசாதி என்று மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது. அது விடுதலைக்கான தேடல் என்பது புரிகிறது. 

அரசியல் சாசனத்தை முடக்க நினைக்கும் அராஜக சக்திகளிடமிருந்து மக்களுக்கான விடுதலையை வலியுறுத்தும் பாடலாக நான் கருதுகிறேன். மொழி தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். 

பிகு: நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. மொழித் திணிப்புக்கு மட்டுமே எதிரானவர்கள்.

இப்போது காணொலிக்கு செல்லுங்கள்



Tuesday, April 8, 2025

சீமான், ஆட்டுக்காரன், வடிவேலு, மனோபாலா

 


சமீபத்தில் சீமானும் ஆட்டுக்காரனும் ஒரே மேடையில் பேசியுள்ளார்கள்.  அதிலே ஆட்டுக்காரன் சீமான் பற்றி ஆட்டுக்காரன் பேசியதுதான் மேலே உள்ளது. அந்த பேச்சை கேட்ட போது நினைவுக்கு வந்த காட்சிதான் மேலே உள்ளது. 

சீமானும் ஆட்டுக்காரனும் நிறைய மேடைகளில் ஒன்றாக பேச வேண்டும். அப்போதுதான் நிறைய காமெடி காட்சிகள் கிடைக்கும் .. .

ஓடிப் போவியா ஆரெஸெஸ் ஆட்டுத்தாடி ரெவி?

 


தமிழக சட்டமன்றம் இரண்டாவது முறையாக நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய பத்து மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றமே ஒப்புதல் அளித்து தீர்ப்பளித்து விட்டது.

இத்தீர்ப்பின் மூலம் அசிங்கப்பட்ட முதல் ஆள் ஆட்டுத்தாடி ஆரெஸெஸ் ரெவி, அதற்கடுத்தது தவறாக வழிகாட்டி உசுப்பேற்றிய ஒன்றிய அரசு, மூன்றாவதாக ரெவி அனுப்பிய மசோதாக்களை திருப்பி அனுப்பாமலும் முடிவெடுக்காமலும் வைத்திருந்த ஜனாதிபதி.

இன்றைய தீர்ப்பின் மூலம் ரெவியின் ஆணவத்திற்கு, திமிருக்கு, மத வெறிக்கு, கொழுப்பிற்கு, முரட்டுத்தனத்திற்கு, மூடத்தனத்திற்கு சவுக்கடி கிடைத்துள்ளது.

என்ன செய்யப் போகிறாய் ரெவி?

வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை உள்ள ஆளாக இருந்திருந்தால் ரெவி இத்தனை நேரம் தூக்கில் தொங்கி இருக்க வேண்டும்.

அதெல்லாம் அந்த ஜந்துவிற்கு எதுவும் கிடையாது.

இவ்வளவு அசிங்கப்பட்டதற்கு பிறகு ரெவி குறைந்த பட்சம் பதவியிலிருந்து ராஜினாமா செய்து விட்டாவது ஓட வேண்டும்.

ஆட்டுத்தாடி பதவியின் சொகுசை விட முடியவில்லை என்றால் மோடியிடம் கெஞ்சிக் கேட்டு வேறு மாநிலத்திற்காவது ஓட வேண்டும்.

இல்லையென்றால் அன்றாடம் சவுக்கடிதான் கிடைக்கும் . . .

மொட்டைச்சாமியார் ஆட்சியும் தலைமை நீதிபதியும்

 


சமீப காலமாக உச்ச நீதிமன்றம் மொட்டைச்சாமியாரின் ஆட்சியை தொடர்ந்து கண்டித்துக் கொண்டே இருக்கிறது. புல்டோசர் இடிப்புக்களுக்கு இழப்பீடு கொடுக்கச் சொன்னது.

இப்போது ஒரு சிவில் வழக்கை கிரிமினல் வழக்காக மாற்றியதை கண்டிக்கையில்


உத்திரப் பிரதேச மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி சீரழிந்து விட்டதாக கண்டித்துள்ளார்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.

வெ.மா.ரோ.சூ.சொ உள்ளவராக மொட்டைச்சாமியார் இருந்தால் இந்நேரம் ராஜினாமா செய்து கோரக்நாதர் கோயிலுக்கு பூசாரியாகி இருப்பார்.

அதெல்லாம்  இல்லாததால் தலைமை நீதிபதிக்கு லோயா சிகிச்சை கொடுக்கலாமா  என்று சிந்தித்துக் கொண்டு இருப்பார்.



Monday, April 7, 2025

மோடி கைய வச்சா ராங்கா போகுமடா

 


நேற்று மோடி புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்துள்ளார். ஏற்கனவே நூறாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலத்திற்கு பதில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. பழைய பாலத்தை கட்டியது குஜராத்திகள் என்று பொய் சொல்லி அசிங்கப்பட்டது வேறு கதை. அந்தாளு உண்மை பேசினால்தான் அது அதிசயம்.


கப்பல் வரும் போது பாலத்தின் கதவுகள் திறக்கும். இந்த புதிய பாலத்தில் அவை லிப்ட் போல மேலே உயர்ந்து திறக்கும். அது நேற்று வேலை செய்ய தடுமாறி இருக்கிறது. இதுதான் மோடியின் ராசி என்று வழக்கம் போல பலரும் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

மோடி துவக்கி வைத்த எல்லா திட்டங்களிலும் சிக்கல் வருகிறது என்றால் அதற்கு ஒரே ஒரு காரணம்தான் உண்டு.

அந்த திட்டங்கள் முழுமையடையும் முன்பே மோடி திறக்க வேண்டும் என்று அவசரம் அவசரமாக அரைகுறை வேலை செய்தால் அவை இப்படித்தான் பல் இளிக்கும். 

இந்த பாலத்திற்கான கட்டுமானப் பணிகள் சரியாக இல்லை, ஏராளமான குறைபாடுகள் இருக்கிறது என்று ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சொல்லியிருந்தது நினைவுக்கு வருகிறது.

ராம நவமி அன்று ராமேஸ்வரத்தில் மோடி ஒரு பாலத்தை திறந்தார் என்று சீன் போட்டால் அது ரிப்பேர்தான் ஆகும்.

மோடி கைய வச்சா அது ராங்காதான் போகுமடா . . .

Saturday, April 5, 2025

சங்கிகள் ஏன் அயோக்கியர்கள்? அடி முட்டாள்கள்?

 


சங்கிகள் அயோக்கியர்கள், அடி முட்டாள்கள் என்று எப்போதுமே நான் சொல்வேன். அதற்கான இன்னொரு சான்றாக சங்கிகள் பகிர்ந்து கொண்டிருக்கிற ஒரு படம் கீழே.

 


தமிழ்நாட்டின் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கைதான் 39 ஏ தவிர திமுக எம்.பி க்கள் 22 பெர்தான். காங்கிரஸ், சி.பி.எம், சி.பி.ஐ, விசிக, மதிமுக, கொங்கு மக்கள் கட்சி, முஸ்லீம் லீக், தமுமுக கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்ற 17 பேர்.

 உண்மை இப்படி இருக்கையில் திமுக எம்.பி க்கள் 17 பேர் காண்டீன் போய் விட்டார்கள் என்று பொய்ப் பிரச்சாரம் செய்வது அயோக்கியத்தனம், அதை அப்படியே நம்பி பகிர்பவர்கள் அடி முட்டாள்கள்.

 

இதெல்லாம் மோடியால் முடியாது . . .

 



மதுரையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் எடுக்கப்பட்ட காணொளி கீழே.

 


மாநாட்டில் பங்கேற்றுள்ள கேரள மாநில பிரதிநிதிகளோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் வருகிறார்.

 அவரும் இயல்பாக வருகிறார். கருப்பு பூனை பாதுகாப்பு, சுற்றி பத்து அல்லக்கைகள் என்று யாரும் கிடையாது.  அவர் வகுகையை கேரள மாநில பிரதிநிதிகளும் இயல்பாக எடுத்துக் கொள்கிறார்கள். வெட்டி பந்தாவோ, முகத்தில் பிரமிப்போ,  ஆரவாரமோ இல்லை.

 இதுதான் கம்யூனிஸ்டுகளின் இயல்பு.

மோடியால் இது போல எளிமையாக நடமாட முடியுமா? ஆட்டுக்காரனால் கூட முடியாது. 

Friday, April 4, 2025

ஆட்டுக்காரனை தூக்காதீங்கய்யா . . .

 


ஆட்டுக்காரன் பாஜக மாநிலத் தலைவர் பதவியிலிருந்து செல்வது அந்த கட்சிக்கு இழப்பா, வரமா என்று எனக்கு தெரியாது. மத்யமர் ஆட்டுக்காரன் குழு சங்கிகளீலேயே பாதி பேர் ஆட்டுக்காரனுக்காக புலம்புவதையும் பாதி பேர் மௌனமாக வேடிக்கை பார்ப்பதுமாக நிலைமை உள்ளது. அதனை பாஜகவிற்குள்ளே நடக்கும் ஆரிய-திராவிட மோதலாகக் கூட சொல்ல முடியும்.

ஆனால் சமூக ஊடகங்களுக்கு ஆட்டுக்காரன் செல்வது மிகப் பெரிய இழப்பு.

அபத்தமாக உளறிக் கொண்டு, சாட்டையடி மாதிரி காமெடிகள் செய்து கொண்டு  திரிகிற ஒரு முட்டாள் இல்லாமல் கண்டெண்ட் கொடுக்க ஆட்டுக்காரன் மாதிரி வருமா?

இனி புதிதாக வரக்கூடிய மாநிலத் தலைவரும் ஆட்டுக்காரன் போல முட்டாளாக, வெட்டி உதார் செய்யும் ஒருவராக இருந்தால் நலம்.

ஒரே நாடு – ரெண்டு நவராத்திரி

 


நவராத்திரி காலம் தொடங்கி விட்டதால் ஆட்டுக்கறி, கோழிக்கறி விற்க மத்தியப் பிரதேச அரசு தடைபோட்டுள்ளது ரம்ஜான் கொண்டாடும் இஸ்லாமியர்களை கடுமையாக பாதித்துள்ளதென்று ஒரு செய்தி படித்தேன்.

 நம்ம ஊர்ல செப்டம்பர், அக்டோபர்லதான நவராத்திரி வரும், இது என்ன புதுசா இருக்கு என்ற சந்தேகத்தோடு கூகிளாரை அணுகினேன். மார்ச் 30 முதல் ஏப்ரல் ஏழு வரை நவராத்திரி என்று பதில் சொன்னது. அதற்கு சைத்ர நவராத்திரி என்று பெயராம்.

 


தமிழ்நாட்டில் எப்போது?

 01.10.2025 ஆயுத பூஜைக்கு விடுமுறை என்று தமிழக அரசு சுற்றறிக்கை போட்டுள்ளது. அப்படியென்றால் 23.09.2025 முதல் 01.10.2025 வரை இங்கே நவராத்திரி.

 கர்னாடகா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் இந்த காலம்தான் நவராத்திரி, தஸரா, துர்கா பூஜா என்ற பெயர்களில் கொண்டாடப்படும்.

 ஏம்பா மோடி, உங்களால உங்க மதத்திற்குள்ளேயே

ஒரே நாடு, ஒரே நவராத்திரியே

முடியாத போது, என்ன எழவுக்கு

 ஒரே நாடு   ஒரே மொழி
ஒரே நாடு -  ஒரே மதம்
 ஒரே நாடு-   ஒரே கலாச்சாரம்
ஒரே நாடு – ஒரே தேர்தல்
 

என்று வெட்டித்தனமா வெறி பிடிச்சி அலையறீங்க ?

 

Thursday, April 3, 2025

சென்னைக்கு வருகிறார் மார்க்ஸ்

 



 

ஆயிரமாண்டுகளின்
அதிசய மனிதன்.
வாக்களித்துச் சொன்னது
உலகம்.
 
நெருக்கடியில் சிக்கித்
தவித்தது
முதலாளித்துவ பொருளாதாரம்,
மீட்சிக்கான வழி தேடி
புரட்டிப் பார்த்தது
அதிசய மனிதன்
எழுதிய மூலதனத்தைத்தான்.
 
இழப்பதற்கு ஏதுமில்லை,
வெல்வதற்கோ
பொன்னுலகம் காத்திருக்கிறது.
 
இன்று வரை
தொழிலாளி வர்க்கம்
உயிர்த்திருக்கும்
உன்னத முழக்கம் இதுவன்றோ!
 
காரல் மார்க்ஸின்
வார்த்தைகள் கம்பீரம்.
வாழ்க்கை கம்பீரம்
உருவாக்கி உலகுக்குத் தந்த
கொள்கை கம்பீரம்.
 
உற்சாகமூட்ட,
உத்வேகமளிக்க
கம்பீரமாய்
சென்னை வருகிறார்
காரல் மார்க்ஸ்
சிலையின் வடிவிலே . . .

 


பிகு : மேலே உள்ள காரல் மார்க்ஸ் சிலை, மதுரையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

 

Wednesday, April 2, 2025

ஆபரேஷன் பிரம்மா- ரேட் சொல்லிட்டீங்களா மோடி?

 


நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மருக்கு நிவாரணப்பணி செய்ய இந்திய ராணுவம் சென்றுள்ளது. அதற்கு "ஆபரேஷன் பிரம்மா" என்று பெயர் சூட்டியுள்ளார் மோடி.

மோடியிடம் கேட்க வேண்டிய கேள்வி ஒன்று உண்டு,

நிவாரணப்பணிக்கு எவ்வளவு கட்டணம் பேசியுள்ளீர்கள் என்று மியன்மர் அரசிடம் சொல்லி விட்டீர்களா? பிறகு பில் அனுப்பினால் பிரச்சினையாகி அசிங்கமாகி விடும்.

நிவாரணப்பணிக்கு கட்டணமா?

கேரளா பெரு வெள்ளத்தின் போதும் வயநாடு நிலச்சரிவின் போதும் கேரளாவில் ராணுவமும் விமானப் படையும் செய்த பணிக்கு கட்டணம் நிர்ணயித்து கந்து வட்டிக்காரனை விட மோசமாக வசூல் செய்ததுதானே மோடி அரசு!

ரோஹிங்க்யா முஸ்லீம்களை மியன்மரிலிருந்து துரத்தியதை பாராட்டி ஒரு வேளை கட்டணமில்லாமல் சேவை செய்தாலும் ஆச்சர்யமில்லை.

ஆணவக்கொலையை மறைக்கும் மர்மமென்ன எஸ்.பி????

 



 

கீழேயுள்ள செய்தியை தமுஎகச பொதுச்செயலாளர் தோழர் ஆதவன் தீட்சண்யா அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து எடுத்து பகிர்ந்துள்ளேன்.

 

கல்லூரி மாணவி #ஆணவக்_கொலை!

அண்ணனே தங்கையை அடித்துக் கொன்ற கொடூரம்!!

😡😡😡😡😡

 #கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை தமிழ் இலக்கியம் படித்து வந்த கோயம்புத்தூர் மாவட்டம் பருவாய் கிராமத்தைச் சேர்ந்த  தண்டபாணி - தங்கமணி ஆகியோரின் மகள் வித்யா (வயது 21) என்பவரும் அதே கல்லூரியில் எம்.பில் படித்த திருப்பூரை சேர்ந்த வெண்மணி என்பவரும் கடந்த 2022 முதல் காதலித்து வந்தனர்

 வித்யா தொடர்ந்து கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு எம். படித்து வந்தார்.   வெண்மணி முனைவர் பட்ட ஆய்வுக்காக தேசிய தகுதி தேர்வு எழுதி JRF திட்டத்தின் கீழ் தேர்ச்சி பெற்றுள்ளார்

 வெண்மணி மிகப் பிற்படுத்தப்பட்ட குலாலர் சமூகத்தைச் சார்ந்தவர். வித்யா மிகப் பிற்படுத்தப்பட்ட நாவிதர் சமுதாயத்தைச் சார்ந்தவர் ஆவார்

 இருவரும் காதலித்து வந்ததை கடந்த பிப்ரவரி 2025- இல் வித்யாவின் பெற்றோர் தெரிந்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் என்பதாலும், வெண்மணி குடும்பம் வித்யாவின் குடும்பத்தை விட பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பம் என்கிற காரணத்தினாலும் வித்யாவின் பெற்றோரும், சகோதரர் சரவணகுமாரும் இருவரின் காதலுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அது முதல் வித்யாவை அவர்கள் வெண்மணியுடன் பழகக் கூடாது என்று தடுத்தும், சில நாட்கள் கல்லூரிக்கு செல்ல விடாமல் தடுத்தும் வந்தனர்

 வித்யாவுக்கு சரிவர உணவு கொடுக்காமல், அவருடைய கல்லூரி செலவுகளுக்கு பணம் கொடுக்காமல் கொடுமை செய்துள்ளனர். வெண்மணியும், அவரது தந்தையும் வித்யாவின் அண்ணன் சரவணகுமார் மூலமாக பேசி திருமணம் செய்து கொடுக்கும்படி கேட்ட போதும் அவர்கள் சாதியையும், பொருளாதார நிலையையும் காரணமாக காட்டி திருமணத்திற்கு மறுத்து விட்டனர்.   

 வித்யா இந்த சூழ்நிலைகளை பொறுத்துக் கொண்டு தொடர்ந்து கல்லூரிக்கு சென்றுக் கொண்டிருந்தார். மேலும், வித்யா தன்னுடைய கல்விச் செலவுகளுக்காக காரணம்பேட்டையில் உள்ள ஒரு கடையில் பகுதி நேரமாக வேலை செய்து கொண்டிருந்தார். வித்யா கல்லூரி செல்லும் நேரம் மட்டும் வெண்மணி அவருடன் அலைபேசியில் பேசி வந்துள்ளார். பிற நேரங்களில் அவரது வீட்டின் கண்டிப்பான சூழல் காரணமாக அவரிடம் பேச இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

 இந்நிலையில் கடந்த 27.03.2025 வியாழன் அன்று கடைசியாக வித்யாவை வெண்மணி நேரில் பார்த்து பேசியுள்ளார். அவர் திருப்பூர் வந்து தேசிய தகுதி தேர்வு(நெட்) எழுதுவதற்கான புத்தகங்களை வெண்மணியிடம் பெற்றுச் சென்றுள்ளார். அதுசமயம் அவரது பெற்றோரும், சகோதரரும் தொடர்ந்து காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், தன்னை வேறு ஒருவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்வதாகவும், ‘நான் மறுத்தால் எனது உயிருக்கு கூட அச்சுறுத்தல் ஏற்படலாம்என்றும் வெண்மணியிடம் வித்யா தெரிவித்துள்ளார்

 வெண்மணிஅவ்வாறு எந்த சூழல் வந்தாலும் தனக்கு அழைக்கும் படியும், தான் பாதுகாத்துக் கொள்கிறேன் என்றும், திருமணம் செய்து கொள்ளலாம்என்று உறுதி அளித்தும் ஆறுதல் கூறி அனுப்பி உள்ளார்.

 இந்நிலையில் கடந்த 30/03/25 மாலை சுமார் 5.00 மணி அளவில் வித்யா இறந்து விட்டதாக வெண்மணிக்கு தகவல் கிடைத்துள்ளது. தனது நண்பர்கள் மூலமாக என்ன நடந்தது என்று விசாரித்த போது வீட்டில் இருந்த பீரோ விழுந்து வித்யா இறந்து விட்டதாக வித்யாவின் பெற்றோர், சகோதரர் அக்கம் பக்கத்தினரிடம் தகவல் சொல்லியுள்ளதும் வித்யாவை உடனடியாக அவசர அவசரமாக அடக்கம் செய்து விட்டதாதும் தெரிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தார்

 மேற்படி தகவல் நம்பும்படியாக இல்லை என்பதால், தானும் வித்யாவும் காதலிப்பதை பொறுக்காத வித்யாவின் பெற்றோர் மற்றும் சகோதரர் தொடர்ந்து வித்யாவுக்கு துன்புறுத்தல்கள் கொடுத்து வந்த நிலையில் வித்யாவின் மரணம் தனக்கு மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், வித்யாவின் மரணம் குறித்து காவல்துறைக்கோ அரசு துறைக்கோ அவரது பெற்றோர் எந்த தகவலும் கொடுக்காமல் அவசரம் அவசரமாக உடனடியாக வித்யாவை அடக்கம் செய்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்து பல்லடம் வழக்குரைஞர் செந்தில்குமார் உதவியுடன் கடந்த 31/03/2025 அன்று திருப்பூர் மாவட்டம், காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் வெண்மணி புகார் அளித்தார்

 வெண்மணியின் புகாரின் அடிப்படையில் வித்யா சந்தேகப்படும்படியாக மரணம் அடைந்த காரணத்தினால் காவல் ஆய்வாளர் உடனடியாக விசாரணை நடத்தி வித்யாவின் மரணத்தில் சந்தேகம் இருக்கின்ற காரணத்தினால் 31/03/25 அன்று வித்யாவை புதைத்த இடத்தில் வைத்தே சட்டம் சார்ந்த மருத்துவர்கள் மூலமாக சடல கூறாய்வு செய்ய நடவடிக்கை எடுத்தார். வித்யாவின் வீட்டிலும் தடய அறிவியல் ஆய்வாளர்கள் சோதனை நடத்தினர்

 வித்யாவின் உடல் சடலக் கூராய்வு செய்த நிலையில் அவர் கம்பியால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் என்பதை அறிந்த காவல்துறையினர் விசாரணையை தீவிர படுத்தினர்.

 காவல்துறை விசாரணையில் வித்யாவின் அண்ணன் சரவணகுமார் மாற்று சமூகத்தைச் சார்ந்தவரை காதலித்த காரணத்துக்காக சொந்த தங்கையையே கம்பியால் அடித்து படுகொலை செய்தது உறுதியாகி உள்ளது. வித்யாவின் பெற்றோர் இந்த படுகொலையை மறைப்பதற்காக அவருக்கு உடந்தையாக இருந்துள்ளதும் அம்பலமாகியுள்ளது

 சாதி, ஆணாதிக்க வெறியுடன் சொந்தத் தங்கையை சரவணன் படுகொலை செய்துள்ளான்....

 இன்னொரு புறம் இந்த சமூகத்தில் ஒரு கூட்டம் மாந்தநேய உணர்வும், வெட்கமும், இரக்கமும் இன்றி ஆணவக் கொலை குற்றவாளி யுவராஜ்களை நாயகனாக கொண்டாடிக் கொண்டிருக்கிறது...

 செய்தி :

#புரட்சிகர_இளைஞர்_முன்னணி 

#கோயம்புத்தூர்.

 #சாதிஆணவபடுகொலை #CasteDiscrimination

#HonourKilling

 Malaravan Arthur பக்கத்திலிருந்து

 ஆனால் இந்த ஆணவக் கொலை பற்றி திருப்பூர் மாவட்ட எஸ்.பி என்ன சொல்லியுள்ளார் பாருங்கள்.

 

நடந்ததை ஆணவக் கொலை என்று சொல்வதில் காவல்துறைக்கு என்ன பிரச்சினை? படிக்காத காரணத்தால் தாக்கினார் என்று எஸ்.பி ஏன் கதை அளக்கிறார்? ஆணவக் கொலை செய்தவனோடு ஏதாவது டீலிங்கா? ஆணவக் கொலை என்றால் அரசுக்கு கெட்ட பெயர் வரும் என்று அரசை பாதுகாக்கும் முயற்சியா?

 எது காரணமாக இருந்தாலும் எஸ்.பி யின் அறிக்கை கேவலமானது. உண்மையை மறைப்பதினால் அரசிற்கு அதிகமான கெட்ட பெயர்தான் வந்துள்ளது.

 காவல்துறையின் ஈரல் அழுகிப் போயுள்ளது என்று முன்பொரு முறை கலைஞர் குறிப்பிட்டார். இப்போது காவித்துறையாக மாறிக் கொண்டிருக்கும் காவல் துறையின் ஈரல் மட்டுமல்ல, மூளை, இதயம், சிறுநீரகம், குடல் என எல்லாமுமே அழுகிப் போய் விட்டது.

 உடனடியாக அதிரடி அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் தமிழக காவல்துறைக்கு மட்டும் மரிக்காது, அரசும் கூட . . .