நேற்று மோடி புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்துள்ளார். ஏற்கனவே நூறாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலத்திற்கு பதில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. பழைய பாலத்தை கட்டியது குஜராத்திகள் என்று பொய் சொல்லி அசிங்கப்பட்டது வேறு கதை. அந்தாளு உண்மை பேசினால்தான் அது அதிசயம்.
கப்பல் வரும் போது பாலத்தின் கதவுகள் திறக்கும். இந்த புதிய பாலத்தில் அவை லிப்ட் போல மேலே உயர்ந்து திறக்கும். அது நேற்று வேலை செய்ய தடுமாறி இருக்கிறது. இதுதான் மோடியின் ராசி என்று வழக்கம் போல பலரும் பேச ஆரம்பித்து விட்டார்கள்.
மோடி துவக்கி வைத்த எல்லா திட்டங்களிலும் சிக்கல் வருகிறது என்றால் அதற்கு ஒரே ஒரு காரணம்தான் உண்டு.
அந்த திட்டங்கள் முழுமையடையும் முன்பே மோடி திறக்க வேண்டும் என்று அவசரம் அவசரமாக அரைகுறை வேலை செய்தால் அவை இப்படித்தான் பல் இளிக்கும்.
இந்த பாலத்திற்கான கட்டுமானப் பணிகள் சரியாக இல்லை, ஏராளமான குறைபாடுகள் இருக்கிறது என்று ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சொல்லியிருந்தது நினைவுக்கு வருகிறது.
ராம நவமி அன்று ராமேஸ்வரத்தில் மோடி ஒரு பாலத்தை திறந்தார் என்று சீன் போட்டால் அது ரிப்பேர்தான் ஆகும்.
மோடி கைய வச்சா அது ராங்காதான் போகுமடா . . .