எடப்பாடிக்கு இத்தேர்தலில் அரசியல் செய்ய எதுவுமே கிடைக்கவில்லை போல. அதனால் "கலைஞரின் இறுதிக்காலத்தில் அவரை மு.க.ஸ்டாலின் கைதியாக அடைத்து வைத்திருந்தார், அவரது மரணம் சந்தேகத்திற்குரியது. தான் ஆட்சிக்கு வந்ததும் கலைஞர் மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைப்பேன்" என்றெல்லாம் பேசி வருகிறார்.
சிரிப்பும் எரிச்சலும் வருகிற குற்றச்சாட்டு இது.
இறுதியில் மருத்துவமனை செல்கிற வரை பொது வெளியில் இயங்கியவர் கலைஞர். மருத்துவமனையில் அவர் இருந்த சூழலில் பல தலைவர்களும் அவரை சென்று சந்தித்தனர்/பார்த்தனர். காவேரி மருத்துவமனையில் எந்த மர்மக் காட்சிகளும் நடைபெறவில்லை. அதனால் எடப்பாடியின் குற்றச்சாட்டு அபத்தமானது.
அதே நேரம்
ஏ1 ஜெயலலிதா எப்போது, என்று, எப்படி இறந்தார்?
அப்பல்லோ பிரதாப் ரெட்டி, ஏ2 சசிகலா என்ற இருவரைத் தவிர வேறு யாருக்காவது இந்த உண்மை தெரியுமா?
வித்யாசாகர் என்ற ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி பொறுப்பு கவர்னராக இருந்தாரே, அவர் கூட அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றாரே தவிர, ஜெ வை பார்க்கவில்லை.
ஏ1 ஜெயலலிதா மரண மர்மத்தையும் பின்பு ஏ1, ஏ2 ஆகியோர் அத்து மீறி, அதிகார துஷ்பிரயோகம் செய்து வாங்கிய கொட நாட்டு மர்ம மாளிகை தொடர் கொலைகள் தொடர்பாக இந்த ஐந்தாண்டுகளில் முறையாக விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்காததுதான் மு.க.ஸ்டாலின் செய்த மிகப் பெரிய தவறு.
அப்படி செய்திருந்தால் இன்று கலைஞர் மரணம் பற்றி பேசும் தைரியம் எடப்பாடிக்கு வந்திருக்குமா? அதைப்பற்றி பேச தனக்கு என்ன அருகதை இருக்கிறது என்று வெட்கப்பட்டிருக்க மாட்டாரா?
யார் கண்டது ! குற்றவாளியாக எடப்பாடியே கூட ஜெயிலில் இருந்திருக்கலாம்.
ஆகவே முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே அடுத்த ஆட்சிக்காலத்திலாவது
ஏ1 ஜெயலலிதா மர்ம மரணம்,
கொட நாட்டு மாளிகை தொடர் கொலைகள்
தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை சிறையில் தள்ளுங்கள்.











