Sunday, December 14, 2025

கேரளா - பின்னடைவும் முன்னேற்றமும்

 


கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அச்சத்தையும் கவலையையும் அதே நேரம் நம்பிக்கையையும் அளிக்கிறது.

திருவனந்தபுரம் மாநகராட்சியில் அதிக இடங்களை (பெரும்பான்மை இடங்களை அல்ல, ஆனாலும் பாஜக வாஷிங் மெஷினில் கொலைக்குற்றத்திலிருந்து விடுபட்ட காங்கிரஸ் கட்சியின் சசி தரூர் உதவியுடன் சில கவுன்சிலர்களை விலைக்கு வாங்கி விடுவார்கள்) பெற்றுள்ளது அச்சத்தை அளிக்கிறது ஈறை பேனாக்கி பேனை பெருமாளாக்கும் கேடு கெட்ட சூட்சுமத்தை அறிந்த சங்கிகள் ஒட்டு மொத்த கேரளத்திலிருந்தும் இடதுசாரிகளை வீழ்த்தி விட்டோம் என்று பிரச்சாரம் செய்வார்கள் என்பதுதான் அச்சம்.

இடது முன்னணிக்கு பின்னடைவா?

ஆம். பின்னடைவுதான். ஏற்கனவே பொறுப்பிலிருந்த பல இடங்களை இழந்துள்ளது என்பது நிச்சயமாக பின்னடைவுதானே!

மோடியும் காங்கிரஸும் சொல்வது போல இடது முன்னணி கேரளத்திலிருந்து முற்றிலுமாக துடைத்தெறியப்பட்டு விட்டது.

பொய், மிகப் பெரிய பொய்


மேலே உள்ள பட்டியலே உண்மையைச் சொல்லும்.  மாநகராட்சிகளில் பெரிய இழப்பு இருந்தாலும் கிராமப் பஞ்சாயத்துக்களிலும்  ஒன்றிய, மாவட்ட பஞ்சாயத்துக்களிலும்  கணிசமான எண்ணிக்கை கிடைத்துள்ளது.

திருவனந்தபுரத்தைத் தவிர மற்ற பகுதிகளில் பாஜக இழந்ததுதான் அதிகம். 

வழக்கறிஞர் தோழர் பிரதாபன் வாக்கு சதவிகிதம் பற்றிய புள்ளி விபரத்தை பகிர்ந்திருந்தார். அது கீழே


2024 ல் நாடாளுமன்ற தேர்தலின் போது,
காங்கிரஸ்:- 45.40%
இடதுசாரி:- 33.60%
தேஜகூ:- 19.40%
வாக்குகள் பெற்றன.

தற்போது உள்ளாட்சி தேர்தலில்
காங்கிரஸ்:- 42%
இடதுசாரி:- 40%
தேஜகூ:-9%. வாக்குகள் பெற்றுள்ளன.
2024 ஐ விட கூடுதலான வாக்கு சதவீதத்தை இடது ஜனநாயக முன்னணி பெற்றும் வெற்றி பெற இயலவில்லை.



இந்த புள்ளி விபரம் நம்பிக்கையையும் அளிக்கிறது. கவலையும் அளிக்கிறது.

திருச்சூரில் காங்கிரஸ் தன் வாக்குகளை சுரேஷ் கோபிக்கு மடை மாற்றிக் கொடுத்தமைக்கு பாஜக இப்போது நன்றிக் கடன் ஆற்றியுள்ளதோ என்றொரு சின்ன சந்தேகம் வருகிறது.

அதே நேரம் பின்னடைவு ஏற்பட்டாலும் தளம் அப்படியே இருப்பதால் இடது முன்னணி தன் பலவீனங்களை கண்டறிந்து அவற்றை களைந்திடும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

தோழர் பினராயி விஜயன் தலைமையிலான மாநில ஆட்சி எவ்வளவு சிறப்பான பணிகளை செய்திருந்தாலும் எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை கொண்டு வந்திருந்தாலும் உள்ளாட்சித் தேர்தலில் அந்த வார்டில் நிற்பவர் யார்? அந்த தெருவில் அவர் எப்படி நடந்து கொண்டார் என்பதெல்லாம்தான் முக்கியமான காரணிகள்.

பத்தாண்டு கால கேரள மக்களுக்கு செழிப்பான ஆட்சியில் சில களைகளும் முளைத்திருக்கும். அந்த களைகளை கறாராக அகற்றுவதற்கான நடவடிக்கைகளை இடது முன்னணி எடுத்திடும் என்று நம்புகிறேன்.

காலத்தே களைகளை அகற்றத் தயங்கினால் அது பெரும் புதராக மாறி பின்னடைவுகளை உருவாக்கிடும், மேற்கு வங்கத்தைப் போல.

கேரளா மேற்கு வங்கம் அல்ல என்பதை 2025 ல் நிரூபிக்கும் என்றே நம்புகிறேன்.

வாக்குகளின் சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பதால் அலட்சியம் வந்திடுமோ என்பது கவலையளிக்கிறது.

Saturday, December 13, 2025

மோடியும் நேருவின் கொள்ளு பேத்தியும்

 


உருப்படியாக எதையும் செய்ய இயலாத மோடி, நாடாளுமன்றத்தில் நடத்திய ஒரு வெட்டி விவாதம்தான் "வந்தே மாதரம்" 150 வது ஆண்டு.

அதையும் ஜவஹர்லால் நேருவை வசை பாடத்தான் பயன்படுத்திக் கொண்டார்.

அதற்கு பதிலளித்து நேருவின் கொள்ளுப் பேத்தி பிரியங்கா கொடுத்த பதிலடி சிறப்பாகவே இருந்தது. 

அந்த காணொளி கீழே


ஆமாம். நேரு பற்றி ஒரு விவாதம் வைத்துக் கொள்ளலாமா என்ற கேள்விக்கு மோடியும் அவர் அல்லக்கைகளும் பதில் சொல்லவே இல்லையே! 

ஏற்கனவே பட்ட அசிங்கம் போதும் என்ற அறிவு கூட மோடிக்கு கிடையாதா என்ன!

Thursday, December 11, 2025

தி.குன்றம் தீர்ப்பாளரின் வழக்கு கணக்கு

 திருப்பரங்குன்றம் தீர்ப்பாளர் அதி வேகமாக வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்ததாக பாஜக பொய்யன் நாராயணன் திருப்பதி பீற்றிக் கொண்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.கனகராஜ் அவர்களின் முகநூல் பதிவில் அட்டகாசமான விளக்கத்தை அளித்துள்ளார்.  நம்ம தீர்ப்பாளர் அளித்த தீர்ப்புக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கு மேல் என்றால் எந்த லட்சணத்தில் அவர் வேலை செய்துள்ளார் என்பதையும் இப்பதிவு அம்பலப்படுத்துகிறது.



கணக்கு வழக்கல்ல; இது வழக்கு கணக்கு சார் !
2017 முதல் 2025 வரை 9 வருடங்களில் 1,20,426 வழக்குகளை நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் அவர்கள் வழக்கை ஏற்று விசாரித்து தீர்ப்பையும் எழுதியதாக இன்று ஒரு செய்தி பகிரப்படுகிறது.
உண்மையிலேயே அப்படி நடந்திருந்தால் அது ஒரு அசாதாரணமான வேகம் . அதை பகிர்ந்துள்ள பாஜகவின் BJP Tamilnadu திரு நாராயணன் திருப்பதி Narayanan Thirupathy BJP அவர்கள் நீதிபதி சுவாமிநாதன் அவர்களை
"பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திராவிட மாடல் ஏன் துடிக்கிறது என்று இப்போது புரிகிறதா?"
என்று எழுதியிருக்கிறார்.
இதை உண்மை என்று கொண்டால் எந்த விதமான வார விடுமுறை, பண்டிகை விடுமுறை, மருத்துவ விடுப்பு, தேசிய விடுமுறை என எந்த விடுப்பும் எடுக்காமல் எல்லா நாட்களும் அதாவது வருடத்தில் 365 நாட்களும் பணி செய்ததாக கொண்டால் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் அதாவது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை (அதுவும் சாப்பாடு டீ அல்லது வேறு எந்த ஓய்வுக்கும் செல்லாமல்) பணி செய்து இருந்தால் நாளைக்கு எத்தனை வழக்குகளை சராசரியாக தீர்ப்பு சொல்லியிருக்க முடியும் என்று கணக்கு போடலாமா ?
இந்த வருடம் முடிய இன்னும் ஒரு 20 நாட்கள் இருக்கிறது .
அந்த நாளையும் சேர்த்து நாம் கணக்கிடலாம் .
மொத்த வழக்குகள் -1,20,426
மொத்த வருடங்கள் -9
ஆண்டுக்கு சராசரி வழக்குகள்-13,380.6
நாளைக்கு சராசரி வழக்கு-36.66
ஒரு மணி நேரத்திற்கு சராசரி வழக்கு -4.58
அதாவது ஒரு வழக்கிற்கு ஆன சராசரி நேரம்-13.1 நிமிடங்கள் .
அதாவது சராசரியாக ஒவ்வொரு வழக்கையும் ஏற்று விசாரித்து குறுக்கு விசாரணை செய்து அதன் பிறகு அதை பரிசீலித்து தீர்ப்பு எழுதுவதற்கு 13 நிமிடங்கள் ஒரு நொடிதான் சராசரியாக எடுத்திருக்கிறார்.
உண்மையில் மந்திரவாதிகளால் மட்டுமே சாத்தியமானதை நீதிபதி ஜிஆர் சாமிநாதன் அவர்கள் நிகழ்த்திக் காட்டி இருக்கிறார்.
நம்முடைய பாராட்டுக்களை அவருக்கு உரித்தாக்குவோம்.

மகிழ்ச்சியளித்த கூட்டம்

 


நேற்று முன் தினம் போளூர் கிளைச்சங்கத்தின் கூட்டத்தில் பங்கேற்றேன். பணி ஓய்வுக்குப் பிறகு சேலத்தில் தென் மண்டல மாநாடு, நெய்வேலி, வேலூரில் கோட்ட மகளிர் மாநாடு, சென்னையில் மாநில மகளிர் மாநாடு, இரண்டு தோழமைச்சங்கங்களின் கருத்தரங்குகளில் சிறப்புரை என்று சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் ஒரு கிளைச்சங்கத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டது முதல் முறை. பணி ஓய்வுக்குப் பிறகு கலந்து கொண்ட முதல் கூட்டம் மட்டுமல்ல, 1993 ல் கோட்டச்சங்கப் பொறுப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு கலந்து கொண்ட முதல்  கூட்டம், போளூர் கிளைச்சங்கத்தின் துவக்கக் கூட்டம்தான். அன்றைய பொதுச்செயலாளர் தோழர் ஆர்,ஜகதீசனோடு நானும் சென்றிருந்தேன்.

இப்போது எதற்கு போளூர் பயணம்? இந்த பதிவில் எதற்கு நேருவின் படம்?

இதோ கேள்விகளுக்கு பதில்.

இம்மாத இறுதியில் அகில இந்திய மாநாடு புவனேஸ்வரில் நடைபெறுகின்றது. அதற்கு முன்பாக அனைத்து கோட்டங்களும் தங்களுக்கு பொருத்தமான ஒரு நாளில் புது வணிக இயக்கம் நடத்திட வேண்டும் என்பது தென் மண்டல கூட்டமைப்பின் முடிவு.

சங்கம் எதற்கு புது வணிக இயக்கம் நடத்திட வேண்டும்?

எல்.ஐ.சி யின் மீது தொடர்ந்து பல தாக்குதல்கள் நடந்து வருகிறது. அதன் உடமையாளராக ஆவணங்களில் உள்ள ஒன்றிய அரசு ( எல்.ஐ.சி நிறுவனத்தின் நாற்பது கோடி பாலிசிதாரர்கள்தான் உண்மையான உடமையாளர்கள் ) , தனியார் நிறுவனங்கள், எல்.ஐ.சி க்கு கட்டுப்பாட்டு ஆணையமாகவும் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு வளர்ச்சி ஆணையமாகவும் உள்ள இன்சூரன்ஸ் வளர்ச்சி மற்றும் ஒழுங்காற்று 9IRDA) ஆணையம், கார்ப்பரேட் ஊடகங்கள் ஆகியோர்தான் அந்த தாக்குதல்களை நிகழ்த்தும் சுய நலப் பேர்வழிகள்.

அந்த தாக்குதலை சந்திக்க எல்.ஐ.சி நிறுவனத்தின் வளர்ச்சிதான் முக்கியமான ஆயுதம் என்பது சங்கத்தின் ஆயுதம். 

வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக, முகவர்கள் மத்தியில் வேகத்தை உருவாக்க சங்கம் வருடத்திற்கு ஒரு முறையாவது புது வணிக இயக்கம் நடத்துவது வழக்கம்.

எல்.ஐ.சி யை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றிய பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான 14.11.2025 அன்று புது வணிக இயக்கம் நடத்துவது பொருத்தமாக இருக்கும் என்று வேலூர் கோட்டச்சங்கம் முடிவெடுத்தது. மோடியால் இன்றளவும் தூற்றப்படும் ஒருவரை முன்னிறுத்துவதும் ஒரு முக்கியமான நடவடிக்கை அல்லவா!

அந்த இயக்கம் வெற்றிகரமாகவே நடந்தது. அன்று மட்டும் 2775 புதிய பாலிசிகள் கிடைக்கப் பெற்றன. கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, போளூர் கிளைகள் முதல் மூன்று இடங்களை பெற்றன.

இதிலே போளூர் பெற்ற மூன்றாவது இடம் சிறப்பானது. மற்ற கிளைகளை ஒப்பிடுகையில் போளூர் மிகவும் சிறிய கிளை. வணிகத்திற்கான வாய்ப்பு தொடங்கி முகவர் எண்ணிக்கை, ஊழியர் எண்ணிக்கை வரை போளூர் சிறிய கிளைதான். 2023 ல் நாங்கள் நடத்திய புது வணிக இயக்கத்தில் கடைசி இடத்தில் வந்தது போளூர்தான் எனும் போது இப்போது அவர்கள் பெற்ற மூன்றாம் இடத்தின் மகத்துவம் புரியும்.

இப்போதைய திரைப்படங்களில் எல்லாம் TRANSERMATION SCENE என்று வரும். பாட்சா வின் "உள்ளே போ" விஸ்வரூபம் முதல் சண்டை போன்றவை உதாரணம்.

போளூர் கிளையில் வெற்றி பெற்ற முகவர்களுக்கு பரிசளிக்கும் கூட்டம் உள்ளது, நீங்கள் அவசியம் பங்கேற்க வேண்டும் என்று போளூர் கிளைச்செயலாளர் தோழர் சங்கர் அழைத்த போது கடைசி இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய இந்த TRANSFERMATION க்காவே ஒப்புக் கொண்டேன். இது சொல்லி அடித்த வெற்றி வேறு.

இந்த கூட்டம் மிகவும் மகிழ்ச்சியளித்தது. அதற்கு பல காரணங்கள் உண்டு.

முகவர்களின் பங்கேற்பு மிகவும் அருமையாக இருந்தது.  இதற்கு முன்பாக வேறு பல கிளைகளிலும் சங்கம் ஏற்பாடு செய்த முகவர் கூட்டங்களில் பங்கேற்றுள்ளேன். போளூர் கூட்டம் அளவிற்கு வேறு எந்த கிளையிலும் முகவர்கள் பங்கேற்பு அவ்வளவு அதிக எண்ணிக்கையில் இல்லை.

நான்கு மூத்த முகவர்கள் பேசினார்கள். போளூர் கிளையின் ஊழியர்களின் சேவை மிகவும் சிறப்பாக உள்ளது. எங்களின் வணிகத்தின் வலிமையே அவர்கள்தான் என்று பாராட்டுகையில் மனதிற்குள் மழை பெய்தது. அந்த மூத்த முகவர்கள் தங்கள் வெற்றி ரகசியங்களை பகிர்ந்து கொண்டு நீங்களும் இவற்றை முயற்சி செய்யுங்கள் என்று சொன்னது நெகிழ்ச்சியூட்டியது. போட்டியாளராக கருதாமல் சக முகவராக கருதுகின்ற சிறந்த மனப்பான்மை அது.

கோட்டச்சங்கத் தலைவர் தோழர் பி.எஸ்.பாலாஜி, பொதுச்செயலாளர் தோழர் எஸ்.பழனிராஜ், இணைச்செயலாளர் தோழர் பி.கங்காதேவி ஆகிய மூவருமே அற்புதமாக பேசினார்கள். "ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்" ஃபீலிங்கில் இருந்தேன்.

போளூர் கிளை மேலாளர் தோழர் டி.கஜராஜும் (நீண்ட காலம் எங்கள் வாணியம்பாடி கிளையின் செயலாளராக இருந்தவர்) நன்றாக பேசினார். 


தோழர் பி.எஸ்.பாலாஜி


தோழர் எஸ்.பழனிராஜ்


தோழர் டி.கஜராஜ்


தோழர் பி.சங்கர்




அருமையானதொரு கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு அவர்கள் பெற்ற வெற்றியால் விளைந்தது. அந்த வெற்றிக்கு காரணமாக இருந்தவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். புது வணிக வெற்றிக்கும் கூட்டத்தின் வெற்றிக்கும் அடித்தளமாக இருந்து செயல்பட்ட போளூர் கிளைச்செயலாளர் தோழர் சங்கருக்கு பிரத்யேக வாழ்த்துக்கள். 

 




Wednesday, December 10, 2025

நீதிபதி இம்பீச்மெண்ட் - உமக்கென்ன பயம் சுமந்து?

 


திருப்பரங்குன்றம் தீர்ப்பாளரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று இந்தியா கூட்டணி அளித்த மனு சங்கி சுமந்தின் உறக்கத்தை கலைத்து விட்டது போல . . .

ட்விட்டரில் நேற்று ஒரே புலம்பல்.

காங்கிரஸ் கட்சி ஆதரிக்குதா?

ம்ம்ம்ம், அவங்களும் கையெழுத்து போட்டுட்டாங்க போல.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு இந்து விரோத முத்திரை வந்துடுச்சு, பிரயோசனமில்லாத இந்த நடவடிக்கையால் அது இன்னும் தீவிரமாகும்னு கூட புரியலையே.

நிச்சயமாக தோத்துப் போகும்னு தெரிஞ்சே இப்படி செய்யறாங்களே! நீதிபதியோட ஜாதி மேல வெறுப்பால செய்யறாங்க. மைனாரிட்டி மதத்தை சேர்ந்தவர் என்றாலோ ஆதிக்க ஜாதியைச் சேர்ந்தவர் என்றாலோ இப்படி செய்ய தைரியம் வருமா?





திருப்பரங்குன்றம் தீர்ப்பாளர் மீது நடவடிக்கை என்றால் சுமந்திற்கு ஏன் பதறுகிறது?

இதுவே தாமதம்.

சகோதரி செய்த விபத்தை தான் ஏற்றுக் கொண்டு சிறை சென்றது என்பது ஒரு மோசடி. அப்படி மோசடி செய்தவரை  வேதம் படித்தவர் என்பதற்காக நான் காப்பாற்றினேன் என்று சொன்ன போதே அவர் நீதிபதியாக இருக்கும் தகுதியை இழந்து விட்டார்.

இதிலே ஜாதியின் பெயரால் ஒளித்து வைக்க சுமந்து முயல்கிறார். அய்யா சுமந்து, தீர்ப்பாளரின் பல நடவடிக்கைகளுக்கு காரணமே அவருடைய ஜாதிய மேட்டிமை மனோபாவம்தான். அதையே அவருக்கு அனுதாபம் தேட நீர் முயற்சிப்பது அயோக்கியத்தனம்.

சரி உமக்கு ஏன் இவ்வளவு பதற்றம்?

திருப்பரங்குன்றம் தீர்ப்பாளர் போல நமது மனைவியின் செயல்பாடுகள் அமைந்தால் அவர் மீதும் பதவி நீக்க நடவடிக்கை வரும் என்பதால் உருவான பயமா சுமந்து?

Tuesday, December 9, 2025

மோடியே பதில் சொல் . .

 


நேற்று நாடாளுமன்ற மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் ஆற்றிய அற்புதமான, ஆவேசமான, அர்த்தம் மிக்க உரை.

அவசியம் கேளுங்கள். 

என்னைப் போல மீண்டும் மீண்டும் கேட்பீர்கள் . . .


வந்தே மாதரம் பாடலின் 150 ஆவது ஆண்டை கொண்டாடுவதில் உள்ள போலித்தனத்தை மட்டுமல்ல பதவி நீக்கம் செய்யப்பட வேண்டிய தீர்ப்பாளர் பற்றியும் பேசுவது ஆணித்தரமானது.

இந்த உரையில் தோழர் சு.வெ எழுப்புகிற மூன்று கேள்விகளுக்கு மோடியாலோ அல்லது சங்கிகளாலோ பதில் சொல்ல முடியுமா?

வந்தே மாதரம், ஜெய் ஹிந்த், இன்குலாப்  ஜிந்தாபாத் ஆகிய மூன்று முழக்கங்களின் பின்னணியில் லட்சக்கணக்கானவர்கள் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

எந்த முழக்கத்தின் கீழ் நீங்கள் விடுதலைக்காக திரண்டீர்கள்?

"ஈஸ்வர அல்லா தேரா நாம்" என்ற முழக்கத்தை ஒரு முறையாவது உங்கள் உதடுகள் உச்சரித்துள்ளதா?

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் சிவன், விஷ்ணு, துர்கா என்று பனிரெண்டு திரு உருவச் சிலைகளை வைத்துள்ளீர்கள். கிறிஸ்துவத்திலிருந்து ஒரு திரு உருவச்சிலையோ, திருக்குரானின் அடையாளத்தில் எதுவுமோ உங்களுக்குக் கிடைக்கவில்லையா?

பதில் சொல் மோடி. 

உம்மால் முடியாது, முடியாது, முடியாது.  

Monday, December 8, 2025

நீதிபதி பதவி நீக்கம் - சரியான முடிவு

 


திருப்பரங்குன்றம் தீபத்தூண் புகழ் நீதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை ( IMPEACHMENT MOTION) எடுக்கப் போவதாக "இந்தியா" கூட்டணி முடிவு செய்துள்ளது.

அரசியல் சாசனத்தின் விழுமியங்களைப் பற்றி கவலைப்படாமல், ஜன நாயகத்தை காலில் போட்டு மிதித்துக் கொண்டு  காவிக் கண்ணாடி அணிந்து கொண்டு தீர்ப்புக்கள் மூலம் கலவரத்துக்கு வித்திடுபவர் நிச்சயம் நீதிபதி பொறுப்பிற்கு தகுதியற்றவர்தான்.

அவரை பணி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தின் முன்மொழிவு கொண்டு வர்ய்வது மிகவும் நல்ல விஷயம்.

எண்ணிக்கை அடிப்படையில் அந்த தீர்மானம் வெற்றி பெறாது.

ஆனால்

உங்கள் நடவடிக்கைகள் கண்டனத்துக்குரியது, ஏற்றுக் கொள்ள முடியாதது, நீதிபதி பதவிக்கு பொருத்தமற்றது என்று இந்திய ஜனநாயகத்தின் அடையாளமான நாடாளுமன்றத்தில் பதிவாவது மிகவும் முக்கியமானது. 

சரியான முடிவை எடுத்த அனைத்து தலைவர்களுக்கும் வணக்கமும் வாழ்த்துக்களும் . . .