Sunday, April 5, 2026

உங்களின் தவறுதான் ஸ்டாலின்

 


எடப்பாடிக்கு இத்தேர்தலில் அரசியல் செய்ய எதுவுமே கிடைக்கவில்லை போல. அதனால் "கலைஞரின் இறுதிக்காலத்தில் அவரை மு.க.ஸ்டாலின் கைதியாக அடைத்து வைத்திருந்தார், அவரது மரணம் சந்தேகத்திற்குரியது. தான் ஆட்சிக்கு வந்ததும் கலைஞர் மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைப்பேன்"  என்றெல்லாம் பேசி வருகிறார்.

சிரிப்பும் எரிச்சலும் வருகிற குற்றச்சாட்டு இது.

இறுதியில் மருத்துவமனை செல்கிற வரை பொது வெளியில் இயங்கியவர் கலைஞர். மருத்துவமனையில் அவர் இருந்த சூழலில் பல தலைவர்களும் அவரை சென்று சந்தித்தனர்/பார்த்தனர். காவேரி மருத்துவமனையில் எந்த மர்மக் காட்சிகளும் நடைபெறவில்லை. அதனால் எடப்பாடியின் குற்றச்சாட்டு அபத்தமானது.

அதே நேரம்

ஏ1 ஜெயலலிதா எப்போது, என்று, எப்படி இறந்தார்?

அப்பல்லோ பிரதாப் ரெட்டி, ஏ2 சசிகலா என்ற இருவரைத் தவிர வேறு யாருக்காவது இந்த உண்மை தெரியுமா?

வித்யாசாகர் என்ற ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி பொறுப்பு கவர்னராக இருந்தாரே, அவர் கூட அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றாரே தவிர, ஜெ வை பார்க்கவில்லை.

ஏ1 ஜெயலலிதா மரண மர்மத்தையும் பின்பு ஏ1, ஏ2 ஆகியோர் அத்து மீறி, அதிகார துஷ்பிரயோகம் செய்து வாங்கிய கொட நாட்டு மர்ம மாளிகை தொடர் கொலைகள் தொடர்பாக இந்த ஐந்தாண்டுகளில் முறையாக விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்காததுதான் மு.க.ஸ்டாலின் செய்த மிகப் பெரிய தவறு.

அப்படி செய்திருந்தால் இன்று கலைஞர் மரணம் பற்றி பேசும் தைரியம் எடப்பாடிக்கு வந்திருக்குமா? அதைப்பற்றி பேச தனக்கு என்ன அருகதை இருக்கிறது என்று வெட்கப்பட்டிருக்க மாட்டாரா? 

யார் கண்டது ! குற்றவாளியாக எடப்பாடியே கூட ஜெயிலில் இருந்திருக்கலாம்.

ஆகவே முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே அடுத்த ஆட்சிக்காலத்திலாவது

ஏ1 ஜெயலலிதா மர்ம மரணம்,

கொட நாட்டு மாளிகை தொடர் கொலைகள்

தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை சிறையில் தள்ளுங்கள். 

Saturday, April 4, 2026

புளிச்சமாவு ஆஜானும் வசூல் ராஜா வார்ட் பாயும்

 


என்னத்தான் தேர்தல் நேர பரபரப்பாக இருந்தாலும் புளிச்ச மாவு ஆஜானை கலாய்க்கும் வாய்ப்பு கிடைக்கும் போது இழக்க முடியுமா?

கீழே உள்ள செய்தி புதிதல்ல. ஆஜான் அவ்வப்போது சொல்லிக் கொண்டிருப்பதுதான்.


இதனை படிக்கும் போது எனக்கு நினைவுக்கு வந்த வசூல் ராஜா படக் காட்சியைத்தான் மேலே உள்ள படத்தில் பகிர்ந்துள்ளேன்.

ஜெயமோகனை தன்னை சிறந்த படைப்பாளி என்று வேண்டுமானால் கதையளிக்க முடியுமே தவிர, சிறந்த மனிதன் என்று சொல்லிக்கொள்ள முடியுமா? வன்மமும் வக்கிரமும் நிறைந்த அவரால் அது இயலாது என்பது அவருக்கே தெரியும். 

பிகு: இன்னும் கொஞ்ச நாளைக்கு சமூக வலைத்தளங்களில் ஆஜான் புகழ் சத்தமாகவே ஒலிக்கும்.

ஆமாம். முப்பதிற்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியவாதிகளை அமெரிக்காவிற்கு கூட்டிப் போயுள்ளார். அதற்கான நன்றியை எதிரொலிக்க வேண்டுமல்லவா!

Friday, April 3, 2026

நீங்களே விஷத்தை குடியுங்கள் சீமான்

 


தேர்தல் காலத்தில் பல விதமான வசனங்கள் பேசப்படும். அதில் சீமானின் லேட்டஸ்ட் வஜனம் கீழே. 


ஐய்யா சீமான், 

ஐம்பது நாட்களுக்குள் நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லையென்றால் உயிரோடு கொளுத்துங்கள் என்ற வஜனத்தை கேட்டவர்கள் நாங்கள்.

அப்படியெல்லாம் உங்கள் மிரட்டலுக்கு பயந்தெல்லாம் உங்களுக்கு ஓட்டு போட முடியாது. அதற்காக உங்களுக்கு விஷம் வைக்கும் வேலையெல்லாம்  எங்களுடையது கிடையாது. நீங்களே விஷத்தை சாப்பிட்டு விடுங்கள்.  

உங்களுக்கு ஓட்டு போட்டு தமிழ்நாட்டுக்கு கொடுமை  செய்வதை விட நீங்கள் விடும் சாபத்தை அனுபவிப்பது மேல் 


சகவாச தோஷமா செங்கோட்டையன்?????

 


ஏ1 காலத்து முன்னாள் மந்திரியும் தற்போதைய தற்குறி தவெக கூட்டத்தில் உள்ளவருமான செங்கோட்டையனின் மீது பெரிய அபிப்ராயம் எதுவும் எப்போதும் இருந்தது கிடையாது. வாச்சாத்தி பிரச்சினையை கையிலெடுத்து போராடியதற்காக எங்கள் தோழர், மாநிலச் செயலாளர் தோழர் பெ.சண்முகம் அவர்களை கொலை செய்ய திட்டமிட்டவர் அல்லவா அவர்! 

(பார்க்க : விஜய்-செங்கோட்டையன் கொலைகாரக் கூட்டாளிகள்

புஸ்ஸி ஆனந்த் சில மாதங்கள் முன்பாக அபத்தமாக உளறிய ஒன்றை இவரும் உளறியுள்ளார். 

அது என்ன?


நீண்ட காலம் எம்.எல்.ஏ ஆக, அமைச்சராக இருந்ததால் கொஞ்சமாவது விஷயம் தெரிந்தவராக இருந்திருப்பார் என்று நினைத்திருந்தேன். 

ஆனால் ?????

புஸ்ஸி ஆனந்த் உளறிய போது எழுதிய பதிவை மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

ஜெயலலிதா ஆகப் போகிறாரா விஜய்?

ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதன் காரணமாக வேட்பு மனு நிராகரிக்கப் பட்டது என்று பதிவாகக்கூடாது என்பதற்காக நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தவர் ஏ1.

ஏ1 4 இடங்களில் வேட்பு மனு தாக்கல் செய்தாரே தவிர, போட்டியிடவில்லை. போட்டியிடும் வாய்ப்பு நிராகரிக்கப்பட்டது என்பதுதான் உண்மை.

முழுப்பூசணியை சோற்றில் மறைப்பது போல செங்கோட்டையன் பேசியதன் காரணம் என்ன?


ஆரம்பத்திலிருந்தே இப்படித்தானா அவர்?

அல்லது

தவெக தற்குறிகளின் சகவாசத்தால் இப்படி ஆகி விட்டாரா?



Thursday, April 2, 2026

ராயபுரம் ஜெயகுமார் இப்போது தோற்கப் போவதற்கும் ?????

 


கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின்பு தன் தோல்விக்கு காரணம் யார் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் டி.ஜெயகுமார் விளக்கமாக சொல்லும் காணொளி இங்கே உள்ளது.

பாவம் ஜெயகுமார்!

2026 தேர்தலிலும் ஜெயகுமார் அதே வேஸ்ட் லக்கேஜ் பிஜேபியால்தான் தோற்கப் போகிறார். 

அவ்விரு கட்சிகளிலும் என்ன நடக்கிறது?

 


இன்னும் நான்கு  நாட்களில் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிந்து விடும்.

இரண்டு தேசிய கட்சிகளும் இன்னும் தங்கள் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

காங்கிரஸ் கட்சி அடம் பிடித்து அரசியல் செய்து அடுத்தவர்கள் பங்கையும் பெற்று 28 தொகுதிகளை பெற்றனர். கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆன பின்னும் அவர்களால் வேட்பாளர்களை இறுதிப்படுத்த முடியவில்லை. அவர்கள் எப்போது முடிவு செய்து எப்போது அறிவித்து எப்போது உட்கட்சி குழப்பங்களை சரி செய்து எப்போது பிரச்சாரத்திற்கு செல்வார்கள்/

பாஜகவும் அதன் குழப்பங்களிலிருந்து வெளியே வர முடியவில்லை. அது பற்றி நமக்கு கவலையில்லை. நாசமாகப் போகட்டும். அதுதான் தமிழ்நாட்டுக்கு நல்லது.

ஆனால் காங்கிரஸ்  பின்னடைவு பெற்றால் அதன் தாக்கம் கூட்டணியை பாதிக்கும்.

ஒரு மாதமாகியும் வேட்பாளர்களை முடிவு செய்ய முடியவில்லையென்றால் அந்த கட்சிக்கு எதற்கு தேர்தல்? 28 தொகுதிகள்? அதிகாரத்தில் பங்கு? 

Wednesday, April 1, 2026

தவெக தற்குறிகளும் காக்கா பிரியாணியும்

 


தங்களை தற்குறிகள் என்று அழைத்தால் தவெகவினர் வருத்தப்படுகிறார்களாம்.  

கீழேயுள்ள பதிவுகளை பாருங்களேன்


ஒரு வாக்காளரால் இரண்டு தொகுதிகளில் வாக்களிக்க முடியாது என்றும் அப்படி வாக்களித்தால் அது கள்ள ஓட்டாக மட்டுமே இருக்க முடியும் என்பது கூட தெரியாமல், திருவல்லிக்கேனி-சேப்பாக்கம் என்பது ஒரே தொகுதி என்ற விஷயமும் கூட தெரியாமல் பதிவெழுதுகிற ஒரு ஆளை தற்குறி என்று அழைக்காமல் வேறெப்படி அழைக்க முடியும்! 

சரி கவுண்டம்பாளையம் விஜயகுமாருக்கு வாக்கு எங்கே இருக்கிறது? கவுண்டம்பாளையத்திலா? பெரம்பூரிலா அல்லது திருச்சியிலா?

அப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் இருந்தால் மோடி,அமித்ஷா வகையறாக்கள் நடத்திய SIR கூட வெறும் ஜும்லாதானா?