Wednesday, April 16, 2025

எரிக்கப்பட்ட “ராமையாவின் குடிசை” மீண்டும்.


 



 மதுரையில் நிறைவுற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் பங்கேற்ற அனுபவம் குறித்து     என்ற பதிவில் ஏற்கனவே எழுதியிருந்தேன்.

 அந்த பதிவில் குறிப்பிட்டபடி  ஒரு முக்கியமான அம்சத்தை இப்பதிவில் எழுதுகிறேன்.

 கீழத்தஞ்சை மாவட்டம், வெண்மணியில் முதியவர்களும், பெண்களும் குழந்தைகளுமாக 44 பேர், கோபாலகிருஷ்ண நாயுடு என்ற வெறி பிடித்த மிருகத்தின் தலைமையில் குழுமியிருந்த பண்ணையார்கள் மற்றும் அவர்களின் அடியாட்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க ராமையா என்பவரின் குடிசைக்குள் அடைக்கலம் புகுகின்றனர்.

 அந்த கொலைகாரக்கூட்டம் அந்த குடிசையை தீ வைத்து கொளுத்துகிறது. உள்ளே இருந்த அனைவரும் கருகி இறக்கிறார்கள். தன் குழந்தையாவது பிழைக்கட்டும் என்று ஒரு தாய் அக்குழந்தையை வெளியே வீச, அக்குழந்தையை வெட்டி மீண்டும் தீக்குள் போட்டார்கள் தீயவர்கள். குஜராத் கலவரத்தின் போது வயிற்றுக்குள் இருந்த  சிசுவை வெளியே எடுத்து தீயில் போட்ட கொடூரத்திற்கு இவர்கள்தான் முன்னோடிகள்.

 எரிக்கப்பட்ட ராமையாவின் குடிசையை மதுரை மாநாட்டு கண்காட்சியில் வடிவமைத்து நம் உள்ளத்தை பதற வைத்திருந்தார்கள். எரிந்து போன குடிசை, கருகிக் கிடக்கும் உடல்கள், அடங்காத புகை என்று அன்றைய துயரத்தை  உணரக்கூடிய விதத்தில் அமைத்திருந்தார்கள்.



 அந்த தியாகிகளின் நினைவைப் போற்றுகிற வகையில்தான் தியாகிகள் ஸ்தூபியும் அமைந்திருந்தது.



 இந்த இரண்டு கலைப்படைப்புக்களை மட்டுமல்ல

 பிரதிநிதிகள் மாநாட்டு மேடையில் கம்பீரமாக இருந்த காரல் மார்க்ஸையும் உருவாக்கிய படைப்பாளி சிற்பி தோழர் கா.பிரபாகரன்.





 தோழருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். மேலும் மேலும் பல சிறந்த படைப்புக்களை அவர் உருவாக்குவார்.

 2022 ல் நாங்கள் வேலூரில் தென் மண்டல மாநாடு நடத்திய போது தியாகிகள் சின்னத்தை வடிவமைத்துக் கொடுத்தவர் அவர்தான். இப்போது அந்த தியாகிகள் சின்னம் வெண்மணி புதிய நினைவகத்தில் கம்பீரமாக உள்ளது. (முதலில் உள்ள புகைப்படத்தில் அச்சின்னத்தோடு இந்த ஆண்டு வெண்மணிக்கு சென்ற வேலூர் கோட்டத் தோழர்கள் உள்ளோம்)

 நமக்கு பழக்கமானவர் செய்த படைப்பு என்று வருகிற போது மனதுக்குள் அது ஒரு தனி மகிழ்ச்சிதான்.

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. பிரபாகரன் காApril 17, 2025 at 8:30 AM

    மிக்க நன்றி தோழர் 🥰 மகிழ்ச்சி 😍

    ReplyDelete