உழைப்பாளி மக்களுக்கு அதிகாரத்தை
வென்றெடுத்துக் கொடுத்தவர்,
மன்னராட்சிக்கு முடிவு கட்டி
மார்க்சிய வழியில் அரசை உருவாக்கியவர்.
எல்லாரும் எல்லாமும் பெறலாம்
என்பது சாத்தியமானது.
வறுமை ஒழிந்தது,
நோய்மையும் ஓய்ந்தது.
மண் வளம் பெருகியது,
மனித வளமும் கூட . . .
கலையும் அறிவியலும்
வானளவு உயர்ந்தது,
விண்வெளியும் வசமானது.
அடிமைச்சங்கிலியைத் தவிர
இழப்பதற்கு ஏதுமில்லை,
வெல்வதற்கோ பொன்னுலகமே
உள்ளதென்பது உண்மையென்பதை
செயலில் காட்டி
புதியதொரு உலகைப் படைத்தவர்.
பிற நாடுகளின்
விடுதலை வேள்விக்கு
வேகம் கொடுத்தவர்.
உலகின் உண்மையான
முதல் புரட்சித் தலைவருக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment