Thursday, April 24, 2025

கல்லறை கட்டப்படும் முன்பே பிரச்சாரமா மோடி?

 


காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் இறந்து போனவர்களின் இறுதிச் சடங்கு இன்றுதான் நடந்திருக்கும். 

எந்த குடும்பங்களில் கல்லறையோ நினைவுச் சின்னமோ அமைக்கும் வழக்கம் இருந்தால் அவர்கள் அதைப் பற்றி  இன்னும் நினைத்திருக்கக் கூட மாட்டார்கள்.

காலையில் எழுதிய பதிவின் படி "பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதன் பலனை பாஜக அறுவடை செய்யும்" என்பதை மோடி நிஜமாக்கி விட்டார்.

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரக்கூட்டத்தை துவங்கி விட்டார். அதிலே அவரது வழக்கமான வாய்ச்சவடாலும் உண்டு.


ஒரு மிகப் பெரிய துயரம் நடந்துள்ளது. இந்த சூழலிலும் இவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றார் என்றால் இவரையெல்லாம் எப்படி மனிதன் என்று சொல்வது! 

அதே போலத்தான் நேற்று விருந்து வைத்த எடப்பாடியையும்!

என்ன ஜென்மங்கள் இதெல்லாம்! 

2 comments:

  1. பீகார் தேர்தல் பிரச்சார கூட்டம் என்று அடிச்சு விடாதீங்க.

    ReplyDelete
    Replies
    1. யாருப்பா நீ? அடிச்சு விடாதீங்க, அடிச்சு விடாதீங்கன்னு எனக்கு கண்டெண்ட் கொடுத்துக்கிட்டே இருக்க!

      Delete