சில நாட்கள் முன்பாகத்தான் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தை பாராட்டியிருந்தேன். திரைக்கலைஞர் கௌரி கிஷனிடம் அநாகரீகமான நடந்து கொண்ட யூட்யூபரை கண்டித்தமைக்காக அந்த பாராட்டு. அந்த யூட்யூபரின் பெயரை குறிப்பிடாமல் இருந்தது தவறு என்றும் குறிப்பிட்டிருந்தேன்.
பத்திரிக்கையாளர் மன்றத்தின் நேற்றைய நடவடிக்கை கண்டிக்கத் தக்கது. கரூர் நெரிசல் மரணங்கள் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் வந்த போது பு.த பத்திரிக்கையாளர் சுப்பையாவிற்கும் யூட்யூபர் கரிகாலனுக்கும் இடையில் நடந்த சர்ச்சை வைரலானது.
அதிலே ஆணவத்துடன் நடந்து கொண்டது புதிய தலைமுறை சுப்பையாதான் என்பதை காணொளி பார்த்த அனைவருக்கும் தெரியும். கரிகாலன் ஆற்றியது எதிர்வினைதான். நான் சென்னை ப்ரஸ் க்ளப் மெம்பர், நீங்கள் மெம்பரா என்று கேட்டது எத்தனை பேருடைய உறக்கத்தை கெடுத்தது என்று தெரியவில்லை.
அந்த சர்ச்சை பாஜக- தவெக விற்கு இடையிலான ரகசிய கூட்டை அம்பலப்படுத்தியது. அதனுடைய விளைவோ என்னமோ இப்போது கரிகாலனை பத்திரிக்கையாளர் மன்றத்திலிருந்து நீக்கியுள்ளார்கள்.
இப்போதைய பொறுப்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்ற போது முற்போக்காளர்கள் நிறைந்த அவை அது என்று நம்பினேன்.
ஆனால் இப்போதுதான் தெரிகிறது.
புதிய தலைமுறையின் கட்டுப்பாட்டில் உள்ள பாஜக மன்றம் என்று . . .


No comments:
Post a Comment