தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முன்னாள் பொதுச்செயலாளரும் தற்போதைய துணைத்தலைவருமான தோழர் கே.சாமுவேல்ராஜ் அவர்களின் முகநூல் பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன்.
நீதித்துறை மீது அவ்வப்போது நம்பிக்கை இது போன்ற தீர்ப்புக்கள் அளிக்கிறது.
சாதி வெறியன் தண்டபாணிக்கு
மற்றும் 10 ஆண்டுகள் தண்டனை!
அனுசுயா என்கிற தலித் பெண்ணை
தான் பெற்ற மகன் சுபாசையும்,
தன்னை பெற்ற தாய் கண்ணம்மாவையும்
படுகொலை செய்து
அனுசுயாவையும் கொடுங்காயப்படுத்திய
சாதி வெறியன் தண்டபாணிக்கு
இரட்டை ஆயுள் மற்றும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை!
அனுசுயாவிற்கு மாவட்ட நிர்வாகம் இரண்டரை லட்சம் ரூயாய் வழங்கிட
கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை
அமர்வு நீதிமன்றம் 10 நிமிடங்களுக்கு முன்பு உத்தரவு!
கொலை பாதகன் வெறி கொண்டு வீசிய ஒவ்வொரு அரிவாள் வீச்சையும்
தனது கைகளால் தாங்கி
விரல்கள் அனைத்தும் சேதாரமாகி
முகத்திலும் தலையிலும்
கொடுங்காயங்களைத் தாங்கி
உடலில்,மனதில் தீராத வடுக்களுடன்
மகள் அனுசுயா மன உறுதியால் நம்முன் கம்பீரமாக நிர்கிறார்.
உடலில் 10 அறுவை சிகிச்சைகள்
சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் அனுசுயாவிற்கு மருத்துவத்தோடு அன்பையும் கலந்து கொடுத்தனர்.அவர்கள்
போற்றதலுக்குறியவர்கள்.
நிறைய அமைப்புகள் ஆதரவு தெரிவித்தார்கள்.உளப்பூர்வமாக ஆறுதலை பகிர்ந்தார்கள்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆறுதலுடன் நிதியும் அனுசுயாவிற்கு வழங்கியது நினைவு கொள்ளத்தக்கது.
இந்த படுபாதகம் நிகழ்ந்தப்பட்ட நாளில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளது.வழக்கின் ஒவ்வொரு திருப்பத்திலும் உடன் பயணம் செய்தோம்.
போராட்டங்கள்,பயணங்கள்,வழக்கறிஞர் சந்திப்புகள்,விவாதங்கள் நம் கண் முன்னால் வானமாக விரிகிறது.
மருத்துவர்கள்,மருத்துவ மனையில் உதவிய சேலம் தோழர்கள்,கல்விக்கு உதவிய இன்சூரன்ஸ் சங்கத்தின் தோழர்கள்,ஒவ்வொரு வாய்தாவிலும் அணிவகுத்து வருகை தந்து வழி செலவுகளையும்,வயிற்றுக்கு உணவும் வழங்கிய கிருஷ்ணகிரி மாவட்டத் தோழர்கள்,மாநில மையத் தோழர்கள் எல்லோருக்கும் இயதபூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
சி.பி.எம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மேற்கொண்டு வரும் ஆற்றல் மிகுந்த எங்களது பயணம் தொடரும்...
பிகு: இந்தப் பெண்ணின் கல்விக்கு உதவ ஒரு வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அது பற்றி தனியாக எழுதுகிறேன்.



No comments:
Post a Comment