Monday, February 16, 2026

டுபாக்கூர் சமூக ஆர்வலர்கள் தொல்லை ஓவராயிடுச்சு

 


நேற்றிலிருந்து பாஜக=அதிமுக கூட்டணியினர் ரொம்ப பெருமையோடு பகிர்ந்து கொண்டிருக்கும் செய்தி கீழே . . .


இந்த மனிதனை ஒரு டுபாக்கூர் என்றுதான் சொல்ல வேண்டும்.

இது மகளிர்  உரிமைத் தொகை.

யாருடைய பணத்தை இவர் திருப்பி அனுப்பினார்?

தாய்?

மனைவி?

சகோதரி?

மகள்?

மற்றவர்களுக்கு உரிமையான தொகையை திருப்பி அனுப்ப இவருக்கு ஏது உரிமை?

அடுத்தவர் பணத்தை எடுத்து தனக்கு பெயர் வாங்கிக் கொள்ள நினைத்த இந்த மனிதர் ஒரு முக்கியமான உண்மையை மறந்து விட்டார்.

விண்ணப்பம் கொடுக்காமல் மகளிர் உரிமைத் தொகை வராது. ஆக இவர் குடும்பத்தில் யாரோ கொடுத்த விண்ணப்பத்தினால்தான் பணமே வந்தது என்பது கூட தெரியாத இவரை டுபாக்கூர் என்றழைக்காமல் வேறு எப்படி அழைப்பது?

மேலும் இத்தனை நாள் வந்த பணம் என்ன ஆனது?


No comments:

Post a Comment