Tuesday, July 8, 2025

உங்களுக்கா இப்படி யுவர் ஆனர்?

 


கீழேயுள்ள செய்தியை படிக்கும் போது சந்திரசூட் மீது பரிதாபமே வந்தது.


அயோத்தி தீர்ப்பளித்தவர்கள் ஐவர். 

அதில் ஒருவர் ஆளுனர், ஒருவர் எம்.பி. இன்னும் இருவருக்கும் கம்பெனி சட்ட வாரியம் போன்ற பதவிகள்.

ஆனால் தீர்ப்பை எழுதியவரை வீட்டை காலி செய்யச் சொல்கிறார்கள். அதிலும் என்ன எழுதுவது என்று தெரியாமல் கடவுளின் முன் அமர்ந்தேன். அவர் சொன்னபடி எழுதினேன் என்று வேறு சொன்னார்.

அப்பேற்பட்டவரையே வீட்டை காலி செய்ய சொல்லி விட்டார்கள்.

இவர் வீட்டுக்கு பிள்ளையார் சதுர்த்தி பூஜை சீன் போட மோடி வந்த போது அவர் வசிக்கும் ப்ங்களா நிரந்தரமாக அவருக்கே என்று சட்டம் போட சொல்லியிருக்கலாம். அப்படியே வழக்கு போடப்பட்டிருந்தாலும் அயோத்தி தீர்ப்பு போல "நம்பிக்கை" என்று சொல்லி தப்பித்திருக்கலாம் .

பாவம் ஐடியா இல்லாத ஆளுங்க!

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete