மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி  இன்று வீரமாக  முழங்கியுள்ளார். 
அண்ணா ஹசாரேவும்  பாபா ராம்தேவும்  மத்தியரசுக்கு கட்டளையிடுகின்றார்கள், இதனை  எப்படி  ஏற்பது என்று கேட்டுள்ளார். 
மிஸ்டர் பிரணாப் முகர்ஜி  இவர்கள்  மட்டுமா உங்களை மிரட்டுகின்றார்கள்! 
 இவர்கள்  மட்டுமா உங்களுக்கு  கட்டளையிடுகின்றார்கள்? 
அணு சக்தி ஒப்பந்தத்தை  நிறைவேற்று  என்று  அமெரிக்கா  உங்களுக்கு
கட்டளையிடவில்லை? 
வங்கி, பென்ஷன், இன்சூரன்ஸ் துறைகளை  மேலும்  திறந்து விடு  என 
பன்னாட்டு நிதி நிறுவனங்கள் உங்களுக்கு கட்டளையிடவில்லை? 
பெட்ரோலியப்  பொருட்கள்  விலை நிர்ணயத்தில் தலையிடாதே என
எஸ்ஸார், ரிலையன்ஸ் நிறுவனங்கள்  உங்களுக்கு கட்டளையிடவில்லை? 
சில்லறை வணிகத்தில்  என்னை அனுமதி என வால்மார்ட் போன்ற 
பன்னாட்டு பகாசுர கம்பெனிகள் கட்டளையிடவில்லையா?
நான் சொல்வதை கேட்டால் கூட்டணி, இல்லையென்றால் நடையை கட்டு  என மம்தா கட்டளையிடவில்லையா? 
இத்தனைக்குப் பிறகும் நான் வீரன், சூரன் என்றால் நம்ப நாங்கள் 
கேணையர்களா?
இதையெல்லாம் மறைக்கிறீர்களா? அல்லது உங்களுக்கு மறதி  எனும்
வியாதியா? மருத்துவரிடம் செல்லுங்கள் பிரணாப் !    
 
 
நல்ல பதிவு.
ReplyDelete