ஆரெஸெஸ் ரெவி ஆட்டுத்தாடியாக இருந்த போது சட்டப்பேரவையில் முதலில் தேசிய கீதம் ஒலிக்கப்பட வேண்டும், பிறகுதான் தமிழ்த்தாய் வாழ்த்து என்று அடம் பிடிக்க, நிகழ்வின் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, நிறைவில்தான் தேசிய கீதம் என்ற தமிழ்நாட்டின் மரபைத்தான் பின்பற்றுவோம் என திமுக அரசு உறுதியாக நிற்க, அது கடுமையான சர்ச்சையாக மாறியது.
இன்று புதிய முதல்வர் பதவியேற்பில்
முதலில் வந்தே மாதரம்,
இரண்டாவதாக தேசிய கீதம்
கடைசியாக தமிழ்த்தாய் வாழ்த்து.
மேற்கு வங்க தேர்தலுக்காக வங்க மக்களை உசுப்பேற்ற மோடி கையில் எடுத்ததுதான் வந்தே மாதரம்.
அந்த அரசியலை அப்போதே மக்களவையில் தோழர் சு.வெங்கடேசன் பேசினார். அந்த அற்புதமான உரையை
எந்த மேற்கு வங்க மக்களை ஏமாற்ற வந்தே மாதரப் பாடலை தூசி தட்டி எடுத்தார்களோ, அதே மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம் பாடப்படவில்லை. இத்தனைக்கும் அங்கே ரெவிதான் ஆளுனர்.
ஆனால் தமிழ்நாட்டிலோ நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே வந்தே மாதரமும் தேசிய கீதமும் பாடப்படுகிறது.
ஆரெஸெஸ் ரெவி தமிழ்நாட்டைப் பார்த்து நக்கலாக சிரிக்கும் சத்தம் உங்களுக்கும் கேட்கிறதா?
பாஜகவின் அஜெண்டா, பாஜக ஆதரவு தெரிவிக்காத அரசால் அமலாக்கப் படுகிறது. இது தொடக்கம்தான். இன்னும் தொடரும் மோசமாக.

No comments:
Post a Comment