Wednesday, May 14, 2025

மாதர் சங்கத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

 இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய பின்பே பதிவுகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். அது எப்போது சாத்தியமாகும் என்பது தெரியாததால் ஒரு பாராட்டை பதிவு செய்யவே இந்த இடைக்கால பதிவு.


பொள்ளாச்சி பாலியல் அராஜக வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும் "சாகும் வரை ஆயுள் தண்டனை" வழங்கப் பட்டுள்ளது. 

தங்களின் உறுதியான போராட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு துணை நின்று   இத்தீர்ப்பினை  சாத்தியமாக்கிய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்திற்கும்  அதன் பொறுப்பாளர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்களை உரித்தாக்குகிறேன்.

போராட்டங்களுக்காக அவர்கள் மீதும் மாணவர், வாலிபர் சங்கத் தோழர்க மீதும்  பதியப்பட்ட வழக்குகளை  அரசு திரும்பப் பெற வேண்டும். 

No comments:

Post a Comment