Wednesday, April 23, 2025

காஷ்மீர் படுகொலை – கோட்டை விட்டார்களா வேடிக்கை பார்த்தார்களா?

 



 

காஷ்மீர் படுகொலை தொடர்பாக சில சந்தேகங்கள் இருப்பதாக நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

 

இப்படுகொலை என்பது மத்திய அரசினுடைய படு தோல்வி. 

 

பஹல்காம் பகுதி என்பது அதி பாதுகாப்பு பகுதி. இங்கே இது போன்றதொரு தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது என்பது உளவுத்துறைக்கு தெரியாதா? அப்படி உளவுத்துறைக்கும் தெரிந்தும் அவர்கள் மத்தியரசுக்கு சொல்லவில்லையா அல்லது கிடைத்த தகவலை மத்தியரசு அலட்சியப் படுத்தியதா?

 

HIGH SECURITY ZONE என்று வரையறை செய்யப்பட்ட பகுதியில் ஏன் ஒரு ராணுவ வீரன் கூட இல்லை?  சங்கி சுமந்து கூட நான் அக்டோபர் மாதத்தில் அங்கே போன போது ஏராளமான ராணுவ வீரர்கள் இருந்தார்கள் என்று சொல்லியுள்ளார். அக்டோபரை விட இப்போதுதான் சுற்றுலா சீஸன். இப்போது இன்னும் அதிகமான பாதுகாப்பு  இருந்திருக்க வேண்டும். ஆனால் இல்லை. இது தற்செயலானதா? திட்டமிட்டதா?

 

புல்வாமாவில் தாக்குதலுக்கு வாய்ப்புள்ளது என்று உளவுத்துறை அறிக்கை கொடுத்தும்  தேர்தல் ஆதாயத்திற்காக அத்தகவலை அலட்சியம் செய்து 56 ரிசர்வ் போலீஸ் படையினரை சாக விட்டதுதான் மோடியின் பாரம்பரியம். பீகார் மாநிலத் தேர்தல் நெருங்கி வரும் நேரமென்பதால் தாக்குதல் நடக்கட்டும் என்று வேடிக்கை பார்த்ததா இந்த அரசு?

 

அமெரிக்க துணை ஜனாதிபதி இந்தியாவில் இருக்கும் நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது என்பது ஒரு புறம் இருக்க,  எஜமான் அமெரிக்காவின் துணை ஜனாதிபதி இந்தியாவில் இருக்கையில் மோடி சவுதி அரேபியா சென்றது ஏன்?  ஒரு வருடமாகியும் மணிப்பூர் செல்ல தயாராக இல்லாத போது சவுதியிலிருந்து பாதியில் வந்து காஷ்மீர் விரைந்த்தன் நோக்கம் என்ன?

 

ஏப்ரல் 19 அன்று காஷ்மீர் செல்ல வேண்டிய மோடி அந்த பயணத்தை ரத்து செய்தது ஏன்?

 

75 வயதானதும் பிரதமர் நாற்காலியை காலி செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ், மோடியிடம் சொன்ன நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது, 56 இஞ்சரால்தான் தேசத்தை காப்பாற்ற முடியும் என்ற சூழலை உருவாக்கி நாற்காலியில் ஒட்டிக் கொள்ளும் ஏற்பாடா? அல்லது இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்பது என்ற பெயரில் மோடியை கழட்டி விடும் முயற்சியா?

 

சம்பவம் செய்தது தீவிரவாதிகள்தான். ஆனால் அதன் பலனை அறுவடை செய்யப் போவது பாஜக தான். ஆட்சிக்காக எந்த அளவிற்கும் கீழிறங்கக் கூடியவர்கள் . . .அதனால்தான் கிடைத்த தகவல்களை அலட்சியம் செய்து வேடிக்கை பார்த்தார்களா என்று சந்தேகம் வருகிறது.

 

 

 

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete