Friday, February 13, 2026

பருத்தியில் சிக்கிக்கொண்ட மோடி மந்திரி

 


அமெரிக்காவுடன் இந்தியா ஏற்படுத்திக் கொண்ட அடிமாட்டு, அடிமை ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவின் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் கிடையாது என்று புரோக்கர் மந்திரி பியூஷ் கோயல் கதை விட்டுக் கொண்டிருந்தார். 

ஆனால் அவர் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து "இந்திய விவசாயிகளின் நலனை அமெரிக்க கட்டளைக்கு அடிபணிந்து விட்டுக் கொடுத்து விட்டோம்" என்று ஒப்புக் கொண்டு விட்டார்.

இந்திய ஆடைகளின் இறக்குமதிக்கு 18 % வரி விதிக்கும் அமெரிக்கா, வங்க தேச ஆடைகளின் இறக்குமதிக்கு 0 % வரி மட்டுமே விதித்துள்ளதே, அதனால் இந்திய ஆடைத் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவார்களே என்று கேள்வி கேட்டதற்கு 

"வங்க தேசம் போல நாமும் மூலப் பொருளை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்து அதனை பதப்படுத்தி, ஆடையாக்கி ஏற்றுமதி செய்யும் போது நமக்கும் 0 % வரிதான் விதிக்கப்படும். இதற்கான உடன்பாடு விரைவிலேயே எட்டப் படும்? 

என்று பியூஷ் கோயல் சொல்லியுள்ளார்.

ஆடைக்கான மூலப் பொருள் எது?

பருத்தி.

பியூஷ் கோயல் சொல்லியபடி அமெரிக்கப் பருத்தியை நாம் இறக்குமதி செய்யப் போகிறோம்.

அமெரிக்க பருத்தியை இறக்குமதி செய்வதால் இந்திய பருத்தி விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

இந்தியாவில் பருத்தி முக்கியமான பணப் பயிர்.

130 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் இந்தியாவில் பருத்தி பயிரிடப் படுகிறது. பத்து மாநிலங்களில் 60 லட்சம் விவசாயிகள், பருத்து விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

உள் நாட்டு ஆடை உற்பத்திக்கு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்தி பயன்படத்தப்படும் என்றால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பருத்தியின் நிலை என்ன? இந்திய பருத்தி விவசாயிகளின் நிலை என்ன ஆகும்?

ஆக இந்திய பருத்தி விவசாயிகளின் நலனை பின்னுத் தள்ளி அமெரிக்காவிலிருந்து பருத்தி வாங்கப் போகிறது மோடி அரசு. 

வங்கதேசத்தில் கூட  பருத்தி விளைகிறதே! அந்த விவசாயிகளுக்கு பாதிப்பு கிடையாதா என்று எவனாவது மூடச்சங்கி அனாமதேயமாக ஆங்கிலத்தில் பின்னூட்டம் இடுவான். அந்த அனாமதேயம் ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.

வங்க தேசத்தில் வெறும் 45000 ஹெக்டேர் நிலத்தில்தான் பருத்தி விளைகிறது.  அதிலும் 1,70, 000 விவசாயிகள்தான் ஈடுபடுகின்றனர். வங்க தேச ஆடைத்தொழில் எப்போதுமே இறக்குமதி செய்யப்படும் பருத்தியை நம்பித்தான் இருக்கிறது.

ரப்பர் மரங்களுக்கு ரணங்கள் புதிதல்ல

என்பது போல

மோடி அரசுக்கு துரோகங்கள் புதிதல்ல . . .

3 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. முட்டாள் சங்கி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறாயே அனாமதேய நாயே

      Delete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete