Thursday, August 14, 2025

மீண்டும் மீண்டும் தவறிழைக்கும் முதல்வர்

 


என் பெயர் ஸ்டாலின், நான் ஒரு பாதி கம்யூனிஸ்ட் என்று முதல்வர் சொல்லலாம். அந்த மீதி முதலாளித்துவவாதிதான் தொழிலாளர்கள் பிரச்சினையில் செயல்படுகிறார் போல . . .

முதலில் பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் சட்டம். கடுமையான போராட்டம் காரணமாக அந்த சட்டம் திரும்பப் பெறப்பட்டது.

அடுத்து சாம்சங் பிரச்சினையில் முதலாளியின் பிரதிநிதியாய் அரசின் அனைத்து இயந்திரங்களும் செயல்பட்டது. நீதிமன்ற உத்தரவு காரணமாக வேறு வழியின்றி சங்கம் பதிவு செய்யப்பட்டது.

இப்போது துப்புறவுப் பணியாளர்கள் பிரச்சினையில் தேவையற்ற ஈகோ காரணமாக தீர்வைக் காணாமல் போலீஸ் மூலம் அடக்குமுறையை ஏவி விட்டு உழைக்கும் மக்களின் கோபத்தை சம்பாதித்துள்ளார் முதல்வர். ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால் அரசு ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

துப்புறவுப் பணியாளர்களுக்கு அதை செய்தோம், இதை செய்தோம் என்றெல்லாம் பட்டியல் போடுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேலையாகும்.

மீண்டும் மீண்டும் செய்யும் தவறுகள் ஆட்சிக்கு மீண்டும் வருவதற்கு அவரே போடும் முட்டுக்கட்டைகள் என்று முதல்வர் எப்போது உணரப் போகிறாரோ?

திமுக தோல்வியைத் தவிர்க்க வேண்டுமென்றால் மைத்ரேயன் போன்ற ஆர்.எஸ்.எஸ் ஆட்களை சேர்ப்பதை தவிர்ப்பது மட்டுமல்ல, சேகர்பாபுவை தள்ளி வைப்பதும் மிக முக்கியம். 

Wednesday, August 13, 2025

மனிதன் சினிமா போல நிஜத்திலும்

 


மனிதன் திரைப்படத்தில் "இறந்து போனதாக போலீஸால் கணக்கு காண்பிக்கப்பட்ட ஒருவர் க்ளைமாக்ஸில் வந்து சாட்சி சொல்லுவதாக காட்சி இறக்கும்.

பீகாரில் மரணமடைந்து விட்டார்கள்     என்று சொல்லி தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட இரு வாக்காளர்களை டெல்லி முன்னாள் துணை முதல்வர் யோகேந்திர யாதவ் உச்ச நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளார்.

திரைப்படத்தை மிஞ்சும் இக்காட்சி தேர்தல் ஆணைய, மோடி கூட்டணியின் அயோக்கியத்தனத்திகுச் சான்று 


Saturday, August 9, 2025

இன்னும் நாலு ஜட்ஜுங்கள சேர்த்துக்குங்கய்யா . . .

 


இப்படி ஒரு போர்ட் விரைவில் எழுதப்பட்டால் அதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை. 

ஆமாம். நம்ம ஜட்ஜய்யா ஒருத்தரு இந்த வேலையைத்தான் நேத்து செஞ்சாரு. 


ஐய்யா, தலைமை நீதிபதி ஐய்யாங்களா, தமிழ்நாட்டில இந்த மாதிரி உதிரி கட்சிங்க நெறய இருக்கு! அதுக்குள்ள சண்டைங்களும் நெறய இருக்கு, அதனால டெல்லில சொல்லி கூட இன்னொரு நாலு ஜட்ஜுங்கள வேலைக்கு சேத்துக்குங்க. அவங்க பஞ்சாயத்துக்களை பாத்துக்கட்டும். இல்லாட்டி கேஸ் கட்டுங்க தேங்கிப் போய் கோர்ட்டுல இடம் பத்தாம போயிடப் போகுது. 

Thursday, August 7, 2025

இனிமே பத்ரி சேஷாத்ரி பேரு ????

 


கிழக்கு பதிப்பக சங்கி பத்ரி சேஷாத்ரிக்கு எதுக்கு இப்போ பாயசம் என்ற கேள்வி வரலாம்.

அரசுத் திட்டங்களில் முதல்வர் பெயர் இருக்கக்கூடாது என்று சென்னை உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்த சமயத்தில் 01.08.2025 அன்று தெனாவெட்டாக " பாபர் மசூதியை இடிக்கும் போது அமெரிக்காவில் இருந்தேன். மனதுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது" என்று சொல்லியிருந்த அந்த சங்கி ஒரு பதிவு போட்டு "எல்லாம் வல்ல" வில்சன் உச்ச நீதிமன்றம் போவாரா என்று வேறு கேட்டிருந்தார். 

நேற்று தீர்ப்பு வந்ததும் அப்படியே பல்டி அடித்து வில்சனுக்கு பாராட்டு வேறு சொல்கிறார்.


இவருக்கு பல்டி சேஷாத்ரி என்ற பெயர் கன கச்சிதமாக பொருந்துகிறது அல்லவா!

Wednesday, August 6, 2025

இதுதான் நெசம் முட்டாள் சங்கிகளே

 

இந்த கார்ட்டூனை நினைவு படுத்த வேண்டிய அவசியத்தை முட்டாள் சங்கிகள் உருவாக்கி விட்டார்கள்.

ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தியது நான்தான் என்று  27 முறை ட்ரம்ப் சொல்லிவிட்டார். இந்தியப் பொருளாதாரத்தை செத்துப்போன பொருளாதாரம் என்று சொல்லி ஒரு வாரமாகிவிட்டது. ரஷ்யாவோடு எந்த வியாபாரமும் செய்யக்கூடாது என்று மிரட்டி மூன்று நாளாகி விட்டது. ஆனால் மோடியோ வாய் திறக்கவே இல்லை.

இந்த சூழலில் இப்படி ஒரு படத்தை சங்கிகள் பரப்புகிறார்கள்.


அதனால்தான் சொல்ல வேண்டியுள்ளது. அடேய் முட்டாள் சங்கிகளே, உங்க மோடி பில்டிங், பேஸ்மெண்ட் எல்லாம் பலவீனமாக இருக்கிற. மேல் மண்டையில ஒன்னும் இல்லாத  வெறும் டம்மி பீஸ்.  ட்ரம்பைப் பார்த்து நடுங்குபவர் என்பதுதான் யதார்த்தம்.

அதனால் இந்த பில்ட் அப் வேலையை எல்லாம் நிறுத்திக் கொள்ளுங்கள். 

Tuesday, August 5, 2025

நன்றி சொல்லும் நேரம் இது . . .

 



பணி ஓய்வு நாள் வந்து அதன் பின்னும் நான்கு நாட்கள் கடந்து விட்டது. 31.007.2025 அன்று பணி ஓய்வு. அதன் பின்பு 02.08.2025, 03.08.2025 ஆகிய நாட்கள் கோட்டச்சங்கத்தின் 38 வது பொது மாநாடு. கொஞ்சம் ஓய்விற்குப் பிறகு இன்றுதான் வலைப்பக்கத்திற்கு வர அவகாசம் கிடைத்தது. 

வேறு எதுவும் இங்கே எழுதப் போவதில்லை.

நன்றி நவில்வது மட்டுமே நோக்கம்.

வாட்ஸப் மூலமாக,
முகநூல் மூலமாக,
தொலை பேசி மூலமாக
வாழ்த்து தெரிவித்த
நேரடியாக இருக்கைக்கும் வீட்டிற்கும்
பின்பு அலுவலகத்தில் நடந்த,
சங்கம் சார்பாக மண்டபத்தில் நடந்த
பணி நிறைவு பாராட்டு விழாக்களில் கலந்து கொண்ட, பங்கேற்று வாழ்த்திய
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைவர்கள், தோழர்கள்
எல்.ஐ.சி அதிகாரிகள், ஊழியர்கள்,
தோழமைச்சங்கத் தோழர்கள், பொறுப்பாளர்கள்,

நண்பர்கள், உறவினர்கள்,

பணி நிறைவு பாராட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்திய வேலூர் கோட்டச்சங்கப் பொறுப்பாளர்கள், அவர்களை வழிநடத்திய இளம் தலைவர்கள் தோழர் எஸ்.பழனிராஜ், பொதுச்செயலாளர், தோழர் பி.எஸ்.பாலாஜி, தலைவர் ஆகியோருக்கு வார்த்தைகளால் எப்படி நன்றி தெரிவிப்பேன்! இனி வரும் காலமும் நான் எப்போதும் போல உங்களுடன் இணைந்தே செயல்படுவேன் என்பதைத் தவிர!!

அனைத்தையும் தாண்டி  திருமணமான நாள் முதற்கொண்டு இன்றைய நாள் வரை என் பயணத்தில் துணை நின்று மன ரீதியாக, பொருளாதார ரீதியாக எனக்கு கை கொடுத்தவர். என்னுடன் நேரடியாக மோத முடியாத கோழைகளால் மன வலியும் காயங்களும் பெற்றவர்.  அவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டு எனக்கு பக்க பலமாக இருந்த அவரின்றி நான் இல்லை. எங்கள் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்து தாயுமானவனாக திகழும் என் மகன். இவர்கள் இருவருக்கும் எந்நாளும் நான் என்ன நன்றி சொல்ல முடியும்! என் அன்பை பகிர்ந்து கொள்வதைத் தவிர!

எல்.ஐ.சி பணியிலிருந்துதான் ஓய்வு. மக்களுக்கான பொது வாழ்க்கையில் இருந்து அல்ல என்று பணி நிறைவு பாராடு விழாவில் வாழ்த்திய பல தலைவர்கள், தோழர்கள் கூறினார்கள். அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வண்ணம் செயல்படுவதுதான் அவர்களுக்கு நான் செலுத்தும் உண்மையான நன்றியாக இருக்கும். 

என அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி சொல்லி நிறைவு செய்கிறேன்.