கடந்த ஞாயிறு சென்னைக்கு புத்தகத் திருவிழாவிற்கென்றே பிரத்யேகமான பயணம்.
இடையில் போட்டோ பிரியர்களுக்கெனவே புதிதாக உருவாக்கப்பட்டுள்ள க்ளிக் ஆர்ட்
மியூசியத்தில் சின்ன இடைவேளை. அது பற்றி பிறகு எழுதுகிறேன். 
புத்தகத் திருவிழாவின் இடம் மாறியுள்ளது, ஒரு விதத்தில் எனக்கு வசதியாக
இருந்தது. நுழைவாயிலில் இருந்து கண்காட்சி அரங்கிற்கு உடனே செல்ல முடிந்தது. நீண்ட
தூரம் நடக்கும் சிரமம் இல்லாமல் இருந்தது என்னைப் போல காலில் பிரச்சினை
உள்ளவர்களுக்கு ஒரு வரமே.
வழக்கம் போலவே சில அரங்குகள் பரபரப்பாகவும் பல அரங்குகள் மந்தமாகவும்
இருந்தது. இந்த முறை அவசியம் வாங்க வேண்டிய நூல்கள் என மனதில் ஒரு பட்டியல்
இருந்ததால் பெரும்பாலானவற்றை சரியாக வாங்க முடிந்தது. அப்படியும் நான்கு நூல்கள்
தவறி விட்டது. 
ஏற்கனவே முடிவு செய்த நூல்கள், நன்றாக இருக்கும் என்று நம்பி வாங்கிய
நூல்கள் என்று இந்த முறை வாங்கியது கொஞ்சம் அதிகம்தான். பட்ஜெட்டை விட அதிகமாகவே
போய் விட்டது. வாங்கிய மூன்று நூல்களின் ஆசிரியர்கள், தோழர் ச.சுப்பாராவ், தோழர்
செ.சண்முகசுந்தரம், தோழர் காஸ்யபன் ஆகியோர் எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்
சங்கத்தின் தோழர்கள் என்பது ஒரு தனிப்பெருமை. இதிலே தோழர் காஸ்யபன் மட்டும்
எல்.ஐ.சி பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். 
எனக்கு கால்வலியும் என்னோடு இந்த வருடம் உடன் வந்து வாங்கிய நூல்களை
சுமந்து கொண்டிருந்த மகனுக்கு கைவலியும் ஒரே நேரத்தில் வர, முடித்துக் கொள்வோம் என
முடிவெடுத்து வெளியே வந்தோம். “காலச்சுவடு” அரங்கம் அப்போதுதான் கண்ணில் பட்டது.
போய்த்தான் பார்ப்போமே என்று ஒரு சபலம் வந்தாலும் எடுத்த முடிவில் உறுதியாக வெளியே
வந்து விட்டேன்.
புத்தகங்களை வாங்கும் போது ஏற்படாத மலைப்பு, என்னென்ன நூல்கள் வாங்கினோம்
என்பதை பதிவு செய்த போதுதான் வந்தது. கொஞ்சம் ஓவராத்தான் போய்ட்டோம் போல என்று
தோன்றியது. கடந்தாண்டு முழுதும் படித்த நூல்களின் எண்ணிக்கையும் ஞாயிறு ஒரு நாள்
அன்று வாங்கிய நூல்களின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட சமமாக உள்ளது.
அத்தனையையும் எப்போது படித்து முடிப்பது என்ற கேள்வி வந்தாலும் முடியும்
என்ற நம்பிக்கையும் இருக்கிறது. கடந்த புதன் அன்று மேற்கொண்ட நீண்ட பயணத்தில் ஒரு
பெரிய நாவலையும் இன்னும் இரண்டு நூல்களையும் படித்து முடித்தேன். இன்று எதிர்பாராமல் வாணியம்பாடி செல்ல நேரிட்டது. இந்தப் பயணத்திலும் இரு சிறு நூல்களை படிக்க முடிந்தது. இன்று காலையிலிருந்து மின்சாரம் கிடையாது. இன்வெர்ட்டர் பேட்டரியும் தீர்ந்து போய் விட்டதால் ஆறு மணி வரை படிப்பது மட்டுமே ஒரே வழியாக இருந்தது. இந்த மாதத்தில் இதுவரை மூன்று பயணங்கள் திட்டமிடப்பட்டது. இன்னும் ஏராளமான
பயணங்கள் காத்திருக்கிறது. ஆகவே அனைத்தையும் படித்து முடித்திட முடியும் என்ற நம்பிக்கை அபரிமிதமாகவே இருக்கிறது. 
புத்தகப் பட்டியல் கீழே இருக்கிறது. மற்ற நூல்கள் படிப்பதற்கென்றால் கடைசி
நான்கு நூல்கள், படித்து முயற்சிப்பதற்கு. படித்தவற்றுள் சிறப்பாக உள்ளவை
பற்றியும் நிச்சயமாக பகிர்ந்து கொள்வேன். அனேகமாக நாளையே தொடங்கும். 
| 
எண் | 
பெயர் | 
ஆசிரியர் | 
பக்கம் | 
விலை | 
| 
1 | 
லைபாக்லை ஆண்ட்டி | 
ச.சுப்பாராவ் | 
128 | 
90 | 
| 
2 | 
சிறையில் ஒரு குடும்பம் | 
ஐ.மாயாண்டி பாரதி | 
16 | 
10 | 
| 
3 | 
தொழிற்சங்கம் பற்றி 
அம்பேத்கர் | 
வெ.கோவிந்தசாமி |  |  | 
| 
46 | 
30 | |||
| 
4 | 
அரசியல் பழகு | 
சமஸ் | 
48 | 
20 | 
| 
5 | 
ஒரு சாப்பாட்டு ராமனின் 
நினைவலைகள் | 
ச.தமிழ்ச்செல்வன் |  |  | 
| 
112 | 
80 | |||
| 
6 | 
கோவை கலவரத்தில் 
எனது சாட்சியம் | 
ஏ.வி.அப்துல் நாசர் |  |  | 
| 
128 | 
100 | |||
| 
7 | 
செய்தியின் அரசியல் | 
ஆர்.விஜயசங்கர் | 
16 | 
10 | 
| 
8 | 
புதுமைப்பித்தன் கதைகள் | 
புதுமைப்பித்தன் | 
144 | 
100 | 
| 
9 | 
பாரதி நினைவுகள் | 
யதுகிரி அம்மாள் | 
112 | 
70 | 
| 
10 | 
எழுத்துக்களை எரித்தல் 
கருத்துக்களை ஒடுக்குதல் | 
எஸ்.வி.ராஜதுரை |  |  | 
| 
394 | 
300 | |||
| 
11 | 
மஞ்சள்
  பூ மர்மம் | 
 காமிக்ஸ் | 
130 | 
50 | 
| 
12 | 
தமிழ்
  ஒளி | 
செ.து.சஞ்சீவி | 
128 | 
50 | 
| 
13 | 
வெள்ளாடுகளும் சில 
கொடியாடுகளும் | 
சோலை சுந்தரப் பெருமாள் |  |  | 
| 
128 | 
70 | |||
| 
14 | 
நலம், நலமறிய ஆவல் | 
எஸ்.வி.வேணுகோபால் | 
32 | 
20 | 
| 
15 | 
மாநிற பட்டாம்பூச்சிகள் | 
கார்த்திகை பாண்டியன் | 
144 | 
140 | 
| 
16 | 
செகாவ் வாழ்கிறார் | 
எஸ்.ராமகிருஷ்ணன் | 
164 | 
150 | 
| 
17 | 
கூண்டுப் பறவையின் 
தனித்த பாடல் | 
கவிதா முரளிதரன் |  |  | 
| 
104 | 
80 | |||
| 
18 | 
ஒற்றை வைக்கோல் 
புரட்சி | 
மசானபு ஃபுகோகா |  |  | 
| 
158 | 
130 | |||
| 
19 | 
பாம்புத் தீவு | 
 காமிக்ஸ் | 
130 | 
50 | 
| 
20 | 
அயோக்கியர்களும் 
முட்டாள்களும் | 
ஞானி |  |  | 
| 
96 | 
70 | |||
| 
21 | 
போராட்டமே
  வாழ்க்கை | 
மயிலம்மா | 
92 | 
80 | 
| 
22 | 
மூன்றாம்
  பிறை | 
மம்முட்டி | 
128 | 
80 | 
| 
23 | 
நட்சத்திரங்கள் ஒளிந்து 
கொள்ளும் கருவறை | 
பவா. செல்லதுரை |  |  | 
| 
112 | 
100 | |||
| 
24 | 
போயிட்டு வாங்க சார் | 
ச.மாடசாமி | 
63 | 
40 | 
| 
25 | 
ஆரியக் கூத்து | 
அ.மார்க்ஸ் | 
115 | 
70 | 
| 
26 | 
அவனது நினைவுகள் | 
தகழி சிவசங்க்ரப்பிள்ளை | 
125 | 
100 | 
| 
27 | 
முருகன் விநாயகன் | 
கௌதம சித்தார்த்தன் | 
44 | 
40 | 
| 
28 | 
வலம் | 
விநாயக முருகன் | 
335 | 
310 | 
| 
29 | 
ஒரு
  மனிதன், ஒரு உலகம் | 
ஜெயகாந்தன் | 
256 | 
170 | 
| 
30 | 
மதினிமார்கள்
  கதை | 
கோணங்கி | 
128 | 
80 | 
| 
31 | 
காலவேக மதயானை | 
குட்டி ரேவதி | 
126 | 
100 | 
| 
32 | 
ஊமையன் கோட்டை | 
கண்ணதாசன் | 
168 | 
80 | 
| 
33 | 
கடைசிப் பக்கம் | 
கண்ணதாசன் | 
124 | 
70 | 
| 
34 | 
சிவகெங்கைச் சீமை | 
கண்ணதாசன் | 
152 | 
80 | 
| 
35 | 
ஞாபகம் வருதே | 
சித்ராலயா கோபு | 
192 | 
150 | 
| 
36 | 
கந்தர்வன் கவிதைகள் | 
கந்தர்வன் | 
232 | 
130 | 
| 
37 | 
நிறங்களின் நிஜம் | 
செ.சண்முகசுந்தரம் | 
232 | 
210 | 
| 
38 | 
சிறைப்பட்ட கற்பனை | 
வரவர
  ராவ் | 
192 | 
150 | 
| 
39 | 
உறுபசி | 
எஸ்.ராமகிருஷ்ணன் | 
135 | 
115 | 
| 
40 | 
ஊழியின் தினங்கள் | 
மனுஷ்ய புத்திரன் | 
104 | 
90 | 
| 
41 | 
இந்தியா ஒரு வல்லரசு 
ஒரு வேடிக்கையான கனவு | 
அருந்த்தி ராய் |  |  | 
| 
64 | 
50 | |||
| 
42 | 
வீழ்ச்சி | 
சுகுமாரன் | 
288 | 
210 | 
| 
43 | 
நீலக்குறிப்பேடு | 
இ.கலாகேவிச் | 
144 | 
90 | 
| 
44 | 
காப்கா எழுதாத கடிதம் | 
எஸ்.ராமகிருஷ்ணன் | 
208 | 
200 | 
| 
45 | 
டல்ஹௌசியின் 
ஆரஞ்சு இரவு | 
சம்யுக்தா மாயா | 
78 | 
75 | 
| 
46 | 
சீமானின் திருமணம் | 
ஜவான் துர்கதேவ் | 
95 | 
45 | 
| 
47 | 
களப்பிரர் ஆட்சியில் 
தமிழ்கம் | 
மயிலை
  சீனி வெங்கடசாமி | 
162 | 
100 | 
| 
48 | 
முதலாளியம் 
ஒரு
  பேய்க் கதை | 
அருந்த்தி ராய் | 
52 | 
30 | 
| 
49 | 
நாமசூத்திர்ர்கள் இயக்கம் | 
சேகர் பந்தோபத்யாயா | 
64 | 
50 | 
| 
50 | 
"இந்து" தேசியம் | 
தொ.பரமசிவன் | 
144 | 
130 | 
| 
51 | 
கிருஷ்ணா 
நதிக்கரையிலிருந்து | 
காஸ்யபன் | 
98 | 
45 | 
| 
52 | 
சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள் | 
கவின்
  மலர் | 
167 | 
150 | 
| 
53 | 
சூரியனுக்கு அருகில் ஒரு வீடு | 
மனுஷ்ய புத்திரன் | 
128 | 
100 | 
| 
54 | 
பேசாத பேச்செல்லாம் | 
ப்ரியா தம்பி | 
304 | 
175 | 
| 
55 | 
புள்ளிகள் கோடுகள் கோலங்கள் | 
பாரதி
  மணி | 
560 | 
550 | 
| 
56 | 
கார
  வகைகள் | 
ரேவதி சண்முகம் | 
78 | 
60 | 
| 
57 | 
மாவட்டச் சமையல் | 
ரேவதி சண்முகம் | 
88 | 
60 | 
| 
58 | 
டிபன் வகைகள் | 
ரேவதி சண்முகம் | 
80 | 
60 | 
| 
59 | 
சைவ
  சமையல் | 
ரேவதி சண்முகம் | 
152 | 
140 | 

அம்மாடியோவ்... அருமை http://ethilumpudhumai.blogspot.in/
ReplyDeleteஆகா
ReplyDeleteபடிக்கப் படிக்க மனம் மகிழ்கிறது ஐயா
நன்றி நண்பரே
DeleteGreat..books shapes you more
ReplyDeleteYes. Also Yourself
Deleteதங்களின் இப்பதிவைப் பார்த்ததும் நூற்கண்காட்சிக்குச் செல்லும் ஆசையும், நூல்களை வாங்கிப் படிக்கும் ஆசையும் கண்டிப்பாக வந்துவிடும் போலுள்ளது. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஉடனே செல்லுங்கள். நாளையே இப்படம் கடைசி
Deleteஅட! இவ்வளவு வாங்கி குவித்து விட்டீர்களா? பாராட்டுக்கள்!
ReplyDeleteநன்றி நண்பரே
Delete:) உங்கபாடு ஒரே கொண்டாட்டம் தான்.
ReplyDeleteஆமாம். நிஜமாகவே நண்பரே. கம்ப்யூட்டர் முன் அமரும் நேரமும் கூட குறைந்துள்ளது
DeleteNeed Publishers name also
ReplyDelete